'உன்னுடையே சுயசரிதையை நீயே எழுதணும். எழுதுவியா? உன்னுடைய ஃபேன்ஸுக்கெல்லாம் அது ரொம்ப உதவியா இருக்கும். பெரிய இன்ஸ்பிரேஷனா இருக்கும்.'
Advertisment
"சுயசரிதைனா உண்மையை எழுதனும். எதையும் மறைக்கக் கூடாது. நிறைய பேருடைய மனசை துன்பப்படுத்தணும் என்பதற்காக மறைக்கக் கூடாது. அதை உண்மையா, நடந்தத, நடந்தது மாதிரியே எழுதலனா அது சுயசரிதையே கிடையாது. மகாத்மா காந்தியோட சுயசரிதையை படிச்சபிறகு, அவருக்கு வந்த தைரியம் எனக்கு வந்தால் நான் எழுதுவேன்".
கேள்வியைக் கேட்டவர் மறைந்த இயக்குனர் சிகரம் கே பாலச்சந்தர்.
பதில் சொன்னவர் அவரது சிஷ்யர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.