Afghanistan News Update : ஆப்கானிஸ்தாலின் தலிபான்கள் முழு அதிகாரத்தையும் கைப்பற்றிய நிலையில், அங்கிருந்து தப்பி ஓடிய அந்நாட்டின் அதிபர் அஷ்ரப் கனி தற்போது ஐக்கியஅரபு அமீரகத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் அரசுப்படைக்கும் தலிபான்களுக்கு இடையே பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த உள்நாட்டுப்போர் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இதுவரை அரசுப்படைக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த அமெரிக்க படைகள் தற்போது பின்வாங்கியதை தொடர்ந்து, தீவிரம் காட்டிய தலிபான்கள் ஆப்கானிஸ்தானின் முழு அதிகரத்தையும் கைப்பற்றினர். இதனைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி தனது குடும்பத்துடன் வெளிநாடு தப்பிச்சென்றுள்ளார்.
இந்நிலையில், தப்பிச்சென்ற அஷ்ரப் கனி ஓமனில் தஞ்சமடைந்தாக தகவல் வெளியான நிலையில் தற்போது அவர், தனது குடும்பத்துடன் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருப்பதாக அந்நாட்டு அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அஷ்ரப் கனி மற்றும் அவரது குடும்பத்தை "மனிதாபிமான அடிப்படையில் ஏற்றுக்கொண்டதாக ஐக்கிய அரபு அமீரகம் கூறியுள்ளது.
இது குறித்து வெளியான தகவலின் படி ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அரசு நடத்தும் டபிள்யூ ஏ ம் செய்தி நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், அஷ்ரப் கனி அமீரகத்தில் இருப்பதாக குறிப்பிட்டிருந்த நிலையில், நாட்டில் அவர் எந்த இடத்தில் இருக்கிறார் என்ற தகவல் கூறிப்படவில்லை. இந்த அறிக்கையில், அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகத்தை மேற்கோள் காட்டியது.
மூத்த தலிபான் தலைவர் முன்னாள் அதிபர் ஹமீத் கர்சாய் சந்திப்பு
தற்போது ஆப்கானிஸ்தானின முழு அதிகரத்தையும் தாலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில், புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான முயற்சிகளும் நடைபெற்று வருகிறது. இதற்கு மத்தியில், தலிபான் தளபதியும் ஹக்கானி நெட்வொர்க் தீவிரவாதக் குழுவின் மூத்த தலைவருமான அனஸ் ஹக்கானி, முன்னாள் ஜனாதிபதி ஹமீத் கர்சாயை இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை கைப்பற்றிய தலிபான்களின் முக்கிய பிரிவான ஹக்கானி நெட்வொர்க் பாகிஸ்தானுடனான எல்லையை அடிப்படையாகக் கொண்டது. இந்த நெட்வொர்க், சமீபத்திய ஆண்டுகளில் ஆப்கானிஸ்தானில் மிகக் கொடிய தீவிரவாதத் தாக்குதல்களில் குற்றம் சாட்டப்பட்டது.
காபூல் விமான நிலையத்தில் இருந்து வெளியேற்றம்
தலிபான்கள் முழு அதிகரத்தையம் கைப்பற்றியதால், அங்கு அசாதாரண சூழ்ல் நிலவி வரும் நிலையில், தலிபான்கள் பாதுகாப்பு அளிப்பதாக உறுதியளித்த போதிலும், ஆப்கானிஸ்தானில் இருந்து ராணுவ விமானங்களில் 2,200 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மற்றும் பிற பொதுமக்கள் வெளியேறி வருவதாக மேற்கத்திய பாதுகாப்பு அதிகாரி கூறியுள்ளார்.
1919 ல் பிரிட்டிஷ் ஆட்சி முடிவுக்கு வந்ததை நினைவுகூரும் வகையில் ஆப்கானிஸ்தான் சுதந்திர தினத்திற்கு ஒரு நாள் முன்னதாக டஜன் கணக்கான மக்கள் தேசியக் கொடியை உயர்த்த நகரத்தில் திரண்டனர். ஆனால் தலிபான்கள் தங்கள் கைப்பற்றிய பகுதிகளில் இஸ்லாமிய கல்வெட்டுடன் கூடிய வெள்ளை நிற தலிபான் கொடியை எழுப்பினர்.
இந்நிலையில், ஆப்கானிஸ்தான் வன்முறை தொடர்பாக தற்போது வெளியாகியுள்ள வீடியோ பதிவில், தலிபான்கள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுடுவது மற்றும் கூட்டத்தை கலைக்க மக்கள் மீது தடியடி நடத்தியது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளது. மேலும் உள்ளூர் செய்தி நிறுவனத்தின் நிருபர் பாப்ராக் அமீர்சாதா, அமைதியின்மையை மறைக்க முயன்றதால் அவரும் மற்றொரு ஏஜென்சியின் டிவி கேமராமேனும் தலிபான்களால் தாக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
#Taliban firing on protesters in Jalalabad city and beaten some video journalists. #Afghanidtan pic.twitter.com/AbM2JHg9I2
— Pajhwok Afghan News (@pajhwok) August 18, 2021
இது தொடர்பாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், கூறுகையில், ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றிய பிறகு பழிவாங்க மாட்டேன் என்று தலிபான்கள் கூறுவது உலகை நம்ப வைக்கும் முயற்சி. தலிபான்கள் அவர்களின் செயல்களால் தீர்மானிக்கப்படுவார்கள், அவர்களின் வார்த்தைகளால் அல்ல என கூறியுள்ளார். இங்கிலாந்து பாராளுமன்றத்தில் உரையாற்றிய, ஜான்சன் நாட்டில் எந்த இராணுவ நடவடிக்கையையும் மீண்டும் தொடங்குவதை விட ஒரு மனிதாபிமான முயற்சியை நடத்த வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபைக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும் இந்த ஆட்சியின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும் தேர்வுகள் மற்றும் அதன் வார்த்தைகள், பயங்கரவாதம், குற்றம், போதைப்பொருள் மீதான அணுகுமுறை மனிதாபிமானமின்னை, மற்றும் பெண்கள் கல்வி பெறுவதற்கான உரிமைகள் ஆகியவற்றின் அடிப்படையில் நாங்கள் தீர்ப்பளிப்போம் என்றும் ஜான்சன் குறிப்பிட்டுள்ளார்.
1990 களில் ஆப்கானிஸ்தானில் நடந்த உள்நாட்டுப் போரின் போது தங்களுக்கு எதிராக போராடிய ஷியா போராளிகளின் சிலையை தலிபான்கள் வெடித்துச் சிதறடித்ததாக சில புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி வருகினறன. இந்த சிலை 1996 ல் தலிபான்களால் கொல்லப்பட்ட போராளித் தலைவரான அப்துல் அலி மஜாரியை சித்தரித்தது, இஸ்லாமிய போராளிகள் போட்டியிடும் போர்வீரர்களிடமிருந்து அதிகாரத்தைக் கைப்பற்றினர். மசாரி ஆப்கானிஸ்தானின் இனமான ஹசாரா சிறுபான்மையினரின் முன்னணியில் இருந்தார்,
இந்த சிலை மத்திய பாமியான் மாகாணத்தில் இருந்தது, 1,500 ஆண்டுகள் பழமையான இரண்டு புத்தர் சிலைகளை 2001 ல் மலையில் செதுக்கினர், அமெரிக்க தலைமையிலான படையெடுப்புக்கு முன்னர், அவர்களை அதிகாரத்திலிருந்து விரட்டியது. புத்தர்கள் சிலை வழிபாட்டிற்கான இஸ்லாத்தின் தடையை மீறியதாக தாலிபான் கூறியது குறிப்பிடத்தக்கது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.