Advertisment

குழந்தைகளின் ஆபாசப் படங்களை லேப் டாப்-பில் வைத்திருந்த இந்தியருக்கு 4 ஆண்டு சிறை: அமெரிக்கா அதிரடி

நான்காண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது அமெரிக்க நீதிமன்றம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
child abuse imagery

child abuse imagery

அபிஜித் தாஸ் என்ற 28 வயது இந்திய இளைஞர் அமெரிக்காவில் இருக்கும் பிட்ஸ்பெர்க்கில் வாழ்ந்து வருகிறார்.

Advertisment

சட்டத்திற்கு புறம்பாக அவருடைய கணினியில் பாலியல் இச்சை அளிக்கும் வகையிலான குழந்தைகளின் ஆபாசப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைத்திருப்பது கண்டறியப்பட்டது.

அவர் மீது இது தொடர்பாக வழக்கு பதியப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. அதில் அவருடைய கணினியில் சுமார் 1000ற்கும் மேற்பட்ட ஆபாசப் புகைப்படங்கள் மற்றும் 380 வீடியோ பதிவுகள் வைக்கப்பட்டிருப்பது பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனை விசாரித்து இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதி ஸ்காட் பிராடி, அபிஜித் தாஸ்ஸிற்கு 4 ஆண்டுகள் (52 மாதங்கள்) தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

அமெரிக்கா மற்றும் கனடா போன்ற நாடுகளில் இது போன்று ப்ரோனோகிராபி டேட்டக்களை வைத்திருப்பதோ, பார்ப்பதோ சட்டப்படி குற்றமாகும். அதற்கான தண்டனைகளும் கடுமையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

America
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment