சுத்தமான, ஆரோக்கியமான கூந்தலை நாம் அனைவரும் விரும்புகிறோம், ஆனால் நம் வாழ்வில் ஒரு கட்டத்தில், பொடுகுக்கு பயந்திருப்போம். அதிலும் குளிர்காலத்தில் உச்சந்தலையில் பொடுகுத் தொல்லை அதிகரிக்கும்.
கோடையில், வானிலை ஈரப்பதமாக இருப்பதால் உங்கள் சருமத்திற்கு அதிக எண்ணெய் தேவையில்லை. ஆனால் குளிர்காலத்தில், உங்கள் முடி மற்றும் தோல் வறட்சியை ஈடுசெய்ய அவை அதிக எண்ணெயை உற்பத்தி செய்கின்றன. பொடுகை உண்டாக்கும் ஈஸ்ட் இன்னும் அதிகமாக உற்பத்தி செய்யத் தொடங்குகிறது. இது உங்கள் உச்சந்தலையில் மற்றும் உங்கள் தலைமுடியில் உள்ள அனைத்து எண்ணெயையும் விரும்புகிறது, எனவே பொடுகு உருவாகிறது. அதனால்தான் எண்ணெய் தடவுவது பொடுகுத் தொல்லையை மோசமாக்குகிறது.
ஆயுர்வேத நிபுணர் திக்சா பவ்சர், பொடுகு இல்லாத மென்மையான மற்றும் ஆரோக்கியமான முடிக்கு நீங்களே வீட்டில் செய்யக்கூடிய ஒரு ஹேர் மாஸ்க்கைப் பகிர்ந்து கொண்டார்.
ஹேர் மாஸ்க் எப்படி செய்வது?
* ஒரு கிண்ணத்தில் 2 டீஸ்பூன் தயிர் எடுத்துக் கொள்ளவும்.
*அதில் ½ டீஸ்பூன் திரிபலா சூரணத்தை சேர்க்கவும்.
*இரண்டு நிமிடம் நன்றாக கலக்கவும்.
*இதை உச்சந்தலையிலும் முடியிலும் தடவி, 30 நிமிடங்கள் வைத்திருக்கவும்.
* உங்கள் தலைமுடியை வெதுவெதுப்பான நீர் மற்றும் லேசான ஷாம்பு கொண்டு கழுவவும்.
இந்த ஹேர் மாஸ்க்கை தொடர்ந்து 2-3 மாதங்கள், வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தவும்.
நன்மைகள்
தயிர், புரதம் நிறைந்தது மற்றும் உங்கள் முடி வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்தை வழங்குகிறது. தயிரில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உங்கள் தலைமுடியின் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது. சரியான ஊட்டச்சத்து உங்கள் தலைமுடியை அடைவதால், அது வலிமையாகிறது மேலும் முடி உதிர்வதைத் தடுக்கிறது.
தயிரில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், அரிக்கும் உச்சந்தலையை ஆற்றும். இது ஒரு இயற்கை கண்டிஷனர் என்று கூறப்படுகிறது, இது உங்கள் முடி இழைகளை, சுவாசிக்க அனுமதிக்கிறது. இந்த மாய்ஸ்சரைசிங் எஃபக்ட், உதிர்ந்த முடியை சரி செய்வதோடு, பிளவு முனைகளையும் குறைக்கும்.”
பொடுகைக் கட்டுப்படுத்துவதைத் தவிர, தயிர் முடியின் வேர்களை வலுப்படுத்தவும் முடி உதிர்வைக் குறைக்கவும் உதவுகிறது, மந்தமான கூந்தலுக்கு பிரகாசத்தை சேர்க்கிறது.
திரிபலா – மிகத் தொடர்ந்து இருக்கும் பொடுகுத் தொல்லையை குறுகிய காலத்தில் அழிக்கவும் உதவும்.
இதை விளக்கிய டாக்டர் பாவ்சர், இது உச்சந்தலையில் உள்ள செதில்கள், அரிப்பு மற்றும் வறட்சியை விரைவாக நீக்குகிறது என்றார். இது முடி மற்றும் உச்சந்தலையின் pH சமநிலையை மீட்டெடுக்கிறது, உங்கள் உச்சந்தலையை சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது மற்றும் உங்கள் உச்சந்தலை மற்றும் முடி இரண்டின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பராமரிக்க உதவுகிறது.
நெல்லியில் வைட்டமின் சி அதிகம் உள்ளது, இது முடியின் தண்டை வலுப்படுத்த உதவுகிறது. ஆக்ஸிஜனேற்றங்களால் நிரம்பிய கடுக்காய், உங்கள் உச்சந்தலையை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும். தான்றிக்காயின் பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் பொடுகைத் தடுக்கிறது. தயிர் மற்றும் திரிபலா ஒன்றாகக் கலக்கும்போது பொடுகு மற்றும் அரிப்பு உச்சந்தலையில் அற்புதமாக வேலை செய்கிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.