ஜப்பான், இத்தாலி போன்ற நாடுகளில் தீபகற்பத்தில் உள்ள மக்கள் 105 வரை ஆரோக்கியமாக மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். அதற்கான காரணம் பற்றி சித்த மருத்துவர் சிவராமன் கூறுகிறார். யூடியூப் வீடியோவில் பேசிய அவர், ஜப்பானில் உள்ள ஒகினாவா என்ற இடம், இத்தாலி, காஸ்டாரிக்காவில் உள்ள தீபகற்பத்தில் உள்ள மக்களின் சராசரி வாழ்க்கை காலம் 103,105 ஆகும்.
Advertisment
அங்கிருந்த பாட்டி ஒருவரிடம் இதுகுறித்து ஒருவர் கேட்கிறார். அதற்கு அவர் 4,5 விஷயங்களை சொல்கிறார். நாமும் இதை பின்பற்றலாம். அவர் கூறிய முதல் விஷயம் விவசாயம் பார்ப்பது. தினமும் தோட்டத்திற்கு சென்று செடிகளை பராமரிப்பது. தங்கள் தேவைக்கு பூ, காய்கறிகளை பறிப்பது என்று வேலை செய்கிறார்கள்.
பர்பிள் நிறத்தில் விளையும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு அவர்கள் சாப்பிடுகிறார்கள். அதன் பின் நன்கு இறைச்சி எடுத்துக் கொள்கிறாகள். குறிப்பாக மீன் வகைகள் சாப்பிடுகிறார்கள். அங்கு கிடைக்க கூடிய குணா, சல்மா போன்ற மீன் வகைகள் சாப்பிடுகிறார்கள்.
Advertisment
Advertisement
அதன் பின் காய்கறிகள், கீரை வகைகள் சாப்பிடுகிறார்கள். எப்போதும் 80% மட்டுமே சாப்பிட வேண்டும். அதன் பின் ஜப்பானின் இகிகாய் வாழ்க்கை முறையை பின்பற்றுகிறார்கள். எப்போதும் அவர்கள் மன மகிழ்ச்சியோடும், நிறைவோடும் இருக்கிறார்கள். அவர்களின் பேச்சு, வாழ்க்கை முறைகளில் இது வெளிப்படுகிறது என்று சித்த மருத்துவர் சிவராமன் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“
Advertisment
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news