Advertisment

ஹைதராபாத் நிஜாமின் 35 மில்லியன் பவுண்ட் நிதி: இங்கிலாந்து கோர்ட்டில் பாகிஸ்தான் கோரிக்கை நிராகரிப்பு

Nizam fund dispute, Pakistan loses UK court case: 1948 ஆம் ஆண்டு ஐதராபாத் நிஜாம், பாகிஸ்தானின் துணை தூதருக்கு அனுப்பிய 1 மில்லியன் பவுண்ட் தொகைக்கு, உரிமை கோரிய பாகிஸ்தானின் கோரிக்கையை இங்கிலாந்து நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Nizam fund dispute, india pakistan nizam funds dispute, nizam vii of hyderabad, hyderabad nizam funds,ஐந்தராபாத் நிதி வழக்கு, இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து நீதிமன்றம் india-pakistan ties, uk high court, india news, Tamil indian express

Nizam fund dispute, india pakistan nizam funds dispute, nizam vii of hyderabad, hyderabad nizam funds,ஐந்தராபாத் நிதி வழக்கு, இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து நீதிமன்றம் india-pakistan ties, uk high court, india news, Tamil indian express

Nizam fund dispute, Pakistan loses UK court case: 1948 ஆம் ஆண்டு ஐதராபாத் நிஜாம், பாகிஸ்தானின் துணை தூதருக்கு அனுப்பிய 1 மில்லியன் பவுண்ட் தொகைக்கு, உரிமை கோரிய பாகிஸ்தானின் கோரிக்கையை இங்கிலாது நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Advertisment

1947-இல் பிரிவினை நேரத்தில் ஐதராபாத் நிஜாமிற்கு சொந்தமான 35 மில்லியன் பவுண்டுகள் விவகாரம் தொடர்பான 70 ஆண்டுகள் பழமையான சட்டப் பிரச்னையில், உஸ்மான் அலிகானின் குடும்பத்திற்கு ஆதரவாக தீர்ப்பளிப்பதற்கான பாகிஸ்தானின் கருத்துகளை இங்கிலாந்து உயர் நீதிமன்றம் புதன் கிழமை தள்ளுபடி செய்துள்ளது.

இந்த சர்ச்சையின் மையப் புள்ளி 1,007,940 பவுண்டுகள் மற்றும் ஒன்பது ஷில்லிங் ஆக இருந்தது. இது 1948 ஆம் ஆண்டில் ஐதராபாத்தின் நிஜாம் உஸ்மான் அலிகானால் பிரிட்டனில் புதிதாக உருவாக்கப்பட்ட பாகிஸ்தானின் தூதருக்கு (ஹைக் கமிஷனர்) மாற்றப்பட்டது.

அந்த தொகை 35 மில்லியன் பவுண்டுகளாக வளர்ந்துள்ளது. அதே போல, நிஜாமின் சந்ததிகளும் வளர்ந்துள்ளனர். ஐதராபாத்தின் எட்டாவது நிஜாம் என்ற பெயரில் இளவரசர் முகர்ரம் ஜா மற்றும் இந்தியாவுடன் கைகோர்த்த அவரது இளைய சகோதரர் முபாகம் ஜாஹே, இது தங்களுக்கு சொந்தமானது என்று கூறிக்கொண்டபோது, அதற்கு எதிராக ​​இஸ்லாமாபாத் அது அவர்களுடையது என்று உரிமை கோரியது. இந்த நிதி தற்போது லண்டனில் உள்ள தேசிய வெஸ்ட்மின்ஸ்டர் வங்கியில் உள்ளது.

லண்டனில் உள்ள ராயல் கோர்ட்டில் தனது தீர்ப்பை உச்சரித்த நீதிபதி மார்கஸ் ஸ்மித் இவ்வாறு தீர்ப்பளித்துள்ளார்: “ ஏழாவது நிஜாம் இந்த நிதிக்கான பலனைப் பெறலாம். ஏழாம் நிஜாமை உரிமை கோரும் இளவரசர்கள் மற்றும் இந்தியாவுக்கு உரிமை கோருபவர்கள் தங்கள் உத்தரவுக்குத் தொகையை செலுத்த உரிமை உண்டு” என்று தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த தீர்ப்பில்: அரசின் கொள்கைப்படி வெளிநாட்டு சட்டம் மற்றும் சட்டவிரோதம் என்ற அடிப்படையில் அதை நடைமுறைப்படுத்த முடியாது என்ற காரணத்தால் பாகிஸ்தானின் நியாயமற்ற கருத்துகள் இரண்டுமே தோல்வியடைகின்றன.

இந்த நிதி 1950களில் ஆரம்பகால நடவடிக்கைகளுக்கு உட்பட்டது. இதில் இங்கிலாந்து பிரபுக்கள் அவை ஏழாம் நிஜாமால் கொண்டுவரப்பட்ட நடவடிக்கைகளை ஒதுக்கி வைத்தது. பாகிஸ்தான் அரசு அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நிதியைக் கோரியது. இருப்பினும், 2013 ஆம் ஆண்டில், தற்போதைய வழக்கு தொடர வழிவகை செய்து நிதிக்கான உரிமை கோரலை வெளியிடுவதன் மூலம் பாகிஸ்தான் இறையாண்மையைக் குறைத்தது.

“நீதிபதி ஸ்மித்தின் தீர்ப்பு ஒரு சிக்கலான வரலாற்று மற்றும் சட்ட சிக்கல்களை உள்ளடக்கியது. இந்த நிதி 70 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த உண்மைகள் மற்றும் நிகழ்வுகளை விளக்குகிறது. அது இப்போது 35 மில்லியனாக உள்ளது. நம்முடைய வாடிக்கையாளரின் தாத்தா ஏழாம் நிஜாம் எப்போதும் இதில் நம்பிக்கை வைத்திருந்தார். இந்த தீர்ப்பு நியாயத்தன்மை குறித்த முக்கியமான கண்டுபிடிப்புகளையும் செய்கிறது… மேலும், உரிமை கோருபவர் ஒரு தேசிய அரசு அறங்காவலராக இருக்க முடியுமா” என்று வித்தர்ஸ் எல்.எல்.பி-யின் பங்குதாரரான பால் ஹெவிட், எட்டாவது நிஜாம் சார்பாக இந்த வழக்கை எதிர்த்துப் போராடுகிறது என்று பி.டி.ஐ. கூறுகிறது.

தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த பாகிஸ்தானின் வெளியுறவு அலுவலகம், இந்த வழக்கில் விரிவான தீர்ப்பைப் பார்த்த பின்னர் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளது. விரிவான தீர்ப்பின் அனைத்து அம்சங்களையும் பாகிஸ்தான் உன்னிப்பாக ஆராய்ந்து வருகிறது என்றும் மேலும், சட்ட ஆலோசனை பெறப்பட்டு மேற்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாகிஸ்தான் வெளியுறவு அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

பாக்கிஸ்தானின் சட்டக் குழு இரண்டு மாற்று தளங்களில் இந்த நிதியைக் கோரியது - ஒன்று, “பணத்திற்கான ஆயுதங்கள்” என்று குறிப்பிடப்படுகிறது. இது ஆயுதங்களை வாங்குவது போக்குவரத்து செய்வது உள்ளிட்ட செலவுகளை ஈடு செய்வதற்கு வழங்க இந்த நிதி மாற்றப்பட்டதாகக் கூறியது.

“இந்தியா சட்டவிரோதமாக ஐதராபாத்தை இணைத்தபோது ...” இடமாற்றத்தின் வரலாற்று சூழலை கணக்கில் எடுத்துக்கொள்ள இந்த தீர்ப்பு தவறிவிட்டதாக பாகிஸ்தான் வெளியுறவு அலுவலகம் குற்றம் சாட்டியுள்ளது.”

நிஜாம் குடும்பத்தினர் சமர்ப்பித்த ஆவணங்கள் நன்கு நிறுவப்பட்டிருப்பதாகவும், ஐதராபாத்தை இணைப்பதில் பாகிஸ்தான் கூறும் இயற்கையின் சட்டவிரோதம் இருந்தாலும், அது அந்தக் கூற்றுக்கு பொருத்தமற்றது என்றும் முடிவு செய்ததால், பாகிஸ்தானின் சட்டவிரோதக் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

India England Pakistan Hyderabad
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment