Advertisment

அட்டகாசமான 5 பயன்கள்… சிம்பிளா கருவேப்பிலை டீ இப்படி செய்து பாருங்க!

Top 5 benefits of curry leaves in tamil: இதமான நறுமணத்தைக் கொண்டுள்ள கறிவேப்பிலை உங்கள் நரம்புகளைத் தளர்த்தவும், மன அழுத்தத்தைக் குறைத்து உங்களை அமைதிப்படுத்தவும் உதவுகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
curry leaves benefits in tamil: curry leaf tea making in tamil

benefits of  curry leaf tea in Tamil: தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான ஒன்று கறிவேப்பிலை தேநீர். இந்த அற்புதமான பானம் இப்போது நாடு முழுவதும் பலருக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாக மாறி வருகிறது. இந்த ஆரோக்கிமான தேநீர் சுலபமாகவும் விரைவாகவும் தயாரிக்கப்படுவது மட்டுமல்லாமல், ஏராளமான நன்மைகளையும் நமக்கு வழங்குகிறது.

Advertisment

நமது வீடுகளில் எளிதில் கிடைக்கும் இந்த கறிவேப்பிலையில் எப்படி ஈஸியான முறையில் தேநீர் தயாரிக்கலாம் என்று இங்கு பார்க்கலாம்.

கறிவேப்பிலை தேநீர் தயாரிப்பது எப்படி:-

publive-image

முதலில் சுமார் 25-30 இலைகளை எடுத்து, புதிய நீரில் கழுவவும்.

பிறகு ஒரு பாத்திரத்தில், ஒரு கப் தண்ணீரை கொதிக்க வைக்கவும்.

தீயை அணைத்த பின்னர் கறிவேப்பிலை இலைகளை அவற்றுடன் சேர்க்கவும்.

நீரின் நிறம் மாறும் வரை, இலைகள் கொதிக்கும் நீரில் இருக்கட்டும்.

இப்போது தேநீரை ஒரு கிளாஸில் வடிகட்டி அருந்தி மகிழவும்.

கறிவேப்பிலை தேநீரின் ஆரோக்கிய நன்மைகள்:-

  1. செரிமானத்தை மேம்படுத்துகிறது

கறிவேப்பிலையில் லேசான மலமிளக்கிய பண்புகள் மற்றும் செரிமான நொதிகள் உள்ளன, அவை உங்கள் குடல் இயக்கத்தை மேம்படுத்தலாம், இதனால் செரிமானத்திற்கு உதவுகிறது. மலச்சிக்கல் மற்றும் வாயுவுக்கு சிகிச்சையளிப்பதில் இருந்து வயிற்றுப்போக்கு வரை அனைத்தையும் இந்த தேநீரால் சரி செய்ய முடியும்.

publive-image
  1. இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துகிறது

நீங்கள் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் தேநீரைத் தேடுகிறீர்களானால் இவற்றை நிச்சயம் முயற்சிக்கலாம். ஏனெனில் கறிவேப்பிலை தேநீர் உங்கள் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்காது. மேலும், இது இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.

சிகாகோ பல்கலைக்கழகத்தின் மூலிகை மருத்துவ ஆராய்ச்சிக்கான டாங் மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் இரத்த சர்க்கரை அளவை 45%குறைக்க கறிவேப்பிலையைப் பயன்படுத்தினர். எனவே, இந்த தேநீர் உங்கள் நீரிழிவு நோயைக் கையாள உதவும்.

  1. குமட்டலை எளிதாக்க முடியும்

கர்ப்பிணி பெண்களுக்கு இந்த தேநீர் காலை நோய் மற்றும் குமட்டலைக் குறைக்க உதவுகிறது. மேலும் இயக்க நோயால் அவதிப்படுபவர்களுக்கு பயணத்திற்கு முன்னும் பின்னும் ஒரு கப் கறிவேப்பிலை தேநீர் அருந்துவது குமட்டலை எளிதாக்க உதவுகிறது.

கறிவேப்பிலை தேநீர் அருந்துவது வாந்தி, குமட்டல் மற்றும் காலை நோயிலிருந்து உங்களை விடுவிக்கும்.

  1. சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட்

ஜர்னல் ஆஃப் ஃபுட் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி வெளியிட்ட ஒரு ஆய்வில், கறிவேப்பிலையில் மொத்த பினோலிக்ஸ் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட் பண்புகள் குறிப்பிடத்தக்க அளவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருப்பதால், கறிவேப்பிலையில் இருந்து தயாரிக்கப்படும் இந்த டீ உங்கள் சரும செல்களை சேதப்படுத்தாமல் இருக்க ஃப்ரீ ரேடிக்கல்களைத் தடுக்க உதவும். இதன் ஆன்டிஆக்ஸிடன்ட் உள்ளடக்கம் உடலை எந்தவிதமான தொற்று மற்றும் வீக்கங்களிலிருந்தும் பாதுகாக்க உதவுகிறது.

publive-image
  1. மன அழுத்தத்தை குறைக்க முடியும்

கறிவேப்பிலை இதமான நறுமணத்தைக் கொண்டுள்ளது, இது உங்கள் நரம்புகளைத் தளர்த்தவும், மன அழுத்தத்தைக் குறைத்து உங்களை அமைதிப்படுத்தவும் உதவும். எனவே, நீங்கள் வேலையில் நீண்ட நாள் சோர்வாக இருந்தால், உங்கள் மன அழுத்தத்தையும் பதற்றத்தையும் போக்க ஒரு கப் கறிவேப்பிலை டீயை பருகலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle Healthy Life Healthy Food Tamil News 2 Tamil Health Tips Benefits Of Curry Leaves
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment