Advertisment

ஜெய் ஸ்ரீராம் கோஷம் போட்டபடி வந்து தாக்குதல்: காங்கிரஸ்- கம்யூனிஸ்ட் குழுவினர் புகார்

திரிபுராவில் இடதுசாரி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் அடங்கிய எதிர்க்கட்சி குழு மீது ஜெய் ஸ்ரீ ராம்' என்று கோஷமிட்ட மர்ம குழு தாக்கியுள்ளது.

author-image
WebDesk
New Update
Tripura violence: Left-Congress team ‘attacked’ by men shouting ‘Jai Shri Ram’ Tamil News

MPs Abdul Khalek, Ranjita Ranjan, AICC general secretary Dr. Ajay Kumar, AICC secretary Szarita Laitphlang and local Left and Congress leaders after returning from Bishalgarh where a Parliamentary team came under attack from goons allegedly associated with BJP

Post-poll violence in Tripura, Left-Congress team ‘attacked’ by men shouting ‘Jai Shri Ram’ Tamil News: திரிபுராவின் அகர்தலாவில் இருந்து 30 கிமீ தொலைவில் உள்ள செபஹிஜாலா மாவட்டத்தில் உள்ள நெஹல்சந்திரநகரில் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட இடதுசாரி மற்றும் காங்கிரஸ் தலைவர்களின் குழுவை ஒரு குழு தாக்கியுள்ளது. அவர்களைத் தாக்கியபோது, ​​"ஜெய் ஸ்ரீ ராம்" என்று சத்தமிட்டதாகவும் கூறப்படுகிறது. அவர்கள் குறைந்தது மூன்று கார்களை சேதப்படுத்தியதாகவும், இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

அந்த குழு தாக்கிய போது அங்கு இருந்த பாதுகாப்புப் பிரிவினர் யாரும் தலையிடவில்லை என்று ஒரு எம்.பி குற்றம் சாட்டியுள்ளார். இச்சம்பவத்திற்குப் பிறகு, இரண்டு நாள் பயணமாக முன்னதாக திரிபுரா வந்த ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு சனிக்கிழமை திட்டமிடப்பட்ட "வெளிப்புற நிகழ்ச்சிகளை நிறுத்த வேண்டிய கட்டாயம்" ஏற்பட்டதாக சிபிஐ (எம்) CPI(M) மாநிலச் செயலாளர் ஜிதேந்திர சவுத்ரி அறிவித்துள்ளார்.

இடதுசாரி மற்றும் காங்கிரஸ் தலைவர்களின் குழு நேஹல்சந்திராநகருக்கு "திட்டமிடப்படாமல்" சென்றதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். இது தொடர்பாக பேசியுள்ள உதவி ஆய்வாளர் ஜோதிஷ்மன் தாஸ் சவுத்ரி, குழுவுடன் வந்த காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.

publive-image

 Damaged residence of Jamuna Das at Kalikapur in West Tripura

மேலும், “உடன் வந்த காவல்துறை துணைக் குழு விரைவாகப் பதிலளித்து தூதுக்குழுவை பாதுகாப்பாக மீட்டது. மூத்த அதிகாரிகள் சம்பவ இடத்தில் உள்ளனர். யாருக்கும் காயம் ஏற்படவில்லை. 2-3 வாகனங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மற்ற குற்றவாளிகளை அடையாளம் காணவும் கைது செய்யவும் சோதனைகள் நடந்து வருகின்றன." என்றும் அவர் கூறியுள்ளார்.

அசாம், மேற்கு வங்கம், கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த இடதுசாரி முன்னணி மற்றும் காங்கிரஸ் எம்.பி.க்கள் குழு, மார்ச் 2-ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் இருந்து நடந்ததாகக் கூறப்படும் வன்முறையின் அளவை மதிப்பிடுவதற்காக மாநிலத்திற்கு வந்தனர். எம்.பி.க்கள் மூன்று அணிகளாகப் பிரிந்து, பகலில் செபஹிஜாலா, கோமதி, மேற்கு திரிபுரா, கோவாய் மற்றும் தலாய் ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்றனர்.

சிபிஐஎம் ராஜ்யசபா எம்பி எலாராம் கரீம் மற்றும் காங்கிரஸ் லோக்சபா எம்பி அப்துல் கலேக் ஆகியோர் செபாஹிஜாலாவில் உள்ள பிஷல்கர் மற்றும் மேற்கு திரிபுராவின் சில பகுதிகளுக்குச் சென்ற குழுவில் இருந்தனர். மற்றும் பிகாஷ் ரஞ்சன் பட்டாச்சார்யா மேற்கு திரிபுராவில் உள்ள கல்கலியா கிராமத்திற்குச் சென்றார். சிபிஐ(எம்) லோக்சபா எம்பி பி ஆர் நடராஜன் மற்றும் பினோய் பிஸ்வம் ஆகியோரின் மூன்றாவது அணி துர்காபரி, உஷாபஜார், காளிகாபூர் மற்றும் மாவட்டத்தில் உள்ள வேறு சில கிராமங்களுக்குச் சென்றது. அணியுடன் முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார், முன்னாள் சட்டசபை துணை சபாநாயகர் பபித்ரா கர் ஆகியோர் உடன் இருந்தனர்.

கரீம் மற்றும் கலேக்குடன் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் (AICC) திரிபுராவின் பொதுச் செயலாளர் டாக்டர் அஜய் குமார், மாநில காங்கிரஸ் தலைவர் பிராஜித் சின்ஹா, மூத்த காங்கிரஸ் தலைவர் கோபால் சந்திர ராய் மற்றும் ஜிதேந்திர சவுத்ரி போன்ற தலைவர்களும் உடன் இருந்தனர்.

சம்பவ இடத்திலிருந்து திரும்பிய அப்துல் கலேக், நெஹல்சந்திரநகரில் கிட்டத்தட்ட 20 கடைகள் எரிக்கப்பட்டதாகவும், பிற்பகலில் தூதுக்குழு சம்பவ இடத்திற்கு வந்து நிலைமையை ஆய்வு செய்த பிறகு தாக்குதலுக்கு உள்ளானதாகவும் கூறினார். “பிஷல்கரில் உள்ள நெஹல்சந்திரநகரில் சுமார் 20 கடைகள் எரிக்கப்பட்டதாக எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. அவர்களைப் பார்வையிடவும், பாதிக்கப்பட்ட மக்களிடம் பேசவும் சென்றோம். அப்போது திடீரென சிலர் வந்து, தாங்கள் பாஜக ஆதரவாளர்கள் என்றும், தங்கள் கடைகளுக்கு தீ வைக்கப்பட்டதாகவும் கூறினர். நாங்கள் அவர்களுடன் பேசத் தொடங்கினோம். ஆனால் சிலர் திடீரென்று எங்கள் வாகனங்கள் மீது கற்களை வீசத் தொடங்கினர். எங்களின் நான்கு வாகனங்கள் சேதமடைந்தன. காவல்துறை எங்களுக்கு எந்த உதவியும் செய்யாதது மிகவும் ஆச்சரியமாக உள்ளது,'' என்றார்.

publive-image

மேலும் பேசிய அப்துல் கலேக், மாநில அரசால் பட்டப்பகலில் தூதுக்குழுவினருக்கு உரிய பாதுகாப்பைக் கூட வழங்க முடியாத நிலையில், மக்களின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு பற்றி பேசுவது வீண். மேற்கு திரிபுராவின் சரிபாரா, கஜாரியா, வைஷ்னாப்தில்லா மற்றும் பிற பகுதிகளுக்கும் பயணித்தோம்" என்றும் அவர் கூறியுள்ளார்.

ரஞ்சீதா ரஞ்சன் கூறுகையில், “இங்கு பட்டப்பகலில் குண்டர் சண்டை நடக்கிறது. எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக இருக்க விரும்பினால், தாக்குதல் நடத்தப்படுகிறது. திரிபுராவில் ஏழு எம்.பி.க்களும், பல எம்.எல்.ஏக்களும் பாதுகாப்பாக இல்லை என்றால், சாதாரண மக்கள் இங்கு எப்படி பாதுகாப்பாக இருக்க முடியும்?" என்று அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின்செயலாளர் ஸாரிதா லைட்ப்லாங் மற்றும் முன்னாள் எம்எல்ஏ ஆஷிஷ் குமார் சாஹா போன்ற தலைவர்களுடன் வந்த காங்கிரஸ் தலைவர், அவரது அணி வருகையின் போது ஒரு பாஜக ஆதரவாளர் தெருவில் வந்து அவர்களையும் உள்ளூர் சிபிஐ(எம்) மற்றும் காங்கிரஸ் ஆதரவாளர்களையும் அச்சுறுத்தியதாகக் குற்றம் சாட்டியுள்ளார். அவர்களின் வீடுகள் இடிக்கப்படும் என்றும் மிரட்டல் விடுத்துள்ளார். "திரிபுராவில் குண்டர்கள் சட்டத்தில் அடைக்கலம் கொடுக்கப்பட்டதாக உணர்கிறேன். மேலும் அவர்களின் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒற்றுமையைக் காட்ட விரும்பும் எவரையும் தாக்குவதற்கு விடுவிக்கப்பட்டனர்" என்று ரஞ்சன் கூறியுள்ளார்.

சிபிஐ(எம்) மாநிலச் செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சட்டத்தின் ஆட்சி சீரழிந்து வருவதையும், பாஜகவின் கண்காணிப்பில் உள்ள மக்களின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பையும் இந்தத் தாக்குதல் நிரூபிப்பதாகக் கூறியுள்ளது. சிபிஐ(எம்) மற்றும் காங்கிரஸின் கூற்றுப்படி, மார்ச் 2 முதல் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வழிப்பறி, கொள்ளை, தீ வைப்பு மற்றும் தாக்குதல்கள் உட்பட குறைந்தது 638 வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன. குற்றம் சாட்டப்பட்டவர்களில் சிலர் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், அவர்கள் விரைவில் விடுவிக்கப்பட்டதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

திரிபுர மாநில தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் இருந்து மாநிலம் முழுவதும் 150க்கும் மேற்பட்ட சிறிய மற்றும் பெரிய சம்பவங்கள் நடந்துள்ளதாகவும், 1,000க்கும் மேற்பட்டோர் தடுப்புக் காரணங்களுக்காக தடுத்து வைக்கப்பட்டதாகவும், குறிப்பிட்ட புகார்களின் பேரில் குறைந்தது 10 பேர் கைது செய்யப்பட்டதாகவும் காவல்துறை கூறியிருந்தது.

எதிர்க்கட்சிகளின் இந்த குற்றச்சாட்டுகள் குறித்து கருத்து தெரிவிக்க பாஜக தலைவர்கள் முன்வரவில்லை என்பது குறிபிடத்தக்கது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Bjp India Congress All India Congress Cpim Tripura
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment