விதவிதமான உணவுகளை சமைத்து சாப்பிட வேண்டும் என்ற ஆசையே நம் ஒவ்வொருவருக்கும் இருக்கும். எனவே வீட்டிலேயே எளிதாக செய்யக் கூடிய உணவுகளைப்பார்க்கலாம்.வீட்டிலேயே செய்யக்கூடிய ஒரு இலகுவான உணவுதான் அவர்காலு சாறு.
தேவையான பொருட்கள்
மொச்சி காய் - 1/2
1 கப் புளிக் கரைசல்
1/4 கப் கொத்தமல்லி (நறுக்கியது) - ஒரு கைப்பிடியளவு ரசம் பொடி
ஒரு கிண்ணம் தண்ணீர்
1+1/2 டீ ஸ்பூன் தேங்காய் (துருவியது)
1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் (சமைப்பதற்கு)
சிறிதளவு மஞ்சள் பொடி - 1/2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
1/2 டேபிள் ஸ்பூன் பெருங்காயம்
வெல்லம் - 1 டேபிள் ஸ்பூன்
இஞ்சி - 1/2 அங்குலம்
செய்முறை : ஒரு ப்ரஷ்ஷர் குக்கரை எடுத்து அதில் மொச்சி காயை தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து 3-4 விசில் வரும் வரை 10-15 நிமிடங்கள் வேக விடவும்.
பிறகு தண்ணீரை வடிகட்டி வேக வைத்த மொச்சி பீன்ஸ்யை மட்டும் தனியாக ஒரு கிணணத்தில் எடுத்து, சூடு ஆறிய பின், அதில் தேங்காய், ரசம் பவுடர், புளிக்கரைசல், இஞ்சி, வெல்லம், மஞ்சள் தூள், இவற்றுடன் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைக்க வேண்டும். இதையடுத்து ஒரு கடாயை எடுத்து அதில் எண்ணெய்யை ஊற்றி அது சூடானதும் கடுகு போட்டு வெடித்ததும் கறி வேப்பிலை சேர்த்து, பின் அதையும் அரைத்து வைத்த விழுதையும் அதனுடன் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.
பின் மிதமான தீயில் 5 நிமிடங்கள் சமைக்க வேண்டும் பின் உப்பு மற்றும் கொத்தமல்லி இலைகளை சேர்த்து நன்றாக கிளறி ஒரு கிண்ணத்திற்கு மாற்றி கொள்ளுங்கள் இப்போது சுவையான மொச்சி பீன்ஸ் சாறு ரெடி. இது கர்நாடகவில் மிகவும் புகழ் பெற்ற ரெசிபி ஆகும்