Advertisment

முதல்வர் மம்தாவுக்கு எழுதிய கடிதத்தை ட்வீட் செய்த மே. வங்க ஆளுநர்.. உரையாட வருமாறு அழைப்பு!

முதல்வருக்கு’ ஆளுநர் கடிதம் எழுதியிருக்கக் கூடாது என்று திரிணாமுல் காங்கிரஸ் கூறியுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
jagdeep dhankhar vs mamata banerjee

West Bengal Governor Jagdeep Dhankhar tweets letter written to CM Mamata Banerjee

மேற்கு வங்க ஆளுநர் ஜக்தீப் தன்கர்’ முதல்வர் மம்தா பானர்ஜிக்கு எழுதிய கடிதத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அதில் "அடுத்த வாரம் எப்போது வேண்டுமானாலும்" ராஜ் பவனில் ஒரு உரையாடலுக்கு அழைப்பு விடுத்தார்.

Advertisment

மாநில அரசுக்கும், ராஜ் பவனுக்கும் இடையிலான பிளவு புதிய உச்சத்தில் இருக்கும் நேரத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தன்கர்’ அரசு அதிகாரிகளை “தனது வேலைக்காரர்கள்” போல் நடத்துகிறார் என்று குற்றம் சாட்டி’ ஜனவரி 31 அன்று, ஆளுநரை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இருந்து முதல்வர் பானர்ஜி ப்ளாக் செய்தார்,

ஆளுநரின் "நெறிமுறையற்ற மற்றும் அரசியலமைப்பிற்கு விரோதமான" அறிக்கைகளால் இதைச் செய்ய "கட்டாயப்படுத்தப்பட்டதாக" பானர்ஜி கூறினார். கவர்னர் ஒரு "சூப்பர் காவலர்" போல் செயல்படுவதாகவும், அரசு அதிகாரிகளை "அவரது வேலைக்காரர்களாக" நடத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இது நடந்த சில நேரங்களிலே’, பானர்ஜியின் நடவடிக்கை அரசியலமைப்பு விதிமுறைகளுக்கு எதிரானது என்று தன்கர் கூறினார்.

பெங்கால் குளோபல் பிசினஸ் உச்சி மாநாடு, மா கேன்டீன், பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர் நியமனம், மாநில சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரியின் நடமாட்டத்தை போலீசார் தடுத்தது குறித்து ஆளுநர் கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து இது நடந்தது.

இதைத் தொடர்ந்து, திரிணாமுல் காங்கிரஸின் மக்களவை எம்பி சுதிப் பந்தோபாத்யாய், ஜக்தீப் தன்கரை ஆளுநர் பதவியிலிருந்து நீக்குமாறு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் வலியுறுத்தினார்.

இப்படி ஒரு சூழலில்’கவர்னர் தன்கர் இன்று (பிப்.17), முதல்வர் மம்தா பானர்ஜிக்கு எழுதிய கடிதத்தை தனது ட்விட்டரில் பகிர்ந்தார்.

அதில் "குறிப்பாக முதல்வர் மற்றும் கவர்னர் போன்ற அரசியலமைப்புச் செயல்பாட்டாளர்களிடையே உரையாடல் மற்றும் கலந்துரையாடல் ஆகியவை ஜனநாயகத்திற்கு இன்றியமையாதது மற்றும் அரசியலமைப்பு நிர்வாகத்தின் பிரிக்க முடியாத பகுதியாகும்.”

"சட்டப்பூர்வமாக கொடியிடப்பட்ட பிரச்சினைகளுக்கு, நீண்ட காலமாக எந்த பதிலும் இல்லை, மேலும் இது தொடர்பாக அரசியலமைப்பின் 167வது பிரிவின் கீழ் தகவல்களை வழங்குவது முதல்வரின் அரசியலமைப்பு கடமையாகும். முக்கிய பிரச்சினைகளுக்கு பதிலளிக்காதது அரசியலமைப்பு முட்டுக்கட்டைக்கு வழிவகுக்கும்.

"இவ்வாறாக, இதுவரை சுட்டிக்காட்டப்பட்ட அனைத்து சிக்கல்களுக்கும் விரைவில் பதிலளிக்க’ முதல்வர் மம்தா பானர்ஜி, வரும் வாரத்தில் எந்த நேரத்திலும் ராஜ்பவனில் உரையாடுவதற்கு வசதியாக இருக்கும்படி" ஆளுநர் அந்த கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் பிப்ரவரி 15ஆம் தேதி முதல்வருக்கு எழுதிய கடிதத்தையும் ஆளுநர் பகிர்ந்துள்ளார்.

இதற்கிடையில், இதற்கு பதிலளித்த திரிணாமுல் காங்கிரஸ், ஆளுநர் முதல்வருக்கு கடிதம் எழுதியிருக்கக் கூடாது என்று கூறியுள்ளது.

“ஆளுநர் முதலமைச்சருக்கு கடிதம் எழுதலாம். ஆனால் அதை சமூக வலைதளங்களில் பகிர்வது மரியாதையல்ல. இது அவரது நிலைப்பாட்டுக்குத் தகுதியற்றது” என்று டிஎம்சி செய்தித் தொடர்பாளர் குணால் கோஷ் செய்தியாளர்களிடம் கூறினார்.

இதற்கு பதிலளித்த பாஜக செய்தித் தொடர்பாளர் சாமிக் பட்டாச்சார்யா, “இது ஒரு சாதாரண செயல்முறை, இதில் எந்தத் தீங்கும் இல்லை. அரசியலமைப்புச் சட்டத் தலைவரான ஆளுநர், முதலமைச்சரை கூட்டத்திற்கு அழைக்கலாம். கவர்னர் முன்னிலைப்படுத்தியும், மாநில அரசு தெளிவுபடுத்தாத பல்வேறு தீவிரமான பிரச்னைகள் உள்ளன.

சிபிஐ(எம்) தலைவர் சுஜன் சக்ரவர்த்தி கூறுகையில், “மாநில அரசும், முதலமைச்சரும் ஆளுநருடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் வங்காளத்தில் அப்படி நடக்கவே நடக்காது. எனவே, ஆளுநர், முதலமைச்சரை அழைக்க வேண்டும்,'' என்றார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Mamata Banerjee West Bengal
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment