Advertisment

கொரோனா சுகாதார அவசரநிலை இந்த ஆண்டு முடிவடையும்; WHO

நாம் வைரஸை ஒருபோதும் முடிவுக்குக் கொண்டுவர முடியாது, ஏனெனில் இதுபோன்ற தொற்றுநோய் வைரஸ்கள் சுற்றுச்சூழல் அமைப்பின் ஒரு பகுதியாக மாறும் என்று உலக சுகாதார அமைப்பின் அவசரநிலைத் தலைவர் டாக்டர். மைக்கேல் ரியான் கூறினார்

author-image
WebDesk
New Update
கொரோனா சுகாதார அவசரநிலை இந்த ஆண்டு முடிவடையும்; WHO

Covid-19 health emergency could be over this year, WHO says: தடுப்பூசிகள் மற்றும் மருந்துகளில் உள்ள பெரிய ஏற்றத்தாழ்வுகள் விரைவாக நிவர்த்தி செய்யப்பட்டால், கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் மோசமான மரணங்கள், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுதல் மற்றும் ஊரடங்குகள் இந்த ஆண்டு முடிவடையும் என்று உலக சுகாதார அமைப்பின் அவசரநிலைத் தலைவர் டாக்டர். மைக்கேல் ரியான் செவ்வாயன்று தெரிவித்தார்.

Advertisment

உலகப் பொருளாதார மன்றத்தால் நடத்தப்பட்ட தடுப்பூசி சமத்துவமின்மை குறித்த குழு விவாதத்தின் போது டாக்டர். மைக்கேல் ரியான் பேசுகையில், "நாம் வைரஸை ஒருபோதும் முடிவுக்குக் கொண்டுவர முடியாது, ஏனெனில் இதுபோன்ற தொற்றுநோய் வைரஸ்கள் சுற்றுச்சூழல் அமைப்பின் ஒரு பகுதியாக மாறும்." என்றார்.

ஆனால், "நாங்கள் பேசிக்கொண்டிருந்த விஷயங்களைச் செய்தால், இந்த ஆண்டு பொது சுகாதார அவசரநிலையை முடிவுக்குக் கொண்டுவர எங்களுக்கு வாய்ப்பு உள்ளது," என்று டாக்டர். மைக்கேல் ரியான் கூறினார்.

பணக்கார மற்றும் ஏழை நாடுகளுக்கு இடையே கொரோனா தடுப்பூசிகளில் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டிருப்பது பேரழிவு தரும் தார்மீக தோல்வி என்று WHO சாடியுள்ளது. குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் 10%க்கும் குறைவானவர்களே கொரோனா தடுப்பூசியின் ஒரு டோஸை பெற்றுள்ளனர்.

தடுப்பூசிகள் மற்றும் பிற கருவிகள் நியாயமான முறையில் பகிரப்படாவிட்டால், இதுவரை உலகளவில் 5.5 மில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கொன்ற வைரஸின் சோகம் தொடரும் என்று உலக மற்றும் வணிகத் தலைவர்களின் மெய்நிகர் கூட்டத்தில் டாக்டர். மைக்கேல் ரியான் கூறினார்.

"நாம் செய்ய வேண்டியது என்னவென்றால், நமது மக்கள்தொகைக்கு அதிகபட்ச தடுப்பூசி மூலம் குறைந்த அளவிலான நோய் நிகழ்வுகளை அடைவதுதான், எனவே யாரும் இறக்க வேண்டியதில்லை" என்று டாக்டர் ரியான் கூறினார். மேலும், "பிரச்சினை என்பது மரணம், மருத்துவமனைகளில் அனுமதித்தல். மற்றும் நமது சமூக, பொருளாதார, அரசியல் அமைப்புகளின் சீர்குலைவுதான் சோகத்தை ஏற்படுத்தியது, வைரஸ் அல்ல. என்றும் டாக்டர் ரியான் கூறினார்

கொரோனா எண்டமிக்கை (உள்ளூரில் பரவுதல்) கருத்தில் கொள்ள வேண்டுமா, ஸ்பெயின் போன்ற சில நாடுகள் வைரஸுடன் சிறப்பாக வாழ உதவுவதற்கு அழைப்பு விடுத்துள்ள லேபிள் அல்லது பரவலை எதிர்த்துப் போராட பல நாடுகள் எடுத்துள்ள தீவிர நடவடிக்கைகளை உள்ளடக்கிய ஒரு தொற்றுநோய் பற்றிய வளர்ந்து வரும் விவாதத்திலும் ரியான் கலந்துக் கொண்டார்.

“எண்டமிக் மலேரியா நூறாயிரக்கணக்கான மக்களைக் கொல்கிறது; எண்டமிக் எச்ஐவி; நமது உள் நகரங்களில் நடக்கும் வன்முறை. எண்டெமிக் என்பது நல்லதைக் குறிக்காது. எண்டெமிக் என்றால் அது எப்போதும் இங்கே இருக்கிறது," என்று டாக்டர் ரியான் கூறினார்.

பொது சுகாதார அதிகாரிகள் கொரோனா ஒழிக்கப்படுவது சாத்தியமில்லை என்று எச்சரித்துள்ளனர், மேலும் இது மிகக் குறைந்த மட்டத்தில் இருந்தாலும், அது உள்ளூர்மயமாக்கப்பட்ட பிறகும் மக்களைக் கொல்வதைத் தொடரும் என்று கூறுகிறார்கள்.

வறுமைக்கு எதிரான அமைப்பின் ஆக்ஸ்பாம் இன்டர்நேஷனல் நிர்வாக இயக்குனரான சக குழு உறுப்பினர் கேப்ரியேலா புச்சர், தடுப்பூசிகளின் நியாயமான விநியோகத்தின் "மிகப்பெரிய அவசரம்" மற்றும் பெரிய அளவிலான உற்பத்தியின் அவசியத்தை மேற்கோள் காட்டினார். தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான ஆதாரங்கள் "சில நிறுவனங்கள் மற்றும் ஒரு சில பங்குதாரர்களால் பதுக்கி வைக்கப்படுகின்றன" என்று அவர் கூறினார்.

நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான ஆப்பிரிக்கா மையங்களின் இயக்குனரான ஜான் என்கென்காசோங், கடந்த இரண்டு ஆண்டுகளில் "உலகளாவிய ஒத்துழைப்பு மற்றும் ஒற்றுமையின் மொத்த சரிவை" கண்டித்தார், ஆப்பிரிக்காவில் சிலருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டிருப்பது "முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று அவர் கூறினார். ஆப்பிரிக்காவின் 1.2 பில்லியன் மக்களில் 10% பேர் மட்டுமே முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளனர் என்று அவரது நிறுவனம் கூறுகிறது.

தடுப்பூசிகள் கிடைத்தால், 80% ஆப்பிரிக்கர்கள் தடுப்பூசிகளைப் பெறத் தயாராக இருப்பதாக ஆய்வுகளை மேற்கோள் காட்டி, ஆப்பிரிக்காவில் தடுப்பூசி தயக்கம் பரவலாக உள்ளது என்ற நம்பிக்கையை சிலரிடையே குறைக்க ஜான் என்கென்காசோங் முயன்றார்.

தொற்றுநோய் சுகாதாரக் கவலைகளால் ஒத்திவைக்கப்பட்ட வருடாந்திர உலகப் பொருளாதார மன்றக் கூட்டத்திற்கு மாற்றான ஆன்லைன் கலந்துரையாடலின் இரண்டாவது நாளில் இந்த கருத்துகள் வந்துள்ளன.

நிகழ்வின் உரைகளில், இஸ்ரேலிய பிரதமர் நஃப்தலி பென்னட் போன்ற உலகத் தலைவர்கள் தொற்றுநோய்க்கான அணுகுமுறைகளைப் பற்றி விவாதித்தனர். பரவலான தடுப்பூசி பிரச்சாரத்தை விரைவாக முன்னெடுத்த தனது நாடு, கொரோனாவுக்கு எதிராக "மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளில் முன்னணியில்" இருக்கும் ஒரு உத்தியைக் கொண்டுள்ளது என்று அவர் கூறினார்.

இஸ்ரேலின் சுகாதார அமைச்சகம், 62% மக்களுக்கு பூஸ்டர் ஷாட்கள் உட்பட முழுமையாக தடுப்பூசி போடப்பட்டதாக கூறுகிறது.

இஸ்ரேலில் மேம்பட்ட ஆராய்ச்சியை மேற்கோள் காட்டி, "தடுப்பூசிகள் மற்றும் புதிய மாறுபாடுகள் ஒன்றுக்கொன்று எவ்வாறு பதிலளிக்கின்றன என்பதை அறிய நாங்கள் உலகில் முதல்வராக இருக்க விரும்புகிறோம்." என்று பென்னட் கூறினார்.

ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடா, முதியவர்கள் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்களைக் காப்பதை சமூகம் மதிப்பதால், தனது நாட்டில் அதிக அளவிலான தடுப்பூசிகள் போடப்படுவதாகக் கூறினார். பிப்ரவரி இறுதி வரை கடுமையான எல்லைக் கட்டுப்பாடுகளை வைத்திருக்க ஜப்பானிய பிரதமர் திட்டமிட்டுள்ளார்.

பொருளாதாரத்தை திறந்த நிலையில் வைத்திருப்பதன் மூலம் கட்டுப்பாடுகளை சமப்படுத்த முயற்சிப்பதாக ஜப்பானிய பிரதமர் கூறினார், ஆனால் "ஓமிக்ரான் மாறுபாட்டிற்கு எதிரான பூஜ்ஜிய கொரோனா கொள்கை சாத்தியமில்லை அல்லது பொருத்தமானது அல்ல." என்றும் ஜப்பானிய பிரதமர் கூறினார்.

செவ்வாயன்று ஒரு தனி செய்தியாளர் சந்திப்பில், WHO டைரக்டர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், ஓமிக்ரான் மாறுபாடு "உலகைத் தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது" என்று கூறினார், கடந்த வாரம் 18 மில்லியன் புதிய கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Corona Virus Who
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment