சருமத்தை கவனித்துக்கொள்வதற்கு மிகுந்த பொறுமையும், முயற்சியும் தேவை. ஒரு நல்ல தோல் பராமரிப்பு வழக்கமானது சருமத்தை பளபளப்பாகவும் ஆரோக்கியமாகவும் மாற்றும், அதே சமயம் சுருக்கம் மற்றும் முகப்பரு போன்ற பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.
ஒரு நல்ல தோல் பராமரிப்பு முறை என்பது விலையுயர்ந்த பொருட்களுக்கு செலவழிப்பதை அர்த்தப்படுத்துவல்ல. வீட்டு வைத்தியம் கூட உங்கள் சருமத்தை அழகுபடுத்த ஒரு சிறந்த வழியாகும். ஆனால் எப்படி, எங்கு தொடங்குவது என்பது பற்றி உங்களுக்குத் தெரியாவிட்டால், நீங்கள் முயற்சி செய்யக்கூடிய ஒரு எளிய தீர்வு இங்கே உள்ளது.
பியூட்டி இன்ஃப்ளூயன்சர் ஆஷ்னா கபூர், பளபளப்பான சருமத்திற்கு இயற்கையான பொருட்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பதைக் இன்ஸ்டா வீடியோவில் பகிர்ந்துள்ளார்.
தேவையான பொருட்கள்
தேங்காய் பால்
தேன்
வைட்டமின் ஈ எண்ணெய்
முறை
* மூன்றையும் நன்றாக கலந்து பேஸ்ட் செய்து கொள்ளவும். காட்டன் பால்ஸ் பயன்படுத்தி, முகம், கழுத்து, கழுத்தின் பின்பகுதியில் அப்ளை செய்யவும்.
* இதை இரு நாட்களுக்கு ஒருமுறை செய்து வர, உங்கள் சருமத்தில் உள்ள வித்தியாசத்தை நீங்களே பாருங்கள்.
* எண்ணெய் சருமம் உள்ளவர்கள் தேனை தவிர்க்கலாம்.
குறிப்பு: எந்த ஒரு அழகு பொருளையும் முகத்தில் நேரடியாக அப்ளை செய்வதற்குமுன், உங்கள் கைகளில் பேட்ச் டெஸ்ட் செய்து கொள்ளுங்கள்!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“