இந்துக்களை சிறுபான்மையினராகவும், முஸ்லிம்களை அதிகமாகவும் கொண்ட நாடு பாகிஸ்தான். இங்கு இந்துக்கள் உரிய பொறுப்புகளுக்கு வருவது அபூர்வம். கடந்த 2005-ல் ராணா பகவன்தாஸ், உச்சநீதி மன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
14 ஆண்டுகள் கடந்த நிலையில், தற்போது சுமான் குமாரி என்பவர் பாகிஸ்தானின் சிவில் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். அங்குள்ள சிந்து மாகாணத்தின் கம்பார் ஷாதட்கோட் மாவட்டத்தைச் சேர்ந்த கண் டாக்டர் பவன் குமாரின் இரண்டாவது மகள் தான் சுமான் குமாரி. சிந்து மகாணத்தில் சட்டப் படிப்பை முடித்த இவர், கராச்சி பல்கலைக்கழகத்தில் பட்ட மேற்படிப்பை முடித்தார்.
இதன் மூலம், முதல் இந்து பெண் நீதிபதியாக பாகிஸ்தானில் பணியாற்றப் போகும் பெருமை சுமானுக்குக் கிடைத்துள்ளது.