அன்றைய காலத்தில், மண் பாண்டங்கள் இல்லாத இந்திய சமையலறைகளை பார்க்க முடியாது. தண்ணீரை சேமித்து வைப்பது முதல் சமையல் வரை அனைத்தையும் பெண்கள் மண்பானையிலே செய்தனர்.
மண்பானைகளில் சமைக்கப்படும் உணவுகளில் இரும்பு, கால்சியம், மெக்னீசியம் மற்றும் சல்பர் உள்ளது, இவை மனித உடலின் ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்கு வகிக்கின்றன.
அவை உணவில் எண்ணெய் மற்றும் ஈரப்பதத்தைத் தக்கவைத்துக்கொள்வதால், உங்கள் உணவை சுவையாக மாற்ற அதிகமான எண்ணெய் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. உணவுக்கு மட்டும் நல்லது என்பதைத் தாண்டி, மண் பானைகள் சுற்றுச்சூழலுக்கு மிகவும் உகந்தது.
ஆனால், மண்பாண்டங்களில் சமைப்பதற்கு முன்பாக அவற்றை தயார்படுத்த வேண்டும் என்பது உங்களுக்கு தெரியுமா?
மண்பாணையை எப்படி சமையலுக்கு தயார்படுத்துவது என்பது குறித்து செஃப் சஞ்சீவ் கபூர் கூறுகிறார்.
எப்போதும் மண்பானைகளை புதிதாக உபயோகிக்க ஆரம்பிக்கும் போது அதை கழுவி, நேரடியாக சமையலுக்கு பயன்படுத்த கூடாது.
நீங்கள் கடையில் இருந்து மண்பானைகளை வாங்கிய பிறகு, அதை 8-10 மணிநேரம் வரை தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். மண்பாண்டங்களில் நுண் துளைகள் இருக்கின்றன. எனவே தண்ணீரில் ஊற வைப்பதனால் அது ஈரப்பதத்தை உண்டாக்குகிறது. அது உணவை வேக வைப்பதற்கும் வெப்பத்தை தக்க வைக்கவும் உதவுகிறது.
பிறகு மண்பானை முழுவதும் நீரை ஊற்றி அதனைக் கொதிக்க வைக்க வேண்டும். இப்போது உங்கள் மண்பானை பக்குவப்படுத்தப்பட்டு, சமையலுக்கு உபயோகப்படுத்த தயாராக உள்ளது.
மண்பானையில் சமைப்பதற்கு முன் என்ன செய்ய வேண்டும்?
மண்பானையில், கொஞ்சம் கோதுமை மாவை போட்டு அதை எல்லா பக்கங்களிலும் தேய்க்கவும். மாவு தேய்ப்பதால் மண்பாண்டத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் மண் துகள்கள் உதிர்வதற்கு உதவுகிறது. மேலும் மண்பாண்டத்தில் உள்ள தூசியை அகற்றுகிறது.
இப்போது பானையை அடுப்பில் வைத்து தீ மூட்டுங்கள். மாவு கருப்பு நிறமாக மாறும் வரை சூடாக்குங்கள்.
அடுத்து ஒரு மஸ்லின் துணியால் பானையை சுத்தமாக துடையுங்கள். பானை முழுவதுமாக குளிர வேண்டும். இப்போது மண்பானையை கழுவி அதை சமையலுக்கு பயன்படுத்தலாம்.
Kitchen Tips: மண் பானையில் சமைப்பதால் இவ்வளவு நன்மைகளா?
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.