Advertisment

உக்ரைன் விவகாரம்; ஐ.நா.,வில் ரஷ்யாவுக்கு எதிராக முதன்முறையாக வாக்களித்த இந்தியா

உக்ரைன் விவகாரம் தொடர்பாக UNSCல் நடந்த "செயல்முறை வாக்கெடுப்பின்" போது, ரஷ்யாவிற்கு எதிராக முதல் முறையாக இந்தியா வாக்களித்தது; இந்தக் கூட்டத்தில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் உரையாற்றினார் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி

author-image
WebDesk
New Update
உக்ரைன் விவகாரம்; ஐ.நா.,வில் ரஷ்யாவுக்கு எதிராக முதன்முறையாக வாக்களித்த இந்தியா

In a first, India votes against Russia in UNSC during procedural vote on Ukraine: உக்ரைன் விவகாரம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் (UNSC) நடந்த "செயல்முறை வாக்கெடுப்பின்" போது, ​​ ரஷ்யாவிற்கு எதிராக முதல் முறையாக இந்தியா வாக்களித்தது, அதனையடுத்து, 15 உறுப்பினர்களைக் கொண்ட சக்திவாய்ந்த ஐ.நா அமைப்பு, உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கியை வீடியோ டெலி கான்பரன்ஸ் மூலம் உரையாற்ற அழைத்தது.

Advertisment

பிப்ரவரியில் ரஷ்ய ராணுவ நடவடிக்கை தொடங்கிய பிறகு, உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவுக்கு எதிராக இந்தியா வாக்களித்தது இதுவே முதல்முறை. இதுவரை, உக்ரைன் தொடர்பான ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா கலந்து கொள்ளாமல் இருந்து வந்தது, இது அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய சக்திகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.

இதையும் படியுங்கள்: 2023-ம் ஆண்டுக்கான H-1B விசா வரம்பை அடைந்து விட்டதாக அமெரிக்கா அறிவிப்பு… உலகச் செய்திகள்

அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவின் படையெடுப்பைத் தொடர்ந்து பெரிய பொருளாதார மற்றும் பிற தடைகளை விதித்துள்ளன.

உக்ரைனுக்கு எதிரான படையெடுப்புக்கு ரஷ்யாவை இந்தியா விமர்சிக்கவில்லை. அதேநேரம், ரஷ்யா மற்றும் உக்ரைன் தரப்புகளுக்கு இராஜதந்திரம் மற்றும் உரையாடலின் பாதைக்குத் திரும்புமாறு இந்தியா பலமுறை அழைப்பு விடுத்துள்ளது, மேலும் இரு நாடுகளுக்கும் இடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அனைத்து இராஜதந்திர முயற்சிகளுக்கும் தனது ஆதரவை இந்தியா வெளிப்படுத்தியது.

தற்போது டிசம்பரில் முடிவடைய உள்ள இரண்டு வருட காலத்திற்கு UNSC யின் நிரந்தர உறுப்பினராக இந்தியா உள்ளது.

புதன்கிழமை, உக்ரைன் சுதந்திரத்தின் 31 வது ஆண்டு விழா அன்று, ஆறு மாதங்களாக நடந்து வரும் மோதலை ஆய்வு செய்ய UNSC ஒரு கூட்டத்தை நடத்தியது.

கூட்டம் தொடங்கியதும், ஐ.நா.வுக்கான ரஷ்ய தூதர் வசிலி.ஏ.நெபென்சியா, வீடியோ டெலி கான்பரன்ஸ் மூலம் கூட்டத்தில் உக்ரைன் ஜனாதிபதி பங்கேற்பது தொடர்பான நடைமுறை வாக்கெடுப்பை கோரினார்.

நெபென்சியா மற்றும் அல்பேனியாவைச் சேர்ந்த ஃபெரிட் ஹோக்ஷா ஆகியோரின் அறிக்கைகளைத் தொடர்ந்து, நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 13 பேர் ஆதரவாக வாக்களித்த நிலையில் கவுன்சில் வீடியோ டெலி-கான்பரன்ஸ் மூலம் கூட்டத்தில் பங்கேற்க ஜெலென்ஸ்கிக்கு அழைப்பு விடுத்தது. அத்தகைய அழைப்பிற்கு எதிராக ரஷ்யா வாக்களித்தது, சீனா வாக்களிக்கவில்லை.

ஜெலென்ஸ்கியின் பங்கேற்பை ரஷ்யா எதிர்க்கவில்லை, ஆனால் அத்தகைய பங்கேற்பு நேரில் இருக்க வேண்டும் என்று நெபென்சியா வலியுறுத்தினார். மேலும், கொரோனா தொற்றுநோய்களின் போது, ​​கவுன்சில் வீடியோ கான்பரென்ஸ் மூலம் வேலை செய்ய முடிவு செய்தது, ஆனால் அத்தகைய கூட்டங்கள் முறைசாரா கூட்டங்கள் மற்றும் தொற்றுநோயின் உச்சத்திற்குப் பிறகு, கவுன்சில் பழைய நடைமுறை விதிகளுக்குத் திரும்பியது, என்றும் அவர் வாதிட்டார்.

வீடியோ டெலி கான்பரன்ஸ் மூலம் ஜனாதிபதி பங்கேற்பது குறித்து தனது நாட்டின் ஆட்சேபனை குறிப்பாக உள்ளது என்பதை மீண்டும் வலியுறுத்திய நெபென்சியா, இந்த விஷயத்தில் ஒரு நடைமுறை வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுத்தார், அதற்கு இந்தியாவும் மற்ற 12 நாடுகளும் உடன்படவில்லை மற்றும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் கவுன்சிலில் உரையாற்ற ஜெலென்ஸ்கியை ஆதரித்தன.

அல்பேனியாவின் ஹோக்ஷா, உக்ரைன் போரில் ஈடுபட்டுள்ளதாகவும், அந்நாட்டின் நிலைமைக்கு ஜனாதிபதி அங்கு இருக்க வேண்டும் என்றும் வாதிட்டார். இந்த தனித்துவமான சூழ்நிலையின் காரணமாக, வீடியோ டெலி-கான்பரன்ஸ் மூலம் ஜெலென்ஸ்கியின் பங்கேற்பை அவர் ஆதரித்தார் மற்றும் மற்ற உறுப்பினர்களையும் அவ்வாறு செய்ய வலியுறுத்தினார்.

கவுன்சில் உறுப்பினர்கள் அமைப்பின் விதிகளுக்கு இணங்குவதற்கு எதிராக பேசியதற்கு நெபென்சியா வருத்தம் தெரிவித்தார். "உக்ரைனின் மேற்கத்திய ஆதரவாளர்களின் தர்க்கத்தை நாம் புரிந்து கொள்ள முடியும்…," என்று அவர் கூறினார், மேலும், கவுன்சிலின் அடித்தளம் மற்றும் நடைமுறைகள் சிதைவதற்கு மற்ற உறுப்பினர்கள் பங்களித்ததற்காக அவர் ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார்.

இதன்பிறகு சிறிது நேரத்தில், வீடியோ கான்பரெஸ் மூலம் இணைந்த ஜெலன்ஸ்கி தனது கருத்துக்களில், உக்ரைனுக்கு எதிரான ஆக்கிரமிப்பு குற்றங்களுக்கு ரஷ்ய கூட்டமைப்பு பொறுப்புக்கூற வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். "ரஷ்யாவை இப்போது நிறுத்தவில்லை என்றால், இந்த ரஷ்ய கொலைகாரர்கள் அனைவரும் தவிர்க்க முடியாமல் மற்ற நாடுகளிலும் படையெடுப்பார்கள்," என்று அவர் கூறினார்.

"உக்ரைன் பிரதேசத்தில் தான் உலகின் எதிர்காலம் தீர்மானிக்கப்படும்" என்று ஜெலன்ஸ்கி கூறினார். "எங்கள் சுதந்திரம் உங்கள் பாதுகாப்பு," என்று அவர் UNSCயிடம் கூறினார்.

ஜபோரிஜியா அணுமின் நிலையத்தை போர் மண்டலமாக மாற்றியதன் மூலம் ரஷ்யா உலகை அணுசக்தி பேரழிவின் விளிம்பில் நிறுத்தியுள்ளது என்று ஜெலென்ஸ்கி குற்றம் சாட்டினார். ஆலையில் ஆறு உலைகள் உள்ளன, அதில் செர்னோபில் ஒன்று மட்டுமே வெடித்தது. இதனால், சர்வதேச அணுசக்தி நிறுவனம் (IAEA) விரைவில் நிலைமையை நிரந்தரமாக கட்டுப்படுத்த வேண்டும், என்றார்.

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ரஷ்யா தனது "அணுசக்தி அச்சுறுத்தலை" நிறுத்துமாறும் ஆலையிலிருந்து முழுமையாக வெளியேறுமாறும் அழைப்பு விடுத்தார்.

ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், ஜபோரிஜியா அணுமின் நிலையத்திலும் அதைச் சுற்றியுள்ள நிலைமை குறித்தும் மிகுந்த கவலையை வெளிப்படுத்தினார், "எச்சரிக்கை விளக்குகள் ஒளிர்கின்றன" என்பதை அடிக்கோடிட்டுக் காட்டினார்.

ஆலையின் கட்டிட பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவிக்கும் எந்தவொரு நடவடிக்கையும் ஏற்றுக்கொள்ள முடியாதது, நிலைமையை மேலும் அதிகரிப்பது சுய அழிவுக்கு வழிவகுக்கும், என்று கூறினார். மேலும் ஆலையின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், முற்றிலும் சிவிலியன் உள்கட்டமைப்பாக மீண்டும் நிறுவப்பட வேண்டும் மற்றும் IAEA விரைவில் அந்த இடத்திற்கு ஒரு பணியை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.

சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் குறித்தும் அன்டோனியா குட்டரெஸ் கவலை தெரிவித்தார்.

ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் லிண்டா தாமஸ் கிரீன்ஃபீல்ட், "ரஷ்யாவின் இலக்கு எப்போதும் போல் தெளிவாக உள்ளது: உக்ரைனை ஒரு புவிசார் அரசியல் அமைப்பாக அகற்றி, உலக வரைபடத்தில் இருந்து அதை அழிக்க வேண்டும்,” என்று கூறினார்.

மேலும், "அதன் தவறான தகவல் பிரச்சாரங்கள் உக்ரேனிய பிரதேசத்தை இணைப்பதற்கான மேலும் முயற்சிகளுக்குத் தயாராகும் வகையில் ஆயுதமாக்கப்படுகின்றன," என்றும் அவர் கூறினார்.

எவ்வாறாயினும், உக்ரைனின் எல்லைகளை வலுக்கட்டாயமாக மாற்றும் ரஷ்யாவின் முயற்சியை சர்வதேச சமூகம் ஒருபோதும் அங்கீகரிக்காது என்று அவர் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் தெரிவித்தார்.

ஜபோரிஜியா அணுமின் நிலையத்தில் அணுசக்தி பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பில் உக்ரைன் தவிர்க்க முடியாத சாதனை படைத்துள்ளது என்று குறிப்பிட்ட அவர், ரஷ்ய கூட்டமைப்பு பொறுப்பற்ற முறையில் தாக்கி அந்த தளத்தை பலத்தால் கைப்பற்றி, அணுசக்தி பேரழிவை ஆபத்தில் ஆழ்த்தியது.

ரஷ்ய கூட்டமைப்பின் தொலைதூரப் பகுதிகளுக்கு உக்ரேனிய குடிமக்களை முறையாக மற்றும் கட்டாயமாக நாடு கடத்துவதை உள்ளடக்கிய ரஷ்யாவின் "வடிகட்டுதல் நடவடிக்கை" பற்றி அமெரிக்க தூதர் கவலை தெரிவித்தார்.

பிரான்ஸ், அயர்லாந்து, நார்வே, இங்கிலாந்து, காபோன், கானா, மெக்சிகோ மற்றும் சீனா ஆகிய நாடுகளின் தூதர்களும், ஐரோப்பிய ஒன்றியத்தின் பார்வையாளர்களாகவும் இந்த நிகழ்வில் பேசினர்.

உக்ரைன் தனது சுதந்திர தினத்தை புதன்கிழமை கொண்டாடியது, இது பிப்ரவரி 24 அன்று நாட்டிற்கு எதிரான ரஷ்யாவின் இராணுவத் தாக்குதல் தொடங்கி சரியாக ஆறு மாதங்களைக் குறிக்கிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Ukraine Russia
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment