சாதாரண சிகரெட்டுகளை உபயோகிப்பதை தவிர்த்து இ-சிகரெட்டுகளை உபயோகிப்பதன் மூலம் 2100-ஆம் ஆண்டுக்குள் 66 லட்சம் பேரின் மரணத்தை தவிர்க்க முடியும் என அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
புகையிலை சிகரெட்டுகளின் பயன்பாட்டால் வருடத்திற்கு சுமார் 70 லட்சம் பேர் புகையிலை சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்பட்டு உயிரிழக்கின்றனர் என உலக சுகாதார மையம் தெரிவிக்கிறது. நுரையீரல் புற்றுநோய் உள்ளிட்ட உயிர்கொல்லி நோய்கள் வரை புகைப்பழக்கத்தால் ஏற்படுகின்றன என்பது பல ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சமீப காலமாக இ-சிகரெட்டுகள், சாதாரண சிகரெட்டுகளுக்கு மாற்றாக பரிந்துரைக்கப்படுகின்றன. இ-சிகரெட்டில் சாதாரண சிகரெட்டில் இருப்பதுபோல நிக்கோட்டின் இருக்காது. மாறாக, ஆவியாகும்ம் கரிம சேர்மங்கள், கன உலோகங்கள் மற்றும் அதிநுண் துகள்கள் அடங்கிய இ-சிகரெட்டில் அழுத்தப்பட்ட நீராவி வடிவத்தில் நிக்கோட்டின் பயன்படுத்தப்பட்டிருக்கும். எனவே, இ-சிகரெட்டுகள் முழுமையாக நல்லவை என சொல்ல முடியாது. இருப்பினும், இ-சிகரெட்டுகள் சாதாரண சிகரெட்டுகளைவிட ஆபத்து குறைந்தது என பரவலாக கருதப்படுகிறது. இ-சிகரெட்டுகள் 5 சதவீதம் மட்டுமே உடலுக்கு தீங்கு விளைவிக்கிறது எனவும் அனுமானங்கள் உள்ளன. மேலும், நீண்ட காலமாக உபயோகப்படுத்தப்படும் புகையிலை சிகரெட்டுகளுக்கு சிறந்த மாற்று இ-சிகரெட்டுகள் தான் என்பதை விஞ்ஞானிகள் இன்னும் உறுதி செய்யவில்லை.
சமீப காலமாக இ-சிகரெட்டுகளை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஐரோப்பாவில் சுமார் 70 லட்சம் பேர் இ-சிகரெட்டுகளுக்கு மாறியுள்ளனர்.
இந்நிலையில், இந்த இ-சிகரெட்டுகளை உபயோகிப்பதன் மூலம் 2100-ஆம் ஆண்டுக்குள் புகையிலை பழக்கம்கொண்ட 66 லட்சம் பேரின் மரணத்தை தவிர்க்க முடியும் என அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. மேலும், இ-சிகரெட்டுகளை உபயோகிப்பவர்கள் மரணத்தை விளைவிக்கும் நோய்களிலிருந்து தப்பித்து வருவதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது.
மேலும், இ-சிகரெட்டுகளை பயன்படுத்துபவர்களின் சராசரி ஆயுட்காலம் 4 மாதங்கள் அதிகரித்துள்ளதாகவும் அந்த ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.