இருமுறை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தந்தை, பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்ட தாய். எனினும், கணவன் - மனைவியாக இருவரும் 47 ஆண்டுகளாக தங்களது சுக, துக்கங்களை ஒன்றாக அனுபவித்து வருகின்றனர். அப்படிப்பட்ட தம்பதியரின் அழகிய தருணங்களை அவர்களுடைய மகள் புகைப்படங்களாக எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.
Advertisment
மார்வின் புரூவிங்டன் - வாண்டா இருவரும்தான் அத்தம்பதியர். 1970-ஆம் ஆண்டில் கடும் போராட்டங்களுக்கு பின் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். ஆனால், இருவருமே தொடர்ந்து உயிர்கொல்லி நோய்களுக்கு ஆட்பட்டனர். திருமணமாகி மூன்றே ஆண்டுகளில், வாண்டாவுக்கு மல்டிபிள் ஸ்கிளிரோசிஸ் நோய் ஏற்பட்டது. அதன்பின், மார்வினுக்கு 1987-ஆம் ஆண்டில் பெருங்குடல் புற்றுநோயும், 2013-ஆம் ஆண்டு விந்துப்பை புற்றுநோயும் ஏற்பட்டது. மார்வின் தான் வாழ்நாளின் கடினமான பக்கங்களை எதிர்கொண்டபோது வாண்டா உற்ற துணையாக இருந்தார்.
ஆனாலும், அவர்களது சிரமம் முடிந்துவிடவில்லை. 2014-ஆம் ஆண்டு வாண்டாவுக்கு பார்கின்சன் நோய் ஏற்பட்டது. எனினும், சின்ன சின்ன தருணங்களில் தங்கள் வாழ்வை அழகாக அனுபவிக்கின்றனர் இருவரும்.
இவர்களின் மகள் ஒரு புகைப்பட கலைஞர். அவர் தன் பெற்றோரை வைத்து அழகிய போட்டோ ஷூட் நடத்தியிருக்கிறார். அந்த நெகிழ்ச்சி புகைப்படங்கள் தான் இவை.