டெமிங் விருதினை பெறும் முதல் இந்தியர் என்ற பெறுமையை தக்க வைத்துக் கொண்டார் ஸ்ரீநிவாசன். இது குறித்து அவர் பேசும் போது டெமிங் கமிட்டி மற்றும் ஜெ.யூ.எஸ்.இ. அமைப்பிற்கு தன்னுடைய நன்றிகளை தெரிவித்துக் கொண்டார் அவர்.
1989ம் ஆண்டு முதல் டி.வி.எஸ் மோட்டர்ஸ் மற்றும் சுந்தரம் க்ளேடோன் நிறுவனத்தின் தர மேலாண்மையை திறமையாக நிர்வகிக்க உதவிய என்னுடைய நிர்வாகிகள், உடன் பணிபுரிந்தோரின் உழைப்பிற்கு கிடைத்த பரிசு இது என்று அவர் கூறினார்.