ரயிலில் பயணம் செய்யும்போது வழங்கப்படும் உணவுகளின் சேவைக்கட்டணம் அதிகரித்துள்ளது. நீங்கள் வாங்கும் எல்லா உணவுகளுக்கும் ரூ.50 சேவைக்கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளது.
இந்தியன் ரயில்வே சமீபத்தில் ரயிலில் பணிக்கும்போது, பயணிகள் எடுத்து செல்லும் உடமைகளுக்கு தனிக் கட்டணம் வசூலுக்கும் என்ற அறிவிப்பு வெளியானது. ரயில்வேதுறை குறிப்பிட்ட அளவை விட அதிக உடமைகள் எடுத்து செல்வோர் அதற்கு தனியாக கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டது. இதற்கு எதிர்ப்புகளும் நிலவியது.
இந்நிலையில் ரயிலில் விற்பனை செய்யப்படும் உணவுகளின் சேவைக் கட்டணத்தை ரயில்வே அதிகரித்துள்ளது. இந்நிலையில் காலை, மதியம் மற்றும் இரவு உணவுகளின் விலை அதிகரிக்கும். முன்பு ரூ. 105, 185, 90 ஆக இருந்த விலை தற்போது ரூ. 55, 235 மற்றும் 140 வரை அதிகரிக்கும். இது சாதாரண மக்களை பாதிக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் டீ, காப்பியின் விலை சற்று குறைய வாய்ப்பிருக்கிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது.