6 மாதங்கள் வரை குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பது முழு ஊட்டச்சத்தை அளிக்கிறது என்பது அனைவரும் அறிந்த உண்மை, அதனால்தான் உலக சுகாதார நிறுவனம் மற்றும் பிற மருத்துவ அமைப்புகள் இந்த காலகட்டத்தில் தாய்ப்பால் கொடுக்க பரிந்துரைக்கின்றன, மேலும் 2 வயது வரை தொடர்ந்து தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.
முதல் முறையாக தாயாகும் நீங்கள், தாய்ப்பால் கொடுப்பதால் ஏற்படும் சில ஆரோக்கிய நன்மைகளை அறிந்து கொள்ள வேண்டும். பெங்களூரு காவேரி மருத்துவமனையின் மூத்த மருத்துவ ஆலோசகர் ஸ்ரீநாத் மணிகண்டி கருத்துப்படி, தாய்ப்பால் கொடுப்பது பிறப்புறுப்பு இரத்தப்போக்கைக் குறைக்கும் மற்றும் கர்ப்பத்திற்கு முந்தைய அளவுக்கு, கருப்பையின் சுருக்கத்தை விரைவுபடுத்துகிறது.
தாய்ப்பாலை உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படும் ஆற்றல், எடை இழப்பை துரிதப்படுத்துகிறது, இதனால் கர்ப்பத்திற்கு முந்தைய எடைக்கு திரும்புகிறது. இயற்கையான கருவுறுதல் குறைகிறது, இது தற்காலிகமாக மற்றொரு கர்ப்பத்தின் வாய்ப்பைக் குறைக்கிறது (ஆனால் நீக்கவில்லை). தாய்ப்பால் கொடுப்பது தாய்-குழந்தை பிணைப்பை உருவாக்குகிறது.
தாய்ப்பால் குழந்தைக்கும் நன்மை பயக்கும் என்று மருத்துவர் கூறினார்.
"ஊட்டச்சத்தின் அளவு மற்றும் தரம் உறுதி செய்யப்படுகிறது, ஏனெனில் அனைத்து ஊட்டச்சத்துக்களும் மிகவும் பொருத்தமான மற்றும் எளிதில் ஜீரணிக்கக்கூடிய வடிவத்தில் உள்ளன. தாய்ப்பாலின் வெப்பநிலை குழந்தைக்கு ஏற்றது மற்றும் பாக்டீரியா ஆபத்து சிறிதும் இல்லை.
தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு இரைப்பை குடல் அழற்சி, காது நோய்த்தொற்றுகள், நிமோனியா போன்ற தொற்றுநோய்களின் ஆபத்து குறைகிறது. ரெஸ்பான்ஸிவ் ஃபீடிங் மூலம் குழந்தை உட்கொள்ளலைக் கட்டுப்படுத்துகிறது. இது ஒவ்வாமை மற்றும் அரிக்கும் தோலழற்சியின் அபாயத்தைக் குறைக்கிறது.
தாய்ப்பால் கொடுக்கும் போது உடற்பயிற்சி
தாய்ப்பால் கொடுக்கும் போது உடற்பயிற்சி செய்வதன் நன்மைகளை விளக்கும் மணிகண்டி, தாய்க்கு அதிக ஆற்றல் தேவை என்கிறார். புதிய அம்மாவாக இருப்பது சோர்வாக இருக்கும், மேலும் மிதமான உடற்பயிற்சி நள்ளிரவில் தாய்ப்பால் கொடுக்கும் போது ஆற்றல் சேமிப்புகளை உருவாக்க உதவுகிறது.
உடற்பயிற்சி "ஒரு தாயின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் அவரது உணர்வில் நேர்மறையான விளைவை ஏற்படுத்துகிறது". இது மகப்பேறுக்கு பிறகான மனச்சோர்வைத் தடுக்க உதவும், இது 9 தாய்மார்களில் ஒருவரை பாதிக்கிறது என்று நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் கூறுகிறது.
உடற்பயிற்சி செய்வதன் மூலம் தாய்ப்பால் உற்பத்திக்கு காரணமான ‘ப்ரோலாக்டின்’ என்ற ஹார்மோனின் உற்பத்தியையும் அதிகரிக்க முடியும். "கலோரி கட்டுப்பாட்டுடன் கூடிய உடற்பயிற்சியானது, பாலூட்டும் பெண்களின் எடை இழப்பு மற்றும் கொழுப்பு இழப்பு ஆகியவற்றுடன் தொடர்புடையது என்று ஆய்வுகள் காட்டுகின்றன.
இது தாய்மார்கள் கர்ப்பத்திற்கு முந்தைய எடைக்கு விரைவாக திரும்ப உதவுகிறது. இது எலும்பு இழப்பைக் குறைப்பதன் மூலம் எலும்பு ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
பாலூட்டும் தாய்மார்களுக்கும் நீரேற்றமாக இருப்பது முக்கியம். அவர்கள் உடற்பயிற்சி செய்வதற்கு முன்னும் பின்னும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதை உறுதி செய்ய வேண்டும், என்று மருத்துவர் முடிக்கிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.