Advertisment

அந்த ரெண்டு மாசத்துல எனக்கு எல்லாமே வெறுத்துட்டு.. தெரியாம வந்துட்டோமானு தோணும்.. மனம் திறந்த விஜே தீபிகா!

நான் மீடியாவுக்கு வரதுக்கு அம்மா, அப்பா ரெண்டு பேருமே ரொம்ப பயந்தாங்க. சொந்தகாரங்க திட்டும்போது ரொம்ப வருத்தப்படுவாங்க- மனம் திறந்த விஜே தீபிகா!

author-image
WebDesk
New Update
VJ Deepika

During those two months I hated everything Vj Deepika opens up about her past

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம், தமிழகமெங்கும் பிரபலமானவர் விஜே தீபிகா. இதில் கண்ணனுக்கு ஜோடியாக ஐஸ்வர்யாவாக, சீரியலில் குறுகிய காலமே நடித்தாலும், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார். பிறகு முகப்பரு சிகிச்சைக்காக தீபிகா, சீரியலில் இருந்து பாதியிலேயே விலகினார்.

Advertisment

இப்போது தீபிகா, ஜீ தமிழ் டிவியின் சித்திரம் பேசுதடி சீரியலில் நடிக்கிறார். சீரியலின் ப்ரோமோவை’ தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த தீபிகா, “நான் திரும்பி வந்துவிட்டேன். சித்திரம் பேசுதடி சீரியல் குழுவுக்கும், ஜீ தமிழுக்கும் நன்றி” என எழுதியுள்ளார்.

இந்நிலையில், தீபிகா சமீபத்தில் ஐபிசி மங்கை யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்தார். ஆங்கரிங் பயணம், சீரியல், வெற்றி தோல்வி, குடும்பம் என அனைத்தையும் அந்த பேட்டியின் போது தீபிகா பகிர்ந்து கொண்டார்.

அப்போது பேசிய தீபிகா,”நான் வீட்டுல மூனாவது பொண்ணு. எனக்கும், அக்காவுக்கும் கிட்டத்தட்ட 10 வருஷம் வயசு வித்தியாசம் இருக்கு. என் அம்மா, அப்பா ரெண்டு பேரும் 60 வயசுக்கு மேலதான்.

அதனால, நான் மீடியாவுக்கு வரதுக்கு அம்மா, அப்பா ரெண்டு பேருமே ரொம்ப பயந்தாங்க. சொந்தகாரங்க திட்டும்போது ரொம்ப வருத்தப்படுவாங்க. எந்தவொரு ஃபங்ஷனுக்கு போனாலும், அம்மாவ அழ வச்சுடுவாங்க. ஏதாவது ஒன்னு கேட்பாங்க. அம்மா அழுதுட்டே வந்து புலம்பிட்டே இருப்பாங்க.

இப்போமே நிறைய பேரு, உனக்கு வீடு, குடும்பம் பாக்கணும்னா என்ன வேணாலும் பண்ணலாமே, படிச்சிருக்க. படிச்ச வேலைக்கு போலாமே. ஏன் இதை பண்றனு கேட்பாங்க.

ஆனா, இது என்னோட ஆசை. அதேநேரத்துல நான் இதுக்காக ஓடுறேன்னு என் அம்மா, அப்பாவையும் விட்ற முடியாது. ரெண்டையுமே பேலன்ஸ் பண்ணனும். அதனால ஒவ்வொன்னையும் புரிய வைக்கிறது கொஞ்சம் கஷ்டம்தான்.

மீடியாவுக்கு வந்த புதுசுல நிறைய பொய் சொல்லிருக்கேன். நான் சென்னையில ஹாஸ்டல்ல இருந்தேன். என் அம்மா, அப்பா ஊருல இருப்பாங்க. அப்போ லோக்கல் சேனல்ல வேலைப்பாத்தேன். என்னோடது லைவ் ஷோ. நைட் 7-8 வரை ஆஃபிசுல இருக்கணும். அப்புறம்தான் ஹாஸ்டல் வரமுடியும். என்னோட ஸ்டுடியோ தேனாம்பேட்டையில இருக்கும். நான் சூளைமேட்டுல ஹாஸ்டல்ல இருந்தேன். வேலை முடிச்சு, ஹாஸ்டல் வரதுக்கு நைட் 9.30 ஆயிடும்.

ஆனா நான் வீட்டுல 7 மணிக்கே ஹாஸ்டல் வந்ததா சொல்லிருவேன். என் அம்மா, அப்பா ரொம்ப வெள்ளந்தி. நான் என்ன சொன்னாலும் நம்பிருவாங்க.

நான் பண்றது லைவ் ஷோ. ஆனா நான் முன்னாடியே, ரெக்கார்ட் பண்ணிட்டு இப்போ போடுறாங்கனு சொல்லுவேன். அதை என் அம்மா, அப்பா நம்பிருவாங்க.

ஊருல இருக்கும்போது, சாயங்காலம் 6 மணிக்கு மேல வெளியே போகக் கூடாதுனு சொல்லுவாங்க. ஆனா, நான் 10 மணிக்குத்தான் ஹாஸ்டலுக்கு வருவேன். அதுவும் சென்னை புது இடங்கிறதால ரொம்ப பயப்படுவாங்க.

ஆனா, என் அம்மா, அப்பாவ கஷ்டப்படுத்தனும், அவங்கள ஏமாத்தனும் எண்ணமெல்லாம் என் மனசுல கிடையாது.

நான் ஆடிஷன் போறதெல்லாம் சொல்லமாட்டேன். ஆனா கிடைச்சதுக்கு அப்புறம், சும்மா காலேஜ் போயிட்டு இருந்தேன்மா, ஸ்டேஜ்ல பேசுறது பாத்துட்டு அவங்களா கூப்பிட்டாங்க. என் ஃபிரென்ட் ஆடிஷன் போனா. நான் அவக்கூட சும்மா துணைக்கு போனேன். என்னையும் ஆடிஷன் கொடுக்க சொன்னாங்க. நான் கொடுத்தேன், செலெக்ட் ஆகிட்டேன். இப்படித்தான் சொல்லுவேன். நான் தேடி அலையிறேனு எதுவுமே சொல்லமாட்டேன்.

அதேமாதிரி வேலை பாத்த புதுசுல நிறைய சம்பளம் வருதுனு பொய் சொல்லுவேன். ஆனா, அந்த நேரம் எனக்கு சம்பளமே இருக்காது. சம்பளம் இல்லாம நீ எப்படி மெயின்டேன் பண்ற? ஏன் போனும் கேட்பாங்க.. இப்படி கொஞ்ம், கொஞ்சம் பொய் சொல்லிட்டு வந்ததுதான்.

அப்புறம் போகபோக, என் அம்மா, அப்பாவுக்கு புரிஞ்சிக்குற பக்குவம் வந்த உடனே உண்மைய சொல்ல ஆரம்பிச்சேன்.

நான் சீரியல் எதிர்பார்த்து வந்து பொண்ணு கிடையாது. ஆங்கரிங் மட்டும்தான் என் மனசுல இருந்தது. நிறைய சேனல்ல ஆடிஷன்ஸ் கொடுத்துருந்தேன். எங்கயுமே கிடைக்கல.

முதல்ல ஒரு டிவிக்கு போனுனா, அதுல எனக்கு பெரிசா அனுபவம் கிடையாது. எந்த வழியுமே தெரியாது. நான் சின்ன சின்ன லோக்கல் சேனல்லய வேலை பாத்துட்டே இருந்தேன். திடீர்னு சன் டிவியில கிடைக்கும்போது ஒகே, போலாம் அப்படிங்கிற எண்ணம்தான் இருந்தது. நடிப்பு மேல ஆர்வம் இருந்து போகல.. இவ்ளோ நாள் கஷ்டப்பட்டாச்சு. சின்ன சேனல்ல இருந்து இப்போ, பெரிய சேனலுக்கு போறோம்னுதான் நினைச்சேன்.

சீரியல் வாய்ப்பு கிடைச்ச அப்புறம், உள்ளே போயி இருபது நாள் வேலை பாத்தேன். சீரியலும் முடிஞ்சது. அந்த ரெண்டு மாசத்துல எனக்கு எல்லாமே வெறுத்துட்டு. மீடியாவே வெறுக்குற அளவுக்கு நான் கஷ்டப்பட்டேன். ஏனா, எனக்கு ஒன்னுமே தெரியாது.

ஆங்கரிங்ல புதுசா சேரும்போது, ஒன்னுமே தெரியலனாலும் சொல்லிக் கொடுப்பாங்க.. ஆனா, டிவி சீரியல அப்படி இல்ல. ஆனா, இது பெரிய சேனல். ஆக்டிங்ல ஒன்னுமே தெரியாம போயி நின்னுட்டு அழுதுருக்கேன். அந்த சமயம் நம்ம தெரியாம வந்துட்டோமானு தோனும். ஆனா, அப்புறம் நானே என்னை சமாதானபடுத்திக்கிட்டேன். இதெல்லாம் ஸ்கூல், காலேஜ் படிக்கிற மாதிரி, கடந்து போயிடனும். நம்ம பெரிய சேனல்ல வந்துட்டா லைஃப் செட்டில்லாம் கிடையாது.

என்னை மாதிரி எவ்ளோ பேரு, பல வருஷமா மீடியால இருந்தும் சரியான வாய்ப்பு கிடைக்காம கஷ்டப்படுறாங்க. ஆனா, நான் வந்து 5 வருஷம்தான் ஆகுது. இந்த ஃபீல்ட்ல கத்துக்கிட்டு மெதுவாதான் போகமுடியுங்கிறது தெரியுது. அதனால வெயிட் பண்ணி போகலாம்னு தீபிகா பேசினார்.

அதேமாதிரி, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில், முகப்பரு பிரச்சனையால் விட்டு போனது குறித்து தீபிகா பேசுகையில், எனக்கு முகப்பரு விஷயம் புதுசாத்தான் இருந்தது. ஏன்னா, அதுவரைக்கும் என்னைய யாரும்’ நீ அப்படி இருக்க, இப்படி இருக்கனு எதுவுமே சொன்னதில்ல. ஆனா, சோஷியல் மீடியால வந்த கமென்ட்ஸ் தான் என்னைய ரொம்ப காயப்படுத்திச்சு.

அப்புறம் என் மனசுல என்ன இருக்குதுனு வெளிப்படையா சொன்னபிறகு, எல்லா கமென்ட்ஸ்மே பாசிட்டிவா மாறிடுச்சி. அதனால எனக்கும் ஒரு நம்பிக்கை இருந்தது. அதுக்கு அப்புறமா நான் டீம் ஓட பேசும் போதும், இந்த கேரெக்டருக்கு மெச்சூர்டா இருக்கிற மாதிரி வேணும். நீங்க சின்ன பொண்ணா இருக்கிறதா ஃபீல் பண்னாங்க. இப்படி ஆயிரம் காரணம் இருந்தாலும், அந்த சீரியல்ல இருந்து வரது கொஞ்சம் கஷ்டமாதான் இருந்தது.

ஏன்னா இந்த சீரியல்னாலதான் இன்னைக்கு நான் வெளியே தெரியுறேன். இதுதான் எனக்கு வாழ்க்கை கொடுத்தது. அதுபோகும் போது கஷ்டமாத்தான் இருந்தது. இப்போவுமே சரி இருந்திருக்கலாம் தோணும். ஆனா, இது மட்டுமே இல்லல. இன்னும் நிறைய இருக்கு என மன உறுதியுடன் கூறுகிறார் விஜே தீபிகா!

ஐபிசி மங்கை யூடியூப் சேனலுக்கு தீபிகா அளித்த பேட்டி இதோ!

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment