உங்களுக்கு தோசை பிரிண்டர் பற்றி தெரியுமா? இப்போது இந்த வீடியோதான் இணையத்தில் பயங்க வைரலாகியுள்ளது. ஆட்டுக்கல் போயி கிரைண்டர், அம்மி போய் மிக்ஸி வந்தது போல, இப்போது தோசைக் கல் பழைய டெக்னிக்காகி, தோசை பிரிண்டர் எனும் புதிய கிச்சன் மெஷின் வந்துள்ளது. இந்த மெஷினில் மாவு மட்டும் ஊற்றினால் போதும்; ஒரு ஏ4 ஷீட் பேப்பர் போல கிரிஸ்பி, மெல்லிய தோசை உங்கள் தட்டில் வந்து விழும். மேலும் இதில், தோசையின் மிருதுவான தன்மையையும், அதன் தடிமன், எத்தனை தோசை வேண்டும் என்பது கூட நீங்கள் கஸ்டமைஸ் செய்யலாம். அத்துடன் எண்ணெய், நெய், பட்டர், சீஸ் கூட இதில் நீங்கள் சேர்க்கலாம்.
Advertisment
வீடியோவைப் பாருங்கள்!
இந்த வீடியோவை பார்த்த பலரும் வியப்பில் ஆழ்ந்துள்ளனர். சிலர் இதை மிகவும் பயனுள்ள ஒன்றாகக் கண்டாலும், சிலர் இது முற்றிலும் தேவையே இல்லாதது என்றனர். இங்கே சில ட்வீட்டர் ரியாக்ஷன்ஸ் பாருங்கள்!
இந்த இயந்திரம் ஒரே நேரத்தில் 20 தோசைகளைச் செய்தால், நான் அதை வாங்கலாம்," என்று ஒரு ட்விட்டர் யூஸர் கூற, மற்றொருவர், ’இன்டர்நெட்டில் இன்று மிகவும் விரும்பப்படும் நபர்... தோசை பிரிண்டர் தான்’ என்றார்.
"இது பயனற்றது. தோசை தயாரிப்பது கடினமான விஷயம் அல்ல. மாவு தயாரிப்பது தான் கடினமான வேலை. சப்பாத்தி மேக்கரில், இயந்திரம் மாவை தயார் செய்கிறது, அது அர்த்தமுள்ளதாக இருக்கிறது. இது ஒரு மூட்டைப்பூச்சி கொல்லுற மெஷின் என்று ஒருவர் கூறினார்..
இன்னொரு யூஸர் ட்விட்டரில், "நீங்களே சாம்பார் செய்யும் போது, நீங்களே சட்னி, தோசை மாவை நீங்களே தயாரிக்கும்போது, இந்த தோசை பிரிண்டருக்கு என்ன வேலை, கடாயை சூடாக்கி, சிறிது எண்ணெயை ஊற்றி தோசை தயார் செய்யவும். தோசை பிரிண்டருக்கும், விலையுயர்ந்த மின்சாரத்துக்கும் பணத்தை ஏன் வீணாக்குகிறீர்கள்."
இந்த தோசை பிரிண்டரை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“