adulteration in food tips: நம்முடைய சமையல்களில் பயன்படுத்தப்படும் பல மசாலா பொருட்களில் கலப்படம் செய்யப்படுகிறது. அவற்றில் சில பொருட்களில் உள்ள கலப்படத்தை நம்மால் எளிதில் கண்டுபிடிக்க முடிகிறது என்றாலும் சில பொருட்களில் உள்ள கலப்படத்தை அறிய முடியாமல் போய்விடுகிறது.
இந்திய உணவு பாதுகாப்பு தர ஆணையம் (FSSAI) சமீபத்தில் கலப்படத்தை சோதிக்க எளிய பரிசோதனைகளை பகிர்ந்து வருகிறது. நீங்கள் பயன்படுத்தும் மிளகாய் தூள் செங்கல் தூள் அல்லது மணல் அல்லது டால்க் பொடியுடன் கலப்படமா என்பதை எவ்வாறு சரிபார்க்கலாம் என்பதை அரசு அமைப்பு அதன் சமீபத்திய பகிர்வில் குறிப்பிட்டுள்ளது.
கலப்பட மிளகாய்த்தூள் கண்டுபிடிக்க வழிகள்:
*ஒரு கிளாஸ் தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள்.
*அதில் ஒரு தேக்கரண்டி மிளகாய் தூள் சேர்க்கவும்.
*இப்போது தண்ணீரை பார்த்து அவற்றில் கலவை செய்யப்பட்டுள்ளதா என்பதை கவனிக்கவும்.
*உங்கள் உள்ளங்கையில் ஒரு சிறிய அளவு எச்சத்தை எடுத்து அதில் மிளகாய் தூள் சேர்த்து நன்கு தேய்க்கவும்.
*தேய்த்த பிறகு உங்களுக்கு கறைபடிந்தால், மிளகாய் தூள் செங்கல் பொடியுடன் கலக்கப்பட்டு இருக்கிறது. எச்சம் சோப்பு மற்றும் மென்மையாக உணர்ந்தால் அது சோப்புக்கல்லால் கலக்கப்படுகிறது என்று வெளிப்படும்.
இதோ சோதனை வீடியோ…
Is your Chilli powder adulterated with brickpowder/sand?#DetectingFoodAdulterants_8#AzadiKaAmritMahotsav@jagograhakjago @mygovindia @MIB_India @AmritMahotsav @MoHFW_INDIA pic.twitter.com/qZyPNQ3NDN
— FSSAI (@fssaiindia) September 29, 2021
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.