Advertisment

பனாமா பேப்பர்ஸ் விவகாரம்: பாக்., பிரதமருக்கு முற்றும் நெருக்கடி, தீர்ப்பு ஒத்தி வைப்பு

பனாமா பேப்பர்ஸ் விவகாரத்தில் பாகிஸ்தான் பிரதமருக்கு எதிரான விசாரணை முடிவடைந்த நிலையில், தீர்ப்பை ஒத்தி வைத்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

author-image
manik prabhu
புதுப்பிக்கப்பட்டது
New Update
Nawaz sharif

Nawaz sharif

பனாமா பேப்பர்ஸ் விவகாரத்தில் பாகிஸ்தான் பிரதமருக்கு எதிரான விசாரணை முடிவடைந்த நிலையில், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

உலகம் முழுவதும் அரசியல் முக்கியஸ்தர்கள், திரை நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் என பிரபலங்கள் பலர் தங்கள் கணக்கில் வராத சொத்துக்களை பனாமா நாட்டில் எவ்வளவு பதுக்கி வைத்திருக்கிறார்கள், எப்படி எல்லாம் வரி ஏய்ப்பு செய்துள்ளார்கள் என்ற தகவல் கசிந்து சர்ச்சையை கிளப்பியது. புலனாய்வு பத்திரிகையாளர்கள் சர்வதேச கூட்டமைப்பு (International Consortium of Investigative Journalism) இந்த தகவலை வெளியிட்டது.

கணக்கில் காட்டப்படாத கோடிக்கணக்கான சொத்துக்களை பிரபலங்கள் பனாமா நாட்டில் பதுக்குவதற்கு, அந்நாட்டின் மொசாக் பொன்சேகா என்ற சட்ட நிறுவனம் உதவியதும் அம்பலமானது.

இந்த பட்டியலில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், கால்பந்து வீரர் மெஸ்ஸி, எகிப்தின் முன்னாள் அதிபர் ஹொஸ்னி முபாரக், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், நடிகை ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட சுமார் 3 லட்சத்துக்கும் அதிமான நபர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இந்த பனாமா பேப்பர்ஸ் விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் பிரதமரிடம் விசாரணை நடத்த அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும், விசாரணை நடத்த சிறப்பு கூட்டு புலனாய்வுக் குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. இக்குழு முன்னிலையில், பாகிஸ்தான் பிரதமர், அவரது குடும்பத்தினர், அவருக்கு நெருக்கமான அதிகாரிகள் என அனைவரும் ஆஜராகி பதிலளித்தனர்.

சிறப்பு கூட்டு புலனாய்வுக் குழுவினரின் விசாரணை முடிவடைந்ததையடுத்து, இந்த குழுவினர் தங்களது விசாரணை அறிக்கையை அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் தாக்கல் செய்தனர். அதில், நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருப்பதாகவும், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், பிரதமர் நவாஸ் ஷெரீப் பதவி விலக வேண்டும் என எதிர்க் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. அவரது பதவியை பறிக்க வேண்டும் எனவும் அந்நாட்டு எதிர்க்கட்சிகள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இதனையடுத்து, அறிக்கையில் இடம்பெற்றிருக்கும் அம்சங்கள் அத்தனையும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் என பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் மறுத்துள்ளார். இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் என உச்ச நீதிமன்றத்தில் நான் நிரூபிப்பேன்" என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

நீதிபதி இஜாஸ் அப்சல் தலைமையில் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்து வந்தது. இந்நிலையில், பனாமா பேப்பர்ஸ் விவகாரத்தில் பாகிஸ்தான் பிரதமருக்கு எதிரான விசாரணை முடிவடைந்துள்ளது. இதனையடுத்து, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். தீர்ப்பை பொறுத்து நவாஸ் ஷெரீப்பின் பதவி பறிக்கப்படுமா இல்லையா என்பது தெரியவரும்.

கூட்டு விசாரணைக் குழுவினரின் அறிக்கையில் பல்வேறு நாடுகளுடன் மேற்கொண்ட கடிதத் தொடர்புகள், அங்கிருந்து பெற்ற ஆவணங்கள் உள்ளன. ரகசிய அறிக்கை என கூறப்பட்ட, அறிக்கையின் 10-வது தொகுதியில் இடம்பெற்றுள்ள அந்த விவரங்களின் நகல்களை நவாஸ் ஷெரீப்பின் வழக்கறிஞரிடம் வழங்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். பல்வேறு வி‌ஷயங்களை தெளிவுபடுத்த இது உதவும் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Nawaz Sharif Islamabad
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment