Advertisment

சந்தேகங்களுக்கு முடிவு கட்டிய யோகி; உ.பி-யில் புதிய வரலாறு

உத்திரபிரதேசத்தில் வரலாறு படைத்த யோகி ஆதித்யநாத்; பாஜகவின் முக்கிய முதல்வராக மட்டுமல்லாமல், முதன்மை பிரச்சார தலைவராகவும் உருவெடுத்துள்ளார்

author-image
WebDesk
New Update
சந்தேகங்களுக்கு முடிவு கட்டிய யோகி; உ.பி-யில் புதிய வரலாறு

Lalmani Verma

Advertisment

Yogi settles all doubts, set for history: உத்தரப்பிரதேசத்தில் பாஜக வெற்றி பெற்றுள்ள நிலையில், ஐந்தாண்டு பதவிக் காலத்திற்குப் பிறகு மாநிலத்தில் மீண்டும் ஆட்சிக்கு வரும் முதல் முதல்வர் என்ற வரலாற்றை யோகி ஆதித்யநாத் உருவாக்கியுள்ளார். 1985க்குப் பிறகு உ.பி.யில் ஒரு கட்சி மீண்டும் ஆட்சிக்கு வருவது இதுவே முதல் முறை.

யோகியின் செல்வாக்கு கோரக்பூர் மடத்தைச் சுற்றியுள்ள ஒரு சிறிய பகுதிக்குள்ளாக இருந்தது, அந்த மடத்தில் அவர் தலைமை மடாதிபதியாக இருந்தார், மேலும் அவர் கோரக்பூர் தொகுதியில் இருந்து ஐந்து முறை எம்.பி.யாக மட்டுமே இருந்த நிலையில், ஐந்தாண்டுகளுக்கு முன்பு பாஜக தேசிய தலைமையால் ஆதித்யநாத் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

பாஜக தேசிய தலைமையால் ஆதிக்கம் செலுத்தப்படும் என்ற பேச்சுக்களுக்கு மத்தியில் யோகி ஆதித்யநாத் முடிசூட்டப்பட்ட சூழ்நிலைகள் இப்போது நீண்ட காலமாக மறந்துவிட்டன. இன்று, வெறும் 49 வயதாகும் ஆதித்யநாத், நாட்டிலேயே அதிகம் பேசப்படும் முதல்வர், உ.பி.க்கு அப்பால் பாஜகவின் முதன்மை தேர்தல் பிரச்சாரகர்களில் ஒருவராகவும், மாநிலத்தில் கட்சியை விட உயர்ந்து தனது இமேஜை வெளிப்படுத்தும் தலைவராகவும் உள்ளார்.

publive-image

யோகி அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட பல "சர்ச்சைக்குரிய முடிவுகள்" அவரது மதமாற்ற எதிர்ப்புச் சட்டத்தைப் போலவே பிற மாநிலங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டன. சர்ச்சைகளுக்கு மத்தியிலும் ஆதித்யநாத் அரசாங்கம் அழுத்தம் கொடுத்து எடுத்த நடவடிக்கைகளாக, சட்டவிரோத இறைச்சிக் கூடங்கள் மீதான ஒடுக்குமுறை, ரோமியோ எதிர்ப்புப் படைகளை அறிமுகப்படுத்துதல், நில மாஃபியாக்களுக்கு எதிரான நடவடிக்கை மற்றும் CAA எதிர்ப்புப் போராட்டக்காரர்களுக்கு வழங்கப்பட்ட மீட்பு அறிவிப்புகள் போன்றவை உள்ளன.

மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை மேம்படுத்தியது ஆதித்யநாத் அரசாங்கம் மக்கள் ஆதரவைப் பெற்றதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும். பாஜக மீண்டும் மீண்டும் மாஃபியா மீதான அதன் ஒடுக்குமுறையைப் பற்றி பேசியது, அதேநேரம் மாநிலத்தின் "தோக்கோ நீதி (என்கவுண்டர் கொள்கை)" மீதான எதிர்க்கட்சிகளின் விமர்சனத்திற்கு எந்த பலனும் இல்லை.

ஆதித்யநாத் அரசாங்கம் தாக்கூருக்கு ஆதரவாகக் கருதப்பட்டு, பிற உயர் சாதியினரான பிராமணர்களின் பெரும்பான்மையை முடக்கிவிடும் என்ற அச்சம் பாஜகவை அதிகம் காயப்படுத்தவில்லை. தேர்தலுக்கு முன், பிராமண சமூகத்தை கவருவதற்கான வியூகம் மற்றும் திட்டங்களை வகுப்பதற்காக நான்கு பேர் கொண்ட குழுவை பாஜக அமைத்தது.

ஒரு வசதியான வெற்றி, மாநில பாஜகவில் ஆதித்யநாத்தின் தலைமையைப் பற்றிய எஞ்சியிருக்கும் சந்தேகங்களையும் தீர்த்து வைக்கிறது. அவரது முரட்டுத்தனமான பாணி, தன்னிச்சையாக செயல்படும் போக்கு மற்றும் கட்சி நிகழ்வுகளில் இருந்து விலகி இருப்பது பற்றி தொடர்ந்து பேசப்பட்டது.

publive-image

ஆனால், தேர்தல் நெருங்கும் நேரத்தில், ஆதித்யநாத் தங்கள் ஆள்தான் என்று மத்திய பா.ஜ.க. தெளிவாக செய்தி வெளியிட்டது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகிய இருவரும் ஆதித்யநாத்க்காக வாக்களிக்குமாறு மக்களைக் கேட்டுக்கொண்டனர், மேலும், கடந்த ஆண்டு நவம்பரில் புதுதில்லியில் நடைபெற்ற பாஜக தேசிய செயற்குழுவில் ஆதித்யநாத் முக்கிய இடத்தைப் பிடித்தார், அங்கு அவர் கட்சியின் 18 அம்ச அரசியல் தீர்மானத்தை தாக்கல் செய்தார், அதேநேரம், மற்ற பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் காணொலி வாயிலாக மட்டுமே கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

இதையும் படியுங்கள்: 5 மாநில தேர்தல் முடிவுகள்; பாஜகவுக்கு ஊக்கமளிக்கும் வெற்றி; தேசிய முகமாகும் கெஜ்ரிவால்

அவரது ஆதரவாளர்களால் ‘இந்து ஹிருத்ய சாம்ராட்’ என்று அழைக்கப்படும் ஆதித்யநாத், உத்தரகாண்டில் உள்ள கர்வால் பல்கலைக்கழகத்தில் அறிவியல் பட்டதாரி ஆவார். யோகி தனது அரசியல் வெற்றியை தனது வழிகாட்டியான முன்னாள் பாஜக எம்பி மஹந்த் அவைத்யநாத்துக்கு அர்ப்பணித்தார், மஹந்த் அவைத்யநாத் தான் யோகியை தனது சிறகுகளின் கீழ் அழைத்துச் சென்று, கோரக்பூரில் உள்ள கோரக்நாத் மந்திரின் தலைவராக அறிவித்தார். அது பிப்ரவரி 15, 1994, அப்போது யோகிக்கு வயது 22.

1972 ஆம் ஆண்டு இன்றைய உத்தரகாண்டின் கர்வால் மாவட்டத்தில் உள்ள பஞ்சூர் பகுதியில் பிறந்த ஆதித்யநாத், 2014 மக்களவை மற்றும் 2017 சட்டமன்றத் தேர்தல்களுக்கான தனது பிரமாணப் பத்திரத்தில், தந்தையின் பெயருக்கான இடத்தில் மஹந்த் அவைத்யநாத்தின் பெயரை எழுதியிருந்தார்.

தனது பல்கலைக்கழக நாட்களில் ABVP உடன் தொடர்பு கொண்டிருந்த ஆதித்யநாத் 1998 இல் பிரதான அரசியலில் நுழைந்தார், அப்போது அவரது குரு, மஹந்த் அவைத்யநாத், அவருக்காக தனது பாராளுமன்ற இடத்தை விட்டுக் கொடுத்தார். ஆதித்யநாத் கோரக்பூரில் இருந்து 1998 முதல் 2014 வரை தொடர்ந்து ஐந்து தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளார்.

2007 மார்ச்சில், கோரக்பூரில் தான் கைது செய்யப்பட்டதற்கு காரணமான "அரசியல் சதி" பற்றி விவரிக்கத் தொடங்கியபோது, ​​நாடாளுமன்றத்தில் ஆதித்யநாத் கண்ணீர் விட்டு அழுதார். பாஜக எம்.பி.,யான ஆதித்யநாத், கிழக்கு உத்தரபிரதேச நகரத்தில் தடை உத்தரவுகளை மீறியதற்காக ஜனவரி மாதம் கைது செய்யப்பட்ட பின்னர் 11 நாட்கள் காவலில் இருந்தார்.

2012 ஆம் ஆண்டில், முன்னாள் பிஎஸ்பி மந்திரி பாபு சிங் குஷ்வாஹாவை பாஜகவில் இணைத்ததை அவர் வெளிப்படையாக எதிர்த்தார், மேலும் தேர்தலில் பாஜக வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்ய மாட்டேன் என்றும் ஆதித்யநாத் அறிவித்தார்.

publive-image

முன்னதாக, 2002 இல், கோரக்பூர் சட்டமன்றத் தொகுதியில் இருந்து பாஜகவின் சிவபிரதாப் சுக்லாவுக்கு எதிராக அகில பாரத இந்து மகாசபாவின் வேட்பாளரான ராதாமோகன் தாஸ் அகர்வாலை ஆதித்யநாத் ஆதரித்தார். அந்தத் தேர்தலில் வெற்றி பெற்ற அகர்வால், பின்னர் பாஜகவில் சேர்ந்தார், அவர் தற்போது கோரக்பூர் நகர்ப்புறத்தில் இருந்து எம்எல்ஏவாக உள்ளார். ஆனால் தற்போதைய தேர்தலில், தனது முதல் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் ஆதித்யநாத்க்காக அகர்வாலுக்கு போட்டியிட பாஜக இடம் அளிக்க மறுத்தது.

கிழக்கு உ.பி.யில் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான குழந்தைகளின் உயிர்களை பலிவாங்கும் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் பிரச்சினையை எம்.பி.யாக ஆதித்யநாத் தொடர்ந்து எழுப்பி வந்தார். ஆதித்யநாத் முதல்வராக பதவியேற்ற பிறகு, அந்த நோயைக் கட்டுப்படுத்த அவர் மேற்கொண்ட முயற்சிகளை பிரதமர் மோடி பல்வேறு மேடைகளில் பாராட்டினார்.

கோரக்நாத் மந்திர் இயக்கத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்ட ஆதித்யநாத் மடத்தின் செயல்பாடுகளில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார், பதினைந்து நாட்களுக்கு ஒரு முறையாவது அவர் மடத்திற்கு வருகை தருகிறார். மடத்துடனான அவரது தொடர்பு கடந்த ஐந்து ஆண்டுகளில் அதன் அடிவருடியை பன்மடங்கு அதிகரித்துள்ளதாக நம்பப்படுகிறது.

கோரக்பூரில் ஆதித்யநாத்தின் செல்வாக்கு காரணமாக 2017ஆம் ஆண்டுக்கு முன், ஆதித்யநாத்தின் ஆதரவாளர்கள் தங்கள் வாகனங்களில் பதிவு எண்களைக் காட்ட மாட்டார்கள், அதற்குப் பதிலாக அவர்களின் நம்பர் பிளேட்களில் ‘யோகி சேவக்’ என்று எழுதப்பட்டிருந்தது. ஆதித்யநாத் பொறுப்பேற்ற பிறகு, அவரது சொந்த இந்து யுவ வாஹினியின் தொண்டர்களுக்கு கட்டுபாடுகள் இருந்தது.

ஆதித்யநாத் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து நடந்த, 2018 மக்களவை இடைத்தேர்தலில் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு எதிராக பாஜக வேட்பாளர் உபேந்திர தத் சுக்லா தோற்கடிக்கப்பட்டதே, அவர் முதல்வராக இருந்த காலத்தில் தனிப்பட்ட முறையில் ஆதித்யநாத் பெற்ற ஒரே பின்னடைவு. சுக்லாவின் விதவை மனைவி, SP வேட்பாளராக கோரக்பூர் நகர் பகுதியில் ஆதித்யநாத்தை எதிர்த்து சட்டசபை தேர்தலில் போட்டியிட்டார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bjp Uttar Pradesh Yogi Adityanath
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment