மத்திய அரசுப் பணியிடங்களை நிரப்புவதில் ஸ்டாப் செலக்சன் கமிஷன் எனப்படும் எஸ்.எஸ்.சி., அமைப்பு பெயர் பெற்றது. பொது எழுத்துத் தேர்வுகள் மற்றும் திறனறியும் தேர்வுகள் மூலம் காலிப்பணியிடங்களை நிரப்புகிறது. இந்த அமைப்பின் சார்பாக பிளஸ் 2 மற்றும் அதற்கு சமமான படிப்பை முடித்துவிட்டு அரசு வேலைக்கு காத்து இருப்பவர்களுக்கான பொது எழுத்துத் தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 3,259 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
காலியிடங்கள் : லோயர் டிவிஷன் கிளார்க் / ஜூனியர் சார்ட்டிங் அசிஸ்டன்ட் பிரிவில் 898 இடங்களும், போஸ்டல் அசிஸ்டன்ட்/ சார்ட்டிங் அசிஸ்டன்ட் பிரிவில் 2,359 இடங்களும், டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டரில் 2 இடங்களும் என மொத்தம் 3,259 இடங்கள் நிரப்பப்படுகின்றன.
வயது : 2018 ஆக., 1 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 18 - 27 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு உரிய வயது சலுகை உள்ளன.
கல்வித் தகுதி : விண்ணப்பிக்க விரும்புவர்கள் 2018 ஆக., 1 அடிப்படையில் பிளஸ் 2 அளவிலான படிப்பை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : www.ssconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். கட்டணம் 100 ரூபாய். ஸ்டேட் வங்கிக் கிளை மூலமோ அல்லது நெட் பேங்கிங், கிரெடிட் டெபிட் கார்டு வாயிலாகவோ செலுத்தலாம். பெண்கள் மற்றும் எஸ்.சி.,/ எஸ்.டி., மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினருக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.
தேர்வு மையம் : தமிழகத்தில் சென்னை, திருச்சி, கோவை, மதுரை, நெல்லை ஆகிய இடங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
தேர்ச்சி முறை : டையர் 1 மற்றும் டையர் 2 என இரண்டு கட்ட எழுத்துத்தேர்வு, பின் தட்டச்சு தேர்வு என்ற வகையில் தேர்ச்சி இருக்கும்.
விண்ணப்பிக்க கடைசி நாள் : 2017 டிச., 18.
மேலும் விபரங்களுக்கு www.ssc.nic.in எனும் தளத்தைப் பார்க்கவும்.