மாறிவரும் காலநிலை, மாசுபாடு, வறட்சி மற்றும் குளிர்ச்சிக்கு எதிராக நமது உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில், பல பருவகால பழங்கள் மற்றும் காய்கறிகளை குளிர்காலம் கொண்டு வருகிறது.
Advertisment
கீரை, கேரட், பட்டாணி முதல் பெர்ரி, ஆப்பிள், கிவி மற்றும் கொய்யா வரை, இந்தியாவில் குளிர்காலத்தை அனுபவிக்க ஏராளமான பருவகால உணவுகள் உள்ளன.
அதில் ஒன்றுதான் சர்க்கரைவள்ளிக் கிழங்கு. குளிர்காலத்தில் சர்க்கரைவள்ளிக் கிழங்கு ஊட்டச்சத்து நிபுணர்களால் பரிந்துரைக்கப்படுகிறது, ஏனெனில் இது நீண்ட செரிமான நேரம் காரணமாக உள்ளே இருந்து உடலை சூடாக வைத்திருக்க உதவுகிறது.
பிரபல ஊட்டச்சத்து நிபுணர் ருஜுதா திவேகர் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில், சர்க்கரைவள்ளிக் கிழங்கின் நன்மைகளை பகிர்ந்து கொண்டார். உணவு சிறந்த மருந்து என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
இது ஒரு நார்ச்சத்துள்ள கிழங்கு, உடல் பருமன், பிசிஓடி மற்றும் நீரிழிவு நோயுடன் போராடுபவர்கள் அனைவரும் சாப்பிட பாதுகாப்பானது.
இதில் உள்ள வைட்டமின் ஏ அனைத்து நோய்த்தொற்றுகளையும் எதிர்த்துப் போராடும்.
அந்தோசைனின்கள் உங்கள் சருமத்தை மிருதுவாக வைத்திருக்கும். தாதுக்கள் மற்றும் வைட்டமின் பி வயிறு வீக்கம், அமிலத்தன்மை மற்றும் மலச்சிக்கலைத் தடுக்கும்.
குறிப்பாக நீங்கள் அதிமாக மது அருந்தி குறைவாக தூங்கினால், இதைத்தான் சாப்பிட வேண்டும்”
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “