டிசம்பர் 4-ஆம் தேதியான இன்று, இந்திய கடற்படை தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, மும்பையில் உள்ள இந்திய நுழைவுவாயிலில், கடற்படையினர் கண்கவர் அணிவகுப்பு நடத்தினர்.
Advertisment
கடந்த 1971-ஆம் ஆண்டு, டிசம்பர் 4-ஆம் தேதி, இந்தியா - பாகிஸ்தான் போரின்போது, இந்திய கடற்படை கராச்சி துறைமுகத்தின் மீது கடல் வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல்களுக்கு ஆப்பரேஷன் திரிசூலம் என பெயரிடப்பட்டது. இதில், இந்திய கடற்படை பாகிஸ்தான் கப்பல்களை தாக்கி அழித்தது.
இந்த வெற்றியை கொண்டாடும் வகையில், ஆண்டு தோறும் இந்திய கடற்படை தினம் டிசம்பர் 4-ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.
அதன்படி, இன்று (திங்கள் கிழமை) கடற்படை தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, மும்பையில் இந்திய நுழைவுவாயிலில் கடற்படையினர், இசை வாத்தியங்கள் முழங்க கண்கவர் அணிவகுப்பு நடத்தினர். இதனை ஆயிரக்கணக்கானோர் திரண்டு ரசித்தனர்.