Advertisment

தமிழகத்திற்கு ஜூலை மாதத்திற்கான 31.24 டிஎம்சி நீரை திறக்க வேண்டும் : கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு

காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Cauvery

தமிழகத்துக்கு ஜூலை மாதத்திற்கான 31.24 டி.எம்.சி நீரை திறக்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு, காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம், அதன் தலைவர் மசூத் உசேன் தலைமையில் இன்று டெல்லியில் நடந்தது. இந்த கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் பொதுப்பணித்துறை முதன்மை செயலர் எஸ்.கே.பிரபாகர், கர்நாடகம் சார்பில் அம்மாநில நீர்வளத்துறை செயலர் ராகேஷ்சிங், கேரளா தரப்பில் அம்மாநில நீர்வளத்துறை செயலர் டிங்கு பிஸ்வால், புதுச்சேரி சார்பில் பொதுப்பணித்துறை ஆணையர் அன்பரசு ஆகியோர் பங்கேற்கின்றனர். கூட்டம் சுமார் 4 மணி நேரம் நடந்தது.

கூட்டம் முடிந்ததும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் மசூத் உசேன் நிருபர்களிடம் பேசும் போது, ‘‘தமிழகத்திற்கு ஜூலை மாதத்திற்கான 31.24 டிஎம்சி நீரை திறந்துவிட வேண்டும் என கர்நாடக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆணையத்தின் உத்தரவுகளை அனைத்து மாநில அரசுகளும் பின்பற்றும் என நம்புகிறேன்.’’ என்று கூறினார்.

இதனை வரவேற்று சட்டசபையில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ‘‘காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. ஓவ்வொரு மாதமும் எவ்வளவு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்ற உத்தரவையும் அவர்கள் பிறப்பித்துள்ளார்கள்’’ என்றும் அவர் தெரிவித்தார்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment