Advertisment

கொரோனா: ஒமிக்ரானை தடுக்கும் சிறந்த மாஸ்க் எது?

துணியிலான முகக்கவசம் போதிய பாதுகாப்பற்றது. கொரோனா, ஒமிக்ரானுக்கு எதிராக சிறந்த பயனுள்ள முகக்கவசம் எது?

author-image
WebDesk
New Update
கொரோனா: ஒமிக்ரானை தடுக்கும் சிறந்த மாஸ்க் எது?

Covid-19: Which masks are most effective against Omicron?: கொரோனா வைரஸின் ஒமிக்ரான் மாறுபாடு மிக வேகமாக பரவி, உலகெங்கிலும் உள்ள மக்களைத் தொடர்ந்து பாதித்து வருவதால், முகக்கவசம் அணிவதன் மற்றும் சமூக இடைவெளியைப் பராமரிப்பதன் முக்கியத்துவம் இன்னும் அதிகமாகியுள்ளது. ஆனால் வைரஸுக்கு எதிரான மிகவும் பயனுள்ள முகக்கவசங்கள் மற்றும் அதன் பல வகைகள் குறித்து இன்னும் குழப்பம் உள்ளது. சிலர் இன்னும் துணியிலான முகக்கவசங்களை அணிந்து வரும் நிலையில், வைரஸ் துகள்களுக்கு எதிராக அவை பயனற்றவை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

Advertisment

எனவே, எந்த முகக்கவசம் சிறந்தது? நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது இங்கே.

துணியிலான முகக்கவசங்கள் ஏன் பயனுள்ளதாக இல்லை?

பீர்ஜேயில் வெளியிடப்பட்ட ஆய்வுக் கட்டுரையில், 20 வகையான துணி முகக்கவசங்களை ஆய்வு செய்ததில், கொரோனா வைரஸின் அளவு 0.12 மைக்ரோமீட்டர் மட்டுமே உள்ள நிலையில், துணியிலான முகக்கவசங்களின் நுண்துளை அளவுகள் 80-500 மைக்ரோமீட்டர்களில் இருப்பது கண்டறியப்பட்டது. இதன் பொருள் சிறிய நீர்த்துளிகள் மூக்கு மற்றும் கன்னங்களுக்கு அருகிலுள்ள வெற்றிடங்கள் அல்லது இடைவெளிகள் வழியாக உள்ளிழுக்கப்படலாம்.

மீரா சாலையில் உள்ள வொக்கார்ட் மருத்துவமனை ஆலோசகர் மருத்துவர் டாக்டர் ப்ரீதம் மூன், துணியிலான முகக்கவசங்கள் பெரிய துகள்களுக்கு மட்டுமே பயனுள்ளதாக இருக்கும் என்று கூறினார். மேலும், "துணி மற்றும் அறுவை சிகிச்சை முகக்கவசங்களுடன் ஒப்பிடும்போது உயர் வடிகட்டுதல் முகக்கவசங்கள் ஓமிக்ரானை தள்ளி வைத்திருக்க உதவும்," என்று அவர் கூறினார்.

துணியிலான முகக்கவசங்களை விட அறுவை சிகிச்சை முகக்கவசங்கள் சிறந்தவை என்றாலும், அவை இன்னும் ஓமிக்ரான் மாறுபாட்டிற்கு எதிராக பாதுகாப்பைக் கொண்டிருக்கவில்லை.

மெட்ரோபோலிஸ் ஹெல்த்கேர் லிமிடெட்டின் நுண்ணுயிரியல் மற்றும் மூலக்கூறு உயிரியல் துறை தலைவர் மற்றும் உயிர்பாதுகாப்பு அதிகாரி டாக்டர் நிரஞ்சன் பாட்டீல் கூறுகையில், “ஒரு துணி மாஸ்க் மட்டும் பயனுள்ளதாக இருக்காது. சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் ஆய்வக வல்லுநர்களுக்கு N95 முகக்கவசங்கள் பற்றாக்குறை இருந்ததால், துணி மாஸ்க் பொது மக்களுக்கு முதல் அலையில் பரிந்துரைக்கப்பட்டது. மூன்று அடுக்கு அறுவை சிகிச்சை முகக்கவசங்கள் மற்றும் துணி முகக்கவசங்கள், ஒன்றாகப் பயன்படுத்தினால், அவற்றை தனித்தனியாகப் பயன்படுத்துவதற்குப் பதிலாக பயனுள்ளதாக இருக்கும். ஓமிக்ரான் மிகவும் பரவக்கூடியது எனும் நிலையில், துணி முகக்கவசங்கள் பாதுகாப்பானது இல்லை மற்றும் உண்மையில், பரவுதல் மற்றும் பாதுகாப்பைக் குறிக்கும் வகையில் தவறான பாதுகாப்பு உணர்வைத் தரக்கூடும் என்பதால், அவை ஒமிக்ரானின் பரவலுக்கு பங்களிக்கக்கூடும்” என்றார்.

N-95 முகக்கவசங்கள் அல்லது சுவாசக் கருவியானது துகள் ஏரோசோல்களுக்கு எதிராக 95 சதவிகிதம் அல்லது அதற்கும் அதிகமான வடிகட்டி திறன் கொண்டதாக சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது. முகக்கவசங்களானது வெளியேற்றும் வால்வுடன் வழங்கப்பட வேண்டும், எளிதில் அகற்ற கூடியதாகவும் மற்றும் பரந்த அளவிலான முகத்திற்கு ஏற்றதாகவும் இருக்க வேண்டும். இது NIOSH இன் சான்றிதழ் அல்லது அதற்கு சமமான சான்றிதழுடன் இருக்க வேண்டும்.

யுனைடெட் ஸ்டேட்ஸின் FDA (உணவு மற்றும் மருந்து நிர்வாகம்) படி, N95 முகக்கவசங்களானது "ஒரு மிக நெருக்கமான முகப் பொருத்தம் கொண்ட மற்றும் காற்றில் உள்ள துகள்களின் மிகவும் திறமையான வடிகட்டலை அடைய வடிவமைக்கப்பட்ட சுவாச பாதுகாப்பு சாதனமாகும்". இதேபோல், நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) "சிடிசியின் தேசிய தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிறுவனம் (NIOSH) சுவாசக் கருவிகளுக்கான தேவைகளைப் பூர்த்தி செய்யும் வரை" KN95 முகக்கவசங்கள் N95 முகக்கவசங்களுக்கு மலிவான மாற்றாக இருக்கும் என்று கூறியது.

publive-image

வீட்டில் தனிமைப்படுத்துவதற்கான அமைச்சகத்தின் திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள், கொரோனா நோயாளி எல்லா நேரங்களிலும், மூன்று அடுக்கு மருத்துவ முகக்கவசங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று கூறுகிறது. “எட்டு மணிநேர பயன்பாட்டிற்குப் பிறகு அல்லது அதற்கு முன்னதாகவே முகக்கவசங்கள் ஈரமாகினாலோ அல்லது அழுக்காகிவிட்டாலோ அவர்கள் முகக்கவசங்களை மாற்ற வேண்டும். பராமரிப்பாளர் அறைக்குள் நுழைந்தால், பராமரிப்பாளர் மற்றும் நோயாளி இருவரும் N-95 முகக்கவசங்களைப் பயன்படுத்துவதைக் கருத்தில் கொள்ளலாம்.

“N95 முகக்கவசங்கள் சிறிய துகள்களைக் கூட வடிகட்ட உதவும். வால்வு உள்ள முகக்கவசங்களைப் பயன்படுத்த வேண்டாம், ஏனெனில் ஒருவருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டால் அது வெளிவரும் காற்றை வடிகட்டுவதற்கு உதவாது மற்றும் அதைப் பற்றி போதிய விளக்கம் இல்லை. நீங்கள் ஒரு அறுவை சிகிச்சை முகக்கவசங்களைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், இரட்டை முகக்கவசங்கள் அவசியம். முகக்கவசங்கள் முகத்திற்கு சரியாக பொருந்துகிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், ”என்று டாக்டர் மூன் கூறினார்.

அரசாங்க தொழில்துறை சுகாதார நிபுணர்களின் அமெரிக்க மாநாட்டின் படி, வைரஸ் பரவுவதற்கு எதிராக அதிகபட்ச பாதுகாப்பை வழங்குவதற்கு N95 முகக்கவசங்கள் சிறந்தவை. பாதிக்கப்பட்ட நபர் முகக்கவசங்கள் அணியவில்லை என்றால், ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு தொற்று பரவுவதற்கு குறைந்தது 2.5 மணிநேரம் ஆகும். அதேநேரம் இருவரும் N95 முகக்கவசங்களை அணிந்திருந்தால், வைரஸ் பரவுவதற்கு 25 மணிநேரம் ஆகும்.

வடிகட்டப்படாத சுவாசம் வெளியேற அனுமதிக்கும் முகக்கவசங்கள் அல்லது வெளியேற்ற வால்வுகள் கொண்ட முகக்கவசங்களைப் பயன்படுத்த வேண்டாம் என்று டாக்டர் பாட்டீல் அறிவுறுத்தினார். "தவிர, நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்தும் நோய் உள்ளவர்கள் அல்லது மருந்துகளை உட்கொள்பவர்கள் முழுமையாக தடுப்பூசி போட்டாலும் முழுமையாக பாதுகாக்கப்பட மாட்டார்கள். தடுப்பூசி போடப்படாத நபர்களுக்கு பரிந்துரைக்கப்படும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அவர்கள் தொடர்ந்து எடுக்க வேண்டும், அதில் அவர்களின் சுகாதார வழங்குநரால் வழங்கப்படும் அறிவுறுத்தல்கள் முதல், நன்கு பொருத்தப்பட்ட முகக்கவசங்கள் அணிவது உட்பட. நீங்கள் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டிருந்தாலும், பாதுகாப்பை அதிகரிக்கவும், மற்றவர்களுக்கு கொரோனா பரவுவதைத் தடுக்கவும், நீங்கள் கணிசமான அல்லது அதிக பரவும் பகுதியில் இருந்தால், வீட்டிற்குள்ளும் வெளியிலும் முகக்கவசங்களை அணியுங்கள், ”என்று டாக்டர் பாட்டீல் கூறினார்.

இரண்டு முகக்கவசங்களை ஒன்றாக அணிவது, N95 மற்றும் அதன் கீழ் ஒரு அறுவை சிகிச்சை முகக்கவசங்கள் ஆகியவை மாறுபாட்டிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள சிறந்த வழியாகும் என்று மும்பை மசினா மருத்துவமனையின் நுரையீரல் நிபுணர் ஆலோசகர் டாக்டர் சங்கேத் ஜெயின் கூறினார். "குறிப்பாக N95 முகக்கவசங்களை மீண்டும் பயன்படுத்தலாம், ஏனெனில் அவை அதிக தூசியை வடிகட்டுவதற்கான திறனுக்காக மதிப்பிடப்படுகின்றன. சாதாரணமாகப் பயன்படுத்திய சில நாட்களுக்குப் பிறகும் முகக்கவசங்கள் சேதமடையாது, எனவே அதை மீண்டும் பயன்படுத்தலாம். ஒரு வழக்கமான நாளுக்கு N95 முகக்கவசங்களைப் பயன்படுத்திய பிறகு, அதை இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு தூசி இல்லாத சூழலில் ஒதுக்கி வைத்து, பின்னர் மீண்டும் பயன்படுத்த வேண்டும். பொதுவாக, சந்தையில் பல துவைக்கக்கூடிய மற்றும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய N95 முகக்கவசங்கள் உள்ளன, அவற்றை சோப்புப் பொடியால் கழுவலாம் மற்றும் மறுபயன்பாட்டிற்காக ஒழுங்காக காற்றில் உலர்த்தலாம், ”என்று டாக்டர் ஜெயின் கூறினார்.

சுவாசப் பிரச்சனைகள் காரணமாக N95 அணிய முடியாதவர்கள் என்ன செய்வது?

"மூன்று அடுக்கு அறுவை சிகிச்சை மற்றும் துணி முகக்கவசங்களின் கலவையை சிஓபிடி, ஆஸ்துமா அல்லது வேறு ஏதேனும் சுவாசக் கஷ்டம் உள்ள, N95 முகக்கவசங்களை அணிய முடியாதவர்கள் பயன்படுத்தலாம்" என்று டாக்டர் பாட்டீல் கூறினார்.

மீரா ரோட்டில் உள்ள ஜெயின் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் நுரையீரல் மருத்துவ நிபுணர் மற்றும் க்ரிட்டிகல் கேர் மெடிசின் ஆலோசகர் டாக்டர் ராகேஷ் ராஜ்புரோஹித் கருத்துப்படி, துணி முகக்கவசங்கள் முழுமையான பாதுகாப்பை அளிக்காது, ஆனால் சரியாக தேர்வு செய்து சரியாகப் பயன்படுத்தினால் சில வகையான பாதுகாப்பை அளிக்க முடியும். “இதை கிருமிநாசினிகளைப் பயன்படுத்தி சரியாகக் கழுவ வேண்டும். இது மூக்கு மற்றும் வாயை முழுமையாக மூட வேண்டும். காற்று கசிவை தடுக்க, மூக்கு கம்பியுடன் இருக்க வேண்டும். இது பல அடுக்குகளாகவும், இறுக்கமாக நெய்யப்பட்டதாகவும், சுவாசிக்கக்கூடிய துணியாகவும் இருக்க வேண்டும். துணி முகக்கவசத்தை சரிபார்க்க, வெளிச்சத்தில் வைத்து பார்க்க வேண்டும், அது ஒளியை முழுவதுமாகத் தடுத்தால், அது பொருத்தமானது" என்று டாக்டர் ராஜ்புரோஹித் கூறினார்.

publive-image

WHO இன் படி, நீங்கள் முகக்கவசங்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது இங்கே

* மாஸ்க் அணிவதற்கு முன், ஆல்கஹால் கலந்த கை தேய்த்தல் அல்லது சோப்பு மற்றும் தண்ணீரால் கைகளை சுத்தம் செய்யவும்.

* வாய் மற்றும் மூக்கை முகக்கவசத்தால் மூடி, உங்கள் முகத்திற்கும் முகக்கவசத்திற்கும் இடையில் எந்த இடைவெளியும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

* முகக்கவசங்கள்யைப் பயன்படுத்தும் போது அதைத் தொடுவதைத் தவிர்க்கவும்; ஒருவேளை தொட நேர்ந்தால், ஆல்கஹால் அடிப்படையிலான கை தேய்த்தல் அல்லது சோப்பு மற்றும் தண்ணீரால் உங்கள் கைகளை சுத்தம் செய்யவும்.

* மாஸ்க் ஈரமானவுடன் புதியதாக மாற்றவும், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் முகக்கவசங்களை மீண்டும் பயன்படுத்த வேண்டாம்.

*முகக்கவசங்களை கழற்றுதல்: பின்னால் இருந்து கழற்றவும் (முகக்கவசங்களின் முன்பக்கத்தைத் தொடக் கூடாது); மூடிய தொட்டியில் உடனடியாக போடவும்; ஆல்கஹால் அடிப்படையிலான கை தேய்த்தல் அல்லது சோப்பு மற்றும் தண்ணீரால் கைகளை சுத்தம் செய்யவும்."

முகக்கவசங்களை எப்படி அகற்றுவது?

MoHFW படி, முகக்கவசங்களை துண்டுகளாக வெட்டி ஒரு காகித பையில் குறைந்தபட்சம் 72 மணிநேரம் வைத்த பிறகு அப்புறப்படுத்த வேண்டும்.

* முகக்கவசங்களை அப்புறப்படுத்திய பின் கை சுகாதாரத்தை மேற்கொள்ளுங்கள்.

* உங்கள் முகம், மூக்கு அல்லது வாயைத் தொடுவதைத் தவிர்க்கவும்.

மேலே உள்ள கட்டுரை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே மற்றும் தொழில்முறை மருத்துவ ஆலோசனைக்கு மாற்றாக இல்லை. உங்கள் உடல்நலம் அல்லது மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் எப்போதும் உங்கள் மருத்துவர் அல்லது பிற தகுதிவாய்ந்த சுகாதார நிபுணரின் வழிகாட்டுதலைப் பெறவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Corona Virus Omicron Mask
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment