Advertisment

விஜய் மல்லையா விவகாரத்தில் பிரிட்டன் கொடுத்த அதிரடி அறிவிப்பு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
vijay mallya, விஜய் மல்லையா

vijay mallya, விஜய் மல்லையா

இந்தியாவில் வங்கி கடன் மோசடியில் ஈடுபட்டிருக்கும் விஜய் மல்லையா -வை லண்டனில் இருந்து நாடு கடத்த பிரிட்டன் உள்துறை செயலர் சஜித் ஜாவித் அனுமதி அளித்துள்ளார். ஆனால் இதனை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்ய உள்ளார்.

Advertisment

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட 13 பொதுத்துறை வங்கிகளிலிருந்து 9,000 கோடி ரூபாய்க் கடனாகப் பெற்று அதனை திருப்பி செலுத்தாமல் இருந்தார் தொழிலதிபர் விஜய் மல்லையா. இந்த விவகாரம் நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்த கடந்த 2015-ம் ஆண்டு மல்லையா மீது வழக்குப் பதியப்பட்டது. வழக்கு நடவடிக்கையை அடுத்து நாட்டை விட்டு லண்டனுக்கு தப்பியோடினார். இதே விவகாரத்தில் சி.பி.ஐ-யும் அமலாக்கத்துறையும் வழக்குகளைப் பதிவு செய்து கெடுபிடி காட்டின.

விஜய் மல்லையா நாடு கடத்த அனுமதி

இதனையடுத்து லண்டனில் இருந்து மல்லையாவை நாடு கடத்தும் பணிகள் சூடு பிடித்தன. அதற்காக பிரிட்டன் உதவிய நாடிய மத்திய அரசு, இங்கிலாந்து அரசிடம் கோரிக்கை வைத்தது. இந்த இடைப்பட்ட காலத்தில் இந்தியாவைச் சேர்ந்த 13 வங்கிகளின் கூட்டமைப்பு கோரிக்கை படி பிரிட்டன் நீதிமன்றம் மல்லையா சொத்துகளை முடக்க உத்தரவிட்டது.

இதனிடையே மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்தும் வழக்கு லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில் சமீபத்தில் தீர்ப்பளித்த லண்டன் நீதிமன்றம், இந்தியாவுக்குக் கொண்டு செல்லத் தடையில்லை எனக் கூறியது.

இதற்கிடையே, லண்டன் நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, மல்லையாவை பிரிட்டனிலிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தும் உத்தரவில் அந்நாட்டு உள்துறை அமைச்சர் நேற்று அனுமதியளித்தார். இருப்பினும் அனுமதிக்கு எதிராக மல்லையா மேல்முறையீடு செய்யலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. 14 நாட்களுக்குள் அவர் மேல்முறையீடு செய்யலாம் என அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

எனவே தம்மை சொந்த நாட்டிற்கு அனுப்பாமல் இருக்க, மல்லையா மேற்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

India London Vijay Mallya
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment