Advertisment

தலித் நிலங்களை, அயோத்தி அறக்கட்டளைக்கு மாற்றியது சட்டவிரோதமானது: நீதிமன்றம்!

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், இந்தியன் எக்ஸ்பிரஸ் அறிக்கையை வெளியிட்ட நாளான டிசம்பர் 22, 2021 அன்று நில பேரங்கள் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

author-image
WebDesk
New Update
ayodhya-land

Transfer of Dalit lands to Ayodhya Trust is illegal orders Revenue Court

அயோத்தியில் உள்ள உதவி பதிவு அதிகாரி நீதிமன்றம், கிட்டத்தட்ட 52,000 சதுர மீட்டர், தலித் நிலத்தை ஆகஸ்ட் 22, 1996 அன்று மகரிஷி ராமாயண் வித்யாபீத் அறக்கட்டளைக்கு (எம்ஆர்விடி) மாற்றிய அரசாங்க உத்தரவு "சட்டவிரோதமானது" எனக் கண்டறிந்த பின்னர் செல்லாது என்று அறிவித்தது. அனைத்துச் தடைகளிலிருந்தும் விடுவிக்கப்பட்ட நிலத்தை இப்போது நீதிமன்றம் மாநில அரசிடம் ஒப்படைத்துள்ளது.

Advertisment

எவ்வாறாயினும், அதில் மோசடி எதுவும் இல்லை என்பதால், அறக்கட்டளைக்கு எதிராக எந்த நடவடிக்கையும் பரிந்துரைக்கவில்லை.

டிசம்பர் 22, 2021க்குப் பிறகு, இந்தியன் எக்ஸ்பிரஸ் நடத்திய விசாரணைக்கு ஐந்து நாட்களுக்குப் பிறகு ARO நீதிமன்றத் தீர்ப்பு வந்தது.

அந்த விசாரணையில், மாவட்டத்தில் ராமர் கோவில் கட்ட அனுமதி வழங்கப்பட்ட சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு பிறகு (நவம்பர் 9, 2019), உள்ளூர் எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகளின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளின் உறவினர்கள்' ரியல் எஸ்டேட் சந்தையின் வேகத்தைப் பயன்படுத்தி அயோத்தியில் நிலம் வாங்கியது தெரியவந்தது.

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், இந்தியன் எக்ஸ்பிரஸ் அறிக்கையை வெளியிட்ட நாளான டிசம்பர் 22, 2021 அன்று நில பேரங்கள் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். இதையடுத்து விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நில பேரங்களின் பரபரப்பில் ஒரு தரப்பினர், பரிவர்த்தனைகள் உரிமை மற்றும் வட்டி முரண்பாடு பற்றிய கேள்விகளை எழுப்பின.

அதில் நிலத்தை வாங்கிய சிலர், தலித் குடியிருப்பாளர்களிடமிருந்து நில பரிமாற்றத்தில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் விற்பனையாளர் - மகரிஷி ராமாயண் வித்யாபீட அறக்கட்டளை - விசாரணையில் ஈடுபட்டுள்ள இரண்டு அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள்.

தலித் மக்களுக்குச் சொந்தமான விவசாய நிலத்தை, தலித் அல்லாதவர் கையகப்படுத்துவதைத் தடை செய்த நிலச் சட்டங்களை முறியடிக்க, 1992 இல் எம்ஆர்விடி (MRVT) சுமார் ஒரு டஜன் தலித் கிராம மக்களிடம் இருந்து, பர்ஹாதா மஞ்சா கிராமத்தில் நிலங்களை வாங்குவதற்கு, ஒரு வழித்தடமாக அறக்கட்டளையில் பணிபுரிந்த ரோங்காய் என்ற தலித் நபரைப் பயன்படுத்தியது.

உதவி பதிவு அதிகாரியான பான் சிங்’ தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தொடர்பு கொண்டபோது, ​​ “சர்வே-நைப் தாசில்தாரின் ஆகஸ்ட் 1996 ஆணை சட்டவிரோதமானது என்பதால் அதை ரத்து செய்துவிட்டேன். மேல் நடவடிக்கைக்காக துணை-பிரிவு மாஜிஸ்திரேட்க்கு (SDM) அனுப்பியுள்ளேன். அப்போதைய சர்வே-நைப்-தாசில்தார் (கிருஷ்ண குமார் சிங், இப்போது ஓய்வு பெற்றவர்) மீது நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைக்கிறேன்.

எவ்வாறாயினும், வேறு எவர் மீதும் எந்த நடவடிக்கையும் தேவையில்லை என்று பான் சிங் கூறினார். "இந்த விஷயத்தில் நான் எந்த போலியையும் கண்டுபிடிக்கவில்லை என்பதால், எம்ஆர்விடி மற்றும் பிறருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் பரிந்துரைக்கப்படவில்லை," என்று அவர் கூறினார்.

டிசம்பர் 27, 2021 இன் ARO உத்தரவு, ஜமீன்தாரி ஒழிப்புச் சட்டம், 1950 இன் பிரிவுகள் 166/167 இன் கீழ் நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைக்கிறது. எம்ஆர்விடி-க்கு நிலத்தை மாற்றுவதைப் பிரிவு 166 செல்லுபடியாக்கும் அதே வேளையில், பிரிவு 167 குறிப்பிட்ட நிலத்தை அனைத்துச் சுமைகளிலிருந்தும் விடுவிக்கிறது

இதுகுறித்து, ​​ துணை-பிரிவு நீதிமன்றம் (அயோத்தி) பிரசாந்த் குமாருடன், இந்தியன் எக்ஸ்பிரஸ் தொடர்பு கொண்ட போது அவர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.

செப்டம்பர் 2019 இல் எம்ஆர்விடி தலித் நிலங்களை விற்கத் தொடங்கியபோது, ​​நிலப் பரிமாற்றம் சட்டவிரோதமானது என்பது மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு வந்தது. எம்ஆர்விடி-க்கு நிலத்தை விற்ற தலித் ஒருவர், தனது நிலம் "சட்டவிரோதமாக மாற்றப்பட்டதாக" உத்தரப் பிரதேச வருவாய் வாரியத்திடம் புகார் செய்தார். அவரது புகாரின் பேரில், இடமாற்றம் குறித்து விசாரிக்க கூடுதல் கமிஷனர் ஷிவ்பூஜன் மற்றும் கூடுதல் மாவட்ட நீதிபதி கோரேலால் சுக்லா ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.

அக்டோபர் 1, 2020 அன்று, அப்போதைய மாவட்ட மாஜிஸ்திரேட் அனுஜ் குமார் ஜா, "பதிவு செய்யப்படாத நன்கொடைப் பத்திரம் மூலம் (பட்டியலிடப்பட்ட சாதி நபர்களின்) நிலத்தை சட்டவிரோதமாக மாற்றியதற்காக" எம்ஆர்விடி மற்றும் சில அரசு அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கும் இந்தக் குழுவின் அறிக்கைக்கு ஒப்புதல் அளித்ததாக பதிவுகள் காட்டுகின்றன.

இதை அயோத்தி மண்டல ஆணையர் எம்.பி. அகர்வால் மார்ச் 18, 2021 அன்று அங்கீகரித்தார், மேலும் இறுதியாக ஆகஸ்ட் 6, 2021 அன்று, ARO நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 22, 1996 உத்தரவின் "திருத்தம்" மற்றும் "கேள்விக்குரிய நிலத்தை மாநில அரசிடம் திரும்ப ஒப்படைக்க" ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment