Advertisment

Diabetes Symptoms: வாய் உலரும்; தாகம் எடுக்கும்... காலையிலேயே இப்படி இருந்தா உஷார் ஆயிடுங்க மக்களே!

உயர் இரத்த சர்க்கரை அளவைக் கண்டறிய உதவும் பல எச்சரிக்கை அறிகுறிகளை நம் உடல் காலையில் சமிக்ஞை செய்கிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Diabetes

Diabetes morning symptoms

நீரிழிவு நோய், உடலின் ஒட்டுமொத்த செயல்பாட்டை கடுமையாக பாதிக்கிறது. இது படிப்படியாக இதயப் பிரச்சனைகள், சிறுநீரக பாதிப்பு, பார்வை தொடர்பான பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் தீவிர சிக்கல்களை ஏற்படுத்துகிறது. நீரிழிவு நோயைப் புரிந்துகொள்வதற்கு ஏராளமான அறிகுறிகள் உள்ளன,

Advertisment

உயர் இரத்த சர்க்கரை அளவைக் கண்டறிய உதவும் பல எச்சரிக்கை அறிகுறிகளை நம் உடல் காலையில் சமிக்ஞை செய்கிறது.

காலையில் தோன்றும் நீரிழிவு நோயின் சில அறிகுறிகள் இங்கே:

வாய் உலரும்

publive-image

காலையில் உங்கள் உதடு வறண்டு இருப்பது நீரிழிவு நோய்க்கான மிக முக்கியமான அறிகுறி. காலையில் எழுந்தவுடன் அடிக்கடி வாய் வறண்டு இருந்தாலோ அல்லது அதிக தாகம் எடுத்தாலோ, அதை நீரிழிவு நோய்க்கான எச்சரிக்கையாகக் கருதி, உங்கள் இரத்த சர்க்கரை அளவை உடனடியாகப் பரிசோதிக்கவும்.

குமட்டல்

publive-image

இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதால் காலையில் ஏற்படும் மற்ற முக்கிய அறிகுறி குமட்டல். நீரிழிவு அல்லது பிற நிலைமைகளின் சிக்கல்களின் விளைவாக இது நிகழலாம். பெரும்பாலான நேரங்களில், குமட்டல் பாதிப்பில்லாதது. இருப்பினும், இது மிகவும் கடுமையான நீரிழிவு பிரச்சனையை சுட்டிக்காட்டும் கூடுதல் அறிகுறிகளுடன் இருக்கலாம்.

மங்கலான பார்வை

publive-image

காலையில் எழுந்தவுடன் மங்கலான பார்வை இருந்தால், உங்கள் இரத்த சர்க்கரை அளவை விரைவாக சரிபார்க்க வேண்டும். நீரிழிவு நோயினால் கண் லென்ஸ் பெரிதாகி, மங்கலான பார்வையை ஏற்படுத்தும். உங்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறைந்த அளவிலிருந்து விரைவாக இயல்பு நிலைக்குச் சென்றால் உங்கள் கண்ணின் லென்ஸ் வடிவம் மாறலாம், இதனால் உங்கள் பார்வை மங்கலாகலாம். உங்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீரான பிறகு, உங்கள் பார்வை இயல்பு நிலைக்குத் திரும்பிவிடும்.

காலையில் தோன்றும் வேறு சில அறிகுறிகள் என்ன?

நீங்கள் எழுந்திருக்கும் போது, கவனச்சிதறல், மயக்கம், சோர்வு மற்றும் கால்களின் உணர்வின்மை போன்றவை இருந்தால், அது இரத்த அளவுகளில் ஏற்ற இறக்கத்தின் ஆபத்தான சமிக்ஞையாக இருக்கலாம். இவை பெரும்பாலும் சாதாரணமாகக் கருதப்படுகின்றன. இருப்பினும், உங்கள் உடலில் நீரிழிவு இருப்பதைக் கண்டறிய அவை முக்கியமானவை.

எனவே நோய் வந்த பிறகு அதை கட்டுப்படுத்துவதை விட, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது எப்போதும் சிறந்தது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment