Advertisment

15 நாடுகள்; 60 அமைச்சரவை பொறுப்புகள்; மாற்றங்களை உருவாக்கும் இந்திய வம்சாவளிகள்

கனடா எனக்கு பாதுகாப்பு அளித்தது வாய்ப்புகளை வழங்கியது. அதற்கு பதிலாக நான் இந்நாட்டை ஒரு சிறந்த இடமாக மாற்றுவதற்கான பங்களிப்பை தருகின்றேன்

author-image
WebDesk
New Update
15 நாடுகள்; 60 அமைச்சரவை பொறுப்புகள்; மாற்றங்களை உருவாக்கும் இந்திய வம்சாவளிகள்

அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உட்பட 15 நாடுகளில் 200க்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் தலைமை பகுதிகளை வைக்கின்றனர். இதில் 60 பேர் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர். இது இந்தியப் புலம்பெயர்ந்தோர் மத்தியில் செயல்படும், அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஒரு அமைப்பால் வெளியிடப்பட்டது. அரசாங்க வலைத்தளங்கள் மற்றும் பொது மக்களுக்கு கிடைக்கக்கூடிய தரவுகளின் அடிப்படையில் 2021 ஆம் ஆண்டு இந்திய வம்சாவளியினர் குறித்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. திங்களன்று வெளியிடப்பட்ட இந்த பட்டியலில் 200-க்கு மேற்பட்ட தலைவர்கள் இடம்பெற்றுள்ளனர். அவர்கள் உலகெங்கிலும் உள்ள 15 நாடுகளில் மிக உயர்ந்த பொது சேவையில் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் 60க்கும் மேற்பட்ட தலைவர்கள் அமைச்சரவை பதவிகளில் இடம்பெற்றுள்ளனர்.

Advertisment

உலகின் பழமையான ஜனநாயகத்தின் துணை அதிபராக, முதல் பெண்மணியாக இந்திய பாரம்பரியத்தைச் சேர்ந்த ஒருவர் இருப்பது பெருமைக்குரியது. பொது சேவையில் ஈடுபட்டுள்ள மற்ற நாட்டு மக்களை முன்னிலைப்படுத்தும் வகையில் அதிபர் தினத்தன்று சொற்பொழிவு ஒன்றை நிகழ்த்த விரும்புகின்றோம் என்று சிலிக்கன் வேலியை தளமாகக் கொண்ட தொழிலதிபர் மற்றும் முதலீட்டாளரான இந்தியாவை சேர்ந்த நிறுவனர் எம்ஆர் ரங்கசாமி கூறியுள்ளார்.

இந்த பட்டியலில் ஆஸ்திரேலியா, கனடா, சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், யுனைடெட் கிங்டம் மற்றும் அமெரிக்கா போன்ற புலம்பெயர்ந்தோர் குடியேற்றத்தின் குறிப்பிடத்தக்க வரலாறுகளைக் கொண்ட நாடுகளில் பணியாற்றும் அரசு அதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், மத்திய வங்கிகளின் தலைவர்கள் மற்றும் மூத்த அரசு ஊழியர்கள் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.

மேலும் படிக்க : கிரெட்டா டூல்கிட் விவகாரம் : மேலும் இரண்டு பேரை தேடுகிறது டெல்லி காவல்துறை

2021 Indiaspora Government பட்டியலில் இடம் பெறுவது ஒரு பெருமை. காங்கிரசில் மிக நீண்ட காலம் பணியாற்றிய இந்திய-அமெரிக்க உறுப்பினர் என்ற முறையில், அமெரிக்க வாழ்க்கை மற்றும் சமூகத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக மாறியுள்ள இந்திய அமெரிக்க சமூகத்தில் ஒரு தலைவராக இருப்பதில் பெருமைப்படுகிறேன், ”என்று ஆசியாவிற்காக அமெரிக்க மாளிகை வெளியுறவுத் துறையின் துணைக்குழு தலைவரும், காங்கிரஸ்காரருமான அமி பெரா கூறினார்.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பின் படி 32 மில்லியன் இந்திய மக்கள் உலகெங்கிலும் பரவியுள்ளனர். இந்தியா தான் உலகின் மிகப்பெரிய புலம் பெயர் மக்களை கொண்டுள்ளது.

இந்த 2021ம் ஆண்டுக்கான பட்டியலில் அதிகாரிகள் மொத்தமாக 587 மில்லியனுக்கும் அதிகமான தொகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர், மேலும் அவர்களின் நாடுகள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 28 டிரில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது, இது உலகளவில் இந்த தலைவர்கள் ஏற்படுத்தும் தாக்கத்தை நிரூபிக்கிறது என்று இந்தியாஸ்போரா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

"இந்திய பாரம்பரியத்தின் அரசாங்கத் தலைவர்கள் இப்போது பிரதிநிதித்துவப்படுத்தும் சமூகங்களை முன்னேற்றுவதற்காக செய்துள்ள குறிப்பிடத்தக்க பங்களிப்பைக் குறிப்பிடுவது உண்மையிலேயே ஊக்கமளிக்கிறது" என்று பிஜியின் கல்வி, பாரம்பரிய மற்றும் கலை அமைச்சர் ரோஸி அக்பர் கூறினார். "மக்கள்தொகையில் கணிசமான பகுதியைப் பொறுத்தவரை, இது சமூக அநீதிகளை நிவர்த்தி செய்யும் அரசாங்கக் கொள்கையாகும், இது நிலையான சமூக-பொருளாதார முன்னேற்றத்தின் மாற்றத்தக்க பாதைக்கு வழிவகுக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த பட்டியலில் இந்தியாவில் இருந்து குடியேறியவர்களும், சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, கனடா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் பிறந்த தொழில் வல்லுநர்களும் அடங்கவார்கள்.  உலகின் பல்வேறு பகுதிகளில் சிறப்பான பங்களிப்பை ஆற்றும் இந்திய தலைவர்களுடன் என்னுடைய பெயரும் இந்த பட்டியலில் இடம் பெற்றிருப்பதை நினைத்து ஒரு இந்தோ - கனடியனாக பெருமைப்படுகிறேன் என்று ரத்னா ஓமித்வர் கூறியுள்ளார்.

இந்திய பாரம்பரியத்தை நினைத்து பெருமைப்படுவது போலவே நான் கனட நாட்டு பிரஜையாகவும் பெருமை அடைகிறேன். கனடா எனக்கு பாதுகாப்பு அளித்தது வாய்ப்புகளை வழங்கியது. அதற்கு பதிலாக நான் இந்நாட்டை ஒரு சிறந்த இடமாக மாற்றுவதற்கான பங்களிப்பை தருகின்றேன். எதிர்கால கனட மக்களுக்கான பாதுகாப்பினையும் வாய்ப்ப்புகளையும் வழங்குவதை உறுதி செய்வதற்காக என்னுடைய பங்களிப்பை தருகின்றேன் என்றார்.

சில தலைவர்கள் அகதிகளாகவோ பொருளாதார வாய்ப்புகளுக்காகவோ நாட்டின் முதல் குடியேற்ற நிகழ்வுகளின் போது இங்கே வந்தவர்கள். சிலர் அந்நாடுகள் தொடர்ந்து ஏற்படும் குடியேற்ற நிகழ்வுகளில் புலம்பெயரும் மக்களின் நலன்களுக்காக பணியாற்றுகிறார்கள். அவர்கள் கல்வி வாய்ப்புகளுக்காக வெளிநாட்டிற்கு வந்தவர்கள். அல்லது அவ்வாறு வந்தவர்களின் அடுத்த தலைமுறையை சேர்ந்தவர்கள் என்று அந்த அறிக்கை கூறியுள்ளது.

பொது சேவையில் பணியாற்றும் இந்தியர்களின் எண்ணிக்கையைப் பார்க்கும் போது ஊக்கம் அளிக்கிறது என்று ஒபாமா நிர்வாகத்தில் வர்த்தக உதவி செயலாளராக பணியாற்றிய கே.பி.எம்.ஜி இந்தியாவின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான இந்தியஸ்போரா வாரிய உறுப்பினர் அருண்குமார் கூறினார்.

சேவை செய்வதற்கான வாய்ப்பு கிடைத்ததால், மறக்க முடியாத, நிறைவான அனுபவம் எனக்கு எப்படி கிடைத்தது என்பது குறித்து என்னால் பேச முடியும். அதற்கும் மேலாக திருப்பி தருவதற்கு இது ஒரு அர்த்தமுள்ள வழியாக இருக்கிறது என்றும் குமார் கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment