Advertisment

இலங்கை தமிழர்கள் விவகாரம் : மோடியின் தயவை நாடும் தமிழ் தேசிய கூட்டமைப்பு

இலங்கை தமிழர்கள் விவகாரத்தில் தீர்வு காணும் பொருட்டு, இந்திய பிரதமர் மோடியின் தயவை, தமிழர் தேசிய கூட்டமைப்பு பெறும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
srilanka, tamizhar issue, india, primeminister, modi, tamil thesiya kootamaippu, sambhanthan, president sirisena, இலங்கை, தமிழர் விவகாரம், இந்தியா, பிரதமர் , மோடி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, சம்பந்தன், அதிபர் சிறிசேன

srilanka, tamizhar issue, india, primeminister, modi, tamil thesiya kootamaippu, sambhanthan, president sirisena, இலங்கை, தமிழர் விவகாரம், இந்தியா, பிரதமர் , மோடி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, சம்பந்தன், அதிபர் சிறிசேன

இலங்கையில் தமிழர்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்னைகள், அரசியல் தீர்வு உள்ளிட்ட விவகாரம் தொடர்பாக, இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண, சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பு, நாளை, (ஜூன் 9ம் தேதி) கொழும்புவில், மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்திய பிரதமர் மோடி, மாலத்தீவு சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு இந்தியா திரும்பும் வழியில் இலங்கை செல்ல உள்ளார். இலங்கை அதிபர் சிறிசேனவின் அழைப்பை ஏற்று இலங்கை செல்லும் மோடிக்கு, அங்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

மோடி, அங்கு அதிபர் சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே, எதிர்க்கட்சி தலைவர் மஹிந்தா ராஜபக்ஷே, சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பினர் உள்ளிட்டோர்களை சந்தித்துப் பேசவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Narendra Modi Srilanka
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment