Easy Sesame Recipe Tamil : உங்கள் பொடி சேகரிப்பில் சேர்க்க மற்றொரு எளிதான ரெசிபி இங்கே. காலையில் எழுந்து சாதம் மட்டும் வைத்துவிட்டால் போதும். வீட்டிலேயே தயாரித்து வைத்திருக்கும் இந்த பொடியை சுடசுட சாதத்தோடு கலந்து சாப்பிடலாம். மேலும், இட்லி, தோசையுடனும் இந்த பொடி பக்கா காம்போவாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
வெள்ளை எள் - 1 கப்
உளுத்தம் பருப்பு - ¾ கப்
கடலை பருப்பு - ¼ கப்
உலர்ந்த சிவப்பு மிளகாய் - 6-7
கறிவேப்பிலை - 10-12
பெருங்காயத்தூள் - ½ டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
Ellu podi preparation
செய்முறை
ஒரு வாணலியில் குறைந்த தீயில், உளுத்தம் பருப்பு மற்றும் கடலை பருப்பு சேர்த்து உலர்ந்த நிலையில் அவை மணம் மற்றும் நிறம் மாறத்தொடங்கும் வரை வறுத்தெடுக்கவும்.
அடுத்து, சிவப்பு மிளகாயை உலர்ந்த நிலையில் அவற்றின் நறுமணம் மாறும் வரை வறுக்கவும்.
கறிவேப்பிலை சிறிது சுருளும் வரை உலர்ந்த நிலையில் வறுக்கவும்.
இறுதியாக, உலர்ந்த எள்ளை வறுக்கவும். அவை பொன்னிறமாக மாறி வெடிக்கச் செய்யத் தொடங்கும். அந்த சமயத்தில் அடுப்பை அணைத்து, பெருங்காயப்பொடியை சேர்க்கவும். இது, எள் விதைகளின் எஞ்சிய வெப்பத்தில் சமைத்து அதன் நறுமணத்தை வெளியிடும்.
அனைத்து பொருட்களையும் அறை வெப்பநிலையில் குளிர்விக்க வைத்து, பின்னர் நன்கு பொடியாக அரைக்கவும். இதைச் செய்யும்போது மிக்சி கிரைண்டரை பல்ஸ் மோடில் வைத்திருப்பது அவசியம். இல்லையெனில் மிக்சி சூடாகத் தொடங்கும். இதனால் எள், எண்ணெய்யை வெளியேற்றும்.
அரைத்த பொடியில் உப்பு கலந்து சுத்தமான ஜாடியில் சேமித்து வைக்கலாம்.
நெய் அல்லது தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து தோசை, இட்லி, ஊத்தப்பத்துடன் மற்றும் சூடான சாதத்துடன் இந்த பொடியைச் சேர்த்துச் சாப்பிடலாம்.
குறிப்பு:
வெள்ளை எள் விதைகளுக்கு பதிலாகக் கருப்பு எள் விதைகளைப் பயன்படுத்தலாம். ஆனால், பொடியின் நிறம் கருப்பாக இருக்கும் மற்றும் சுவை மிகவும் வலுவாக இருக்கும்.
காரத்திற்குத் தகுந்தாற்போல் மிளகாயைக் கூடவோ குறைக்கவோ செய்யலாம்.
எப்போதும் குறைந்த தீயில் வறுக்கவும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"