Advertisment

தனுஷ்கோடி - ஒரு செழிப்பான நகரத்தின் மணல் கல்லறை!

ராமேஸ்வரத்தில் இருந்து 30 நிமிட பயணத்தில், இந்த இடம் 18 கிமீ நீளமும் 1 கிமீ அகலமும் இருபுறமும் இரண்டு பெருங்கடல்களால் சூழப்பட்ட தரிசு மணலாகத் தொடர்கிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
dhanushkodi

Dont forget to visit these places when u travelling to dhanushkodi

ஒரு நீண்ட தரிசு மணல், சில பாழடைந்த கட்டிடங்கள், ஒரு சிறிய கோவில் மற்றும் முடிவில்லாத பெருங்கடல்களின் இரண்டு பிரம்மாண்டமான நீல விரிவுகள்- அமைதியான வங்காள விரிகுடா மற்றும் இருபுறமும் சண்டையிடும் இந்தியப் பெருங்கடல், இந்த மக்கள் வசிக்காத தனுஷ்கோடி நகரத்தை உருவாக்குகிறது.

Advertisment

முன்னொரு காலத்தில்

ராமேஸ்வரம் தீவின் தெற்கு முனையில் அமைந்துள்ள தனுஷ்கோடி, இலங்கையிலிருந்து (18 மைல்) இந்தியாவின் மிக அருகில் உள்ள நிலப்பரப்பாகும்.

ஆங்கிலேயர் ஆட்சியின் போது இது ஒரு செழிப்பான நகரம். தனுஷ்கோடி, அதன் சொந்த இரயில் நிலையம், மருத்துவமனை, ஆரம்ப பள்ளிகள், தபால் அலுவலகம், சுங்கம் மற்றும் துறைமுக அலுவலகம் ஆகியவற்றுடன் தன்னிறைவு மற்றும் வளமான இடமாக இருந்தது. தனுஷ்கோடியிலிருந்து தலைமன்னாருக்கு (இலங்கை), தினசரி நீராவி கப்பல் சேவை இருந்தது, இது இருபுறமும் பயணிகள் மற்றும் பொருட்களை ஏற்றிச் சென்றது.

பேய் நகரம்

டிசம்பர் 17, 1964 அன்று தெற்கு அந்தமான் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவெடுத்து, 22 டிசம்பர் 1964 அன்று இரவு தனுஷ்கோடியில் கரையைக் கடந்தது. 7 மீட்டர் உயரத்திற்கு எழுந்த பேரலைகள் நகரம் முழுவதும் பேரழிவு மற்றும் பலத்த உயிரிழப்புகளை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், தனுஷ்கோடி ரயில் நிலையத்துக்கு வந்துகொண்டிருந்த பாம்பன் - தனுஷ்கோடி பயணிகள் ரயிலையும், கடலில் மூழ்கடித்தது, இதன் விளைவாக 100 க்கும் மேற்பட்ட பயணிகள் இறந்தனர்.

இந்தப் பேரழிவிற்குப் பிறகு, அதை மீண்டும் கட்டுவதற்குப் பதிலாக, தமிழக அரசு தனுஷ்கோடியை பேய் நகரமாக (வாழ்வதற்கு தகுதியற்ற இடம்) அறிவித்தது. ராமேஸ்வரத்தில் இருந்து 30 நிமிட பயணத்தில், இந்த இடம் 18 கிமீ நீளமும் 1 கிமீ அகலமும் இருபுறமும் இரண்டு பெருங்கடல்களால் சூழப்பட்ட தரிசு மணலாகத் தொடர்கிறது.

பக்தர்கள் இல்லாத தேவாலயம், பயணிகள் இல்லாத ரயில் நிலையம், குழந்தைகள் இல்லாத பள்ளி மற்றும் பல பாழடைந்த மற்றும் நாசமான கட்டிடங்கள் தனுஷ்கோடியின் இந்த மக்கள் வசிக்காத மணல் தீபகற்பத்தை உருவாக்குகின்றன. இந்திய கடற்படை மற்றும் தமிழக அரசின் உத்தரவுப்படி, சூரிய அஸ்தமனத்திற்கு பின் தனுஷ்கோடிக்கு யாரும் அனுமதிக்கப்படுவதில்லை.

சங்கமம்

கரடுமுரடான மணல் நிலப்பரப்பு, 4 வீலர் டிரைவ்கள் மற்றும் சில துணிச்சலான பைக்கர்களை, இரண்டு பெரிய கடல்கள் சந்திக்கும் பகுதியின் முடிவை அடைய அனுமதிக்கிறது.

சங்கமத்தின் விளிம்பில் நின்று, மெல்லிய மணல் மயங்கிக் கிடப்பதைப் பார்த்து, வலிமைமிக்கப் பெருங்கடல்களை வேறுபடுத்தி அறிய முயல்வது, எண்ணற்ற அலைகளுடன் சேர்ந்து ஊளையிடும் காற்றைக் கேட்பது, உங்களை தியான நிலைக்கு மாற்றும். அங்கு அனைத்து எண்ணங்களும் ஸ்தம்பித்து, உங்கள் சொந்த மௌன மொழியில் சுற்றுப்புறங்களுடன் உரையாடுவீர்கள்.

ராம சேது (ஆதாமின் பாலம்)

தனுஷ்கோடி என்ற பெயரின் அர்த்தம் 'வில்லின் முடிவு', இது இந்து கடவுளான பகவான் ராமரின் வில்லைக் குறிக்கிறது, அவர் லங்கா மன்னருடன் போர் முடிந்த பிறகு பாலத்தை உடைக்க வில்லை பயன்படுத்தினார். புராணக்கதையின்படி, இராமன் தனது மனைவி சீதையை தீய மன்னன் ராவணனின் பிடியில் இருந்து மீட்பதற்காக இலங்கையை அடைய 'மிதக்கும் கற்கள்' பாலத்தை கட்டினான்.

நாசாவின் விண்வெளிப் பயணங்களின் செயற்கைக்கோள் படம், குறைந்தது இரண்டு சந்தர்ப்பங்களில் தண்ணீருக்கு அடியில் ஒரு மில்லியன் ஆண்டுகள் பழமையான இணைப்பு (பாலம்) இருப்பதை உறுதி செய்தது. நாசாவின் பதிவுகளின்படி, இலங்கை’ ஒரு பரந்த இந்தியத் துணைக்கண்டத்தின் தென்முனையிலிருந்து விழும் மாபெரும் கண்ணீர்த்துளியைப் போன்றது.

இது இந்தியாவிலிருந்து 50 கிமீ அகலமுள்ள பாக் ஜலசந்தியால் பிரிக்கப்பட்டுள்ளது, இருப்பினும் ஆடம்ஸ் பாலம் என்று அழைக்கப்படும் தொடர்ச்சியான படிக்கல் பவளத் தீவுகள் இரு நாடுகளுக்கும் இடையே தரைப் பாலமாக அமைகின்றன. ராமேஸ்வரத்தில் உள்ள அனுமன் கோவிலில் மிதக்கும் கற்கள் இருப்பது,  இந்த கற்களுக்கு’ கடவுள் மந்திர சக்தியைக் கொடுத்து ஆசீர்வதித்துள்ள மத நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துகிறது.

பாம்பன் பாலம்

ஒரு கட்டடக்கலை அதிசயம், பாக் ஜலசந்தியில் உள்ள இந்தியாவின் முதல் கடல் பாலம், ராமேஸ்வரத்தை இந்தியாவின் பிரதான நிலப்பரப்புடன் இணைக்கிறது. இது ரயில் மற்றும் சாலை பாலம் இரண்டையும் குறிக்கிறது. 1964 சூப்பர் சூறாவளியால் சேதமடைந்த பழைய ரயில் பாலம் பொறியாளர்களால் 46 நாட்களில் சரி செய்யப்பட்டது.

லோ லெவல் ரயில் பாலத்தின் வழியாக பயணம் செய்வது மிகவும் கவர்ச்சிகரமானதாக இருந்தாலும், சாலைப் பாலம் இந்தியப் பெருங்கடலின் கண்கவர் காட்சியை வழங்குகிறது, இது சில நேரங்களில் மேலே உள்ள வானத்தை விட பெரியதாகத் தெரிகிறது. தனுஷ்கோடி வழக்கமான வார விடுமுறைக்கு ஏற்ற இடம் அல்ல. இங்கு 'சுற்றிப் பார்க்கும்' இடங்கள் அல்லது ஷாப்பிங் மற்றும் சாப்பிடுவதற்கான வாய்ப்புகள் எதுவும் இல்லை. இது ஒரு செழிப்பான நகரத்தின் மணல் கல்லறை, மற்றும் பிரபஞ்சத்தில் நம் இடத்தைப் பற்றிய கடுமையான நினைவூட்டல் கொண்ட பாழடைந்த பாலைவனம்.

நேரம் மற்றும் இடம் பற்றிய உணர்வு ஒன்றுமில்லாமல் மூழ்கிய இடம்தான் தனுஷ்கோடி.

பார்வையிட சிறந்த நேரம்: அக்டோபர் முதல் மார்ச் வரை

எப்படி செல்வது: ராமேஸ்வரத்தில் இருந்து 20 கிமீ தொலைவில் உள்ள தனியார் ஆட்டோக்கள் மற்றும் வண்டிகள்’ சாலை முடியும் இடத்தில் உள்ள கடற்படைச் சாவடிக்கு உங்களை அழைத்துச் செல்லும். இங்கிருந்து 4 வீல் டிரைவ் கொண்ட மினிவேன் அல்லது கமாண்டர் ஜீப்பை வாடகைக்கு எடுக்க வேண்டும். சவாரி மிகவும் கடினமானதாகவும் சமதளமற்றதாகவும் இருக்கும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment