Advertisment

இந்தியாவின் தலைமையின் கீழ் தாலிபான்கள் மீதான தீர்மானத்தை ஏற்றுக்கொண்ட UNSC; சீனா, ரஷ்யா புறக்கணிப்பு

India in chair, UNSC adopts resolution on Taliban; Russia and China abstain: தாலிபான்கள் மீதான தீர்மானத்தை ஏற்றுக்கொண்ட UNSC; இந்தியா, பிரான்ஸ், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆதரவு

author-image
WebDesk
New Update
இந்தியாவின் தலைமையின் கீழ் தாலிபான்கள் மீதான தீர்மானத்தை ஏற்றுக்கொண்ட UNSC; சீனா, ரஷ்யா புறக்கணிப்பு

காபூலில் இருந்து கடைசி அமெரிக்க சிப்பாய் வெளியேறும்போது, ​​ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில், இந்தியாவின் தலைமையின் கீழ், ஆப்கானிஸ்தானில் தாலிபான்களை ஒரு உண்மையான அரசாக அங்கீகாரம் அளிக்கும் ஒரு தீர்மானத்தை ஏற்றுக்கொண்டது.

Advertisment

பிரான்ஸ், இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது, இந்தியா உட்பட 13 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர், எதிராக யாரும் வாக்களிக்கவில்லை. ஆனால் நிரந்தர மற்றும் வீட்டோ அதிகாரம் கொண்ட உறுப்பினர்களான ரஷ்யாவும் சீனாவும் வாக்களிப்பதில் இருந்து விலகினர்.

ஆகஸ்ட் 15 அன்று காபூலை தாலிபான்கள் கைப்பற்றிய பிறகு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் முதலில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானம், ஆப்கானிஸ்தானின் பிரதேசம் எந்த நாட்டையும் அச்சுறுத்துவதற்கோ அல்லது பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கவோ பயன்படுத்தப்பட கூடாது என்றும், ஆப்கானியர்கள் மற்றும் அனைத்து வெளிநாட்டினரும் பாதுகாப்பாகவும் ஒழுங்காகவும் வெளியேறுவது குறித்து தாலிபான்கள் தங்கள் கடமைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் செய்யப்பட்டது.

இந்தியாவின் தலைமை பதவி செவ்வாய்க்கிழமை முடிவடைந்தது. தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்ட அமர்வுக்கு வெளியுறவு செயலாளர் ஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லா தலைமை தாங்கினார். ஆப்கானிஸ்தான் பிரதேசம் எந்த நாட்டையும் அச்சுறுத்துவதற்கோ அல்லது தாக்குதல் நடத்துவதற்கோ, பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கவோ பயன்படுத்தக்கூடாது என்பதை தீர்மானம் தெளிவற்ற முறையில் உணர்த்துகிறது, இது "இந்தியாவுக்கு நேரடி முக்கியத்துவம்" வாய்ந்தது என்று அவர் கூறினார். மேலும், இதனை சர்வதேச சமூகம் காபூலில் இருந்து எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

UNSC தீர்மானம் தாலிபான்களை ஐந்து முறை பெயரிட்டது, ஆனால் அந்த அமைப்பைக் கண்டிக்கவில்லை. மாறாக, ஆப்கானிஸ்தானில் இருந்து ஆப்கான் மற்றும் அனைத்து வெளிநாட்டினரும் பாதுகாப்பான மற்றும் ஒழுங்கான முறையில் வெளியேறுவது குறித்த தாலிபான்களின் "கடமைகளை" தீர்மானம் "குறிப்பிட்டது".

மனிதாபிமான அணுகலைப் பராமரித்தல், மனித உரிமைகளை நிலைநிறுத்துதல், உள்ளடக்கிய அரசியல் தீர்வை எட்டுதல் மற்றும் பயங்கரவாதத்தை எதிர்ப்பது ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் தீர்மானம் வலியுறுத்தியது.

எவ்வாறாயினும், தாலிபான்கள் தங்கள் கடமைகளை பின்பற்ற தவறினால் தண்டிப்பதைப் பற்றி தீர்மானம் எதுவும் குறிப்பிடவில்லை.

ஐநாவுக்கான ரஷ்யாவின் தூதுவர் வாசிலி நெபென்ஸியா, இந்தத் தீர்மானத்தில் பயங்கரவாத அச்சுறுத்தல்களைப் பற்றி போதுமானதாக இல்லை, ஆப்கானியர்களை வெளியேற்றும் விளைவு பற்றி பேசவில்லை மற்றும் தாலிபான்கள் கையகப்படுத்தியதைத் தொடர்ந்து வாஷிங்டன், ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தின் அமெரிக்க கணக்குகளை முடக்கிய பொருளாதார மற்றும் மனிதாபிமான விளைவுகளை பற்றி பேசவில்லை. என்று கூறினார்.

ஆப்கானிஸ்தான் மீதான தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பின் போது ரஷ்யா "கட்டாயமாக" விலகியதாக நெபென்ஸியா கூறினார், ஏனெனில் "தீர்மான வரைவின் ஆசிரியர்கள் எங்கள் கொள்கை ரீதியான கவலைகளை புறக்கணித்தனர்" என்று நெபென்ஸியா குறிப்பிட்டார்.

ரஷ்யாவின் சில கவலைகளை சீனா பகிர்ந்துகொண்டது மற்றும் ட்ரோன் தாக்குதலில் பொதுமக்கள் பலியானது மற்றும் பல ஐஎஸ் தற்கொலைப்படை குண்டுவீச்சாளர்கள் சென்ற வாகனத்தை அமெரிக்க ராணுவம் தாக்கியது ஆகியவற்றிற்காக சீனா அமெரிக்காவை விமர்சித்தது. தற்போதைய குழப்பம் மேற்கத்திய நாடுகளின் "ஒழுங்கற்ற விலகலின்" நேரடி விளைவு என்று சீனா கூறியது.

சீனத் தூதர் கெங் ஷுவாங், சம்பந்தப்பட்ட நாடுகள் கடந்த வெள்ளிக்கிழமை வரைவுத் தீர்மானத்தை விநியோகித்ததாகக் கூறி, திங்களன்று நடவடிக்கை எடுக்கக் கோரினர். "ஆப்கானிஸ்தானின் உள்நாட்டு சூழ்நிலையில் அடிப்படை மாற்றங்களை செய்ய, சர்வதேச சமூகம் தாலிபான்களுடன் ஈடுபடுவது அவசியம், மேலும் அவர்களுக்கு வழிகாட்டுதல்களை தீவிரமாக வழங்க வேண்டும்" என்று அவர் கூறினார்.

வாக்களித்த பிறகு, அமெரிக்க தூதர் லிண்டா தாமஸ்-கிரீன்ஃபீல்ட் கூறினார்: "நாங்கள் ஒரு முழு நாட்டையும் பாதுகாப்பாக விமானத்தில் கொண்டு செல்ல முடியாது. இராஜதந்திரம் முன்னேற வேண்டிய தருணம் இது. ரஷ்யா மற்றும் சீனாவின் புறக்கணிப்புகள் குறித்து அவர் ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார்.

பிரான்சின், காபூலில் "மனிதாபிமான நடவடிக்கைகளைத் தொடர அனுமதிக்கும்" பாதுகாப்பான மண்டலம் "என்ற முன்மொழிவு இறுதித் தீர்மானத்தின் ஒரு பகுதியாக இல்லை என்றாலும், ஐக்கிய நாடுகள் சபைக்கு" முழுமையான, பாதுகாப்பான மற்றும் தடையற்ற அணுகலை "அனுமதிக்க தாலிபான்களை அழைத்தது. பிற ஐ.நா. நிறுவனங்கள் மனிதாபிமான உதவிகளை வழங்குகின்றன.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India Afghanistan Taliban
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment