ராட்சசன், அசுரன் படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் அம்மு அபிராமி. ஒருமுறை அம்மு அபிராமி தன்னுடைய சரும பராமரிப்பு குறித்து ஐபிசி மங்கை யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியின் போது பகிர்ந்து கொண்டார்.
Advertisment
சினிமாவுக்கு வந்த பிறகு மேக்கப் போடுறது அவசியமாயிடுச்சு. மேக்கப் போடுறது நம்ம சருமத்தை கண்டிப்பா பாதிக்கும். அதுக்காக நான் தோல் மருத்துவர்கிட்ட போய், அவங்க பரிந்துரைபடி சிம்பிளான சரும பராமரிப்பு வழக்கத்தை கடைபிடிச்சுட்டே இருக்கேன். முகப்பரு வராம இருக்கிறதுக்கு, என்னோட தோல் மருத்துவர் பரிந்துரை செய்த ஃபேஸ் வாஷ் யூஸ் பண்றேன். செட்டாஃபில் மாய்ஸ்சரைசர் பயன்படுத்துறேன். இது நீங்க எந்த மெடிக்கல் ஷாப்லயும் வாங்கலாம்.
ஷாம்பூ அடிக்கடி மாத்திட்டே இருப்பேன். கண்டீஷனர், சீரம் எல்லாம் யூஸ் பண்ண மாட்டேன். முடிக்கு சின்ன வயசுல இருந்தே பாராஷூட் தேங்காய் எண்ணெய் தான் யூஸ் பண்றேன்.
அதேபோல, முல்தானிமட்டி, கடலை மாவு ஃபேஸ் மாஸ்க் போடுவேன். அதுல வேற எதையும் சேர்க்க கூடாது. வெறும் முல்தானி மட்டி மட்டும் தண்ணீர்ல மிக்ஸ் பண்ணி முகத்துல போட்டுப்பேன். ரொம்ப நேரம் வைக்காம, 5 நிமிஷத்துல கழுவினா நல்லா இருக்கும்.
டேனிங் பொறுத்தவரைக்கும், உங்க சருமத்தை டேன் ஆகாம பாத்துக்கிறது தான் ஒரே வழி. டேன் வராம இருக்கணும்னா சரியா உங்களை கவர் பண்ணிட்டு, சன்ஸ்கீரின் யூஸ் பண்ணிக்கோங்க. எப்போவும் நல்ல பிராண்ட் சன்ஸ்கீரின் வாங்கிறது தான் பெஸ்ட். இதுதான் உங்களை காப்பாத்தும். அதையும் தாண்டி டேன் ஆனா, அதுவாவே போகணும். நீங்க ஒன்னும் பண்ண முடியாது.
அதேபோல கருவளையம் போனுனா நல்ல தூங்குங்க. நிறைய தண்ணீர் குடிங்க.
நம்ம என்னதான் ஸ்கின் கேர், டயட், சுத்தம் எல்லாம் கடைபிடிச்சாலும் 1-2 முகப்பரு வரது ரொம்ப நார்மலான விஷயம் தான். அதனால அதுக்காக பெரிசா எதுவும் பண்ணாம அப்படியே விடுறதுதான் நல்லது. இப்படி அம்மு அபிராமி தன்னுடைய ஸ்கின் கேர் குறித்து ஐபிசி மங்கை யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்து கொண்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“