Advertisment

J & K என்கவுண்டரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை; ஒருவன் புலவாமா தாக்குதல் சதியில் ஈடுபட்டவன்

Pulwama attack conspirator among two militants killed in J&K encounter: ஜம்மு காஷ்மீர் என்கவுண்டரில், புலவாமா தாக்குதல் சதியில் ஈடுப்பட்ட சதிகாரன் சுட்டுக்கொலை; மேலும் ஒரு தீவிரவாதியும் கொல்லப்பட்டான்

author-image
WebDesk
New Update
J & K என்கவுண்டரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை; ஒருவன் புலவாமா தாக்குதல் சதியில் ஈடுபட்டவன்

தெற்கு காஷ்மீரின் புல்வாமாவில் சனிக்கிழமை காலை நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஒரு உயர்மட்ட ஜெய்ஷ்-இ-முகமது (ஜேஎம்) தளபதியும் மற்றொரு தீவிரவாதியும் கொல்லப்பட்டனர். உயிரிழந்த தளபதி, மசூத் அஸாரின் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றும், 2019 லெத்போரா கார் வெடிகுண்டு வெடிப்பின் பின்னணியில் இருந்தவன் என்றும் காவல் துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisment

அட்னான் மற்றும் லம்பூ என்ற குறியீட்டுப் பெயர்களால் அறியப்படும், முகமது இஸ்மாயில் அல்வி, துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்டான். அவனது இருப்பிடத்தை அறிந்த கூட்டுப் படைகள், தெற்கு காஷ்மீரின் புல்வாமாவின் டச்சிகாமின் கீழ் வரும் காட்டுப் பகுதியில் உள்ள நாக்பெரான் தார்சார் கிராமத்தைச் சுற்றி வளைத்து துப்பாக்கி சூடு நடத்தினர்.

தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தி பாதுகாப்பு வளையத்தை உடைக்க முயன்றனர். இருப்பினும், கூட்டுப் படைகள் பதிலடி கொடுத்ததால், இருவர் கொல்லப்பட்டனர். இரண்டாவது தீவிரவாதியின் அடையாளம் கண்டறியப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

முகமது இஸ்மாயில் அல்வி, மசூத் அசார் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர் லெத்போரா புல்வாமா தாக்குதலின் சதி மற்றும் திட்டமிடலில் ஈடுபட்டவன் என என்ஐஏ தயாரித்த குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றவன், ”என்று காஷ்மீர் இன்ஸ்பெக்டர் ஜெனரல் (ஐஜிபி) விஜய் குமார் ஒரு ட்வீட்டில் மேற்கோள் காட்டினார்.

பிப்ரவரி 14, 2019 அன்று, ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள லெத்போராவில் சிஆர்பிஎஃப் கான்வாய் மீது ஃபிதாயீன்-அடில் அஹ்மத் தார் தனது சிதைந்த காரை மோதியதில் நாற்பது துணை இராணுவ மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த அளவிலான தாக்குதல், இந்தியாவையும் பாகிஸ்தானையும் போரின் விளிம்பிற்கு கொண்டு வந்தது.

முகமது இஸ்மாயில் அல்வி மேம்படுத்தப்பட்ட வெடிபொருட்களை (ஐஇடி) தயாரிப்பதில் நிபுணர் என்றும் பல தீவிரவாத தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளதாகவும் காவல் துறையினர் தெரிவித்தனர். காவல்துறை மற்றும் இராணுவம் இரண்டு வருடங்களுக்கு மேலாக தீவிரவாத தளபதியை கண்காணித்து வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Jammu And Kashmir Terrorist
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment