Advertisment

வெந்தயம், அரிசி நீர் போதும்.. வீட்டிலேயே ஹேர் ஸ்ட்ரெய்ட்னிங் செய்யலாம்.. ஆயுர்வேத நிபுணர் டிப்ஸ்

வீட்டில் நீங்களே செய்யக்கூடிய சில முடி பராமரிப்பு வைத்தியங்களை ஆயுர்வேத நிபுணர் பகிர்ந்து கொண்டார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
lifestyle

Natural tips to straighten hair

பலர் தங்கள் தலைமுடி மென்மையாகவும், நேராகவும் இருக்க விரும்புகிறார்கள். இதற்காக பார்லருக்கு சென்று முடியை ஸ்ட்ரெய்ட்னிங் செய்து கொள்கின்றனர். ஆனால், முடியை நேராக்க பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

Advertisment

தி ஜர்னல் ஆஃப் தி நேஷனல் கேன்சர் இன்ஸ்டிட்யூட்டில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், முடியை நேராக்கக்கூடிய இரசாயனங்கள் மற்றும் கருப்பை புற்றுநோய்க்கு இடையே ஒரு தொடர்பைக் கண்டறிந்துள்ளது. பாரபென்ஸ், பிஸ்பெனால் ஏ, உலோகங்கள் மற்றும் ஃபார்மால்டிஹைட் போன்ற ஸ்ட்ரெய்ட்னர்களில் காணப்படும் பல இரசாயனங்கள் கருப்பை புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கலாம் மற்றும் சில எண்டோகிரைன்-சீர்குலைக்கும் பண்புகளைக் கொண்டுள்ளன என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதை விளக்கிய ஆயுர்வேத நிபுணர் டிம்பிள் ஜங்தா, உடலின் மிகப்பெரிய சுவாச உறுப்பு, சருமம் தான் என்று கூறினார். இது நுண்துளைகள் கொண்டது, நாம் அதற்கு தொடர்ந்து பயன்படுத்துவதை அது உறிஞ்சிவிடும். உண்மையில், முழுமையாக வளர்ந்த ஒருவர் 3.6 கிலோகிராம் வரை தோல் கொண்டிருக்கலாம், இது கிட்டத்தட்ட 22 சதுர அடி என்று அவர் கூறினார்.

அதனால்தான், ஆயுர்வேதம் சருமத்தை சிகிச்சையின் முதல் படியாக கருதுகிறது, அங்கு மருந்து எண்ணெய்கள் பயன்படுத்தப்பட்டு உடலால் உறிஞ்சப்படுகின்றன. இது தோலின் கீழ் குவிந்துள்ள நச்சுக்களை திரவமாக்கி அவற்றை வியர்வை வழியாக வெளியேற்ற உதவுகிறது, என்று அவர் மேலும் கூறினார்.

ஆனால், உங்கள் சருமம் எப்படி நச்சுகளை வெளியேற்றுகிறதோ, அது போல நச்சுப் பொருட்களை உறிஞ்சும் விடும், இது பெரும்பாலும் தோல் பராமரிப்பு மற்றும் முடி பராமரிப்புப் பொருட்களில் அடிக்கடி நிகழ்கிறது.

இதனால்தான் எதை உண்ண முடியுமோ அதை தோலில் தடவுங்கள் என்கிறோம். இது சற்று சவாலானதாக இருந்தாலும், 80:20 விதியைப் பின்பற்றுங்கள், அங்கு நீங்கள் பயன்படுத்தும் 80% பொருட்கள் ஆர்கானிக் மற்றும் வீட்டில் தயாரிக்கப்பட்டவையாகவே இருக்க வேண்டும், மீதமுள்ள 20% ஆர்கானிக், சைவம் மற்றும் லேசான தயாரிப்புகளைத் தேர்ந்தெடுக்கவும், என்று அவர் கூறினார்.

மேலும் வீட்டில் நீங்களே செய்யக்கூடிய சில முடி பராமரிப்பு வைத்தியங்களையும் ஆயுர்வேத நிபுணர் பகிர்ந்து கொண்டார்.

மோர்

இது இந்தியாவில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ளது. பெண்கள் தங்கள் தலைமுடியை கழுவ வெண்ணெய் கடையும் போது அல்லது நீர்த்த தயிர் ஆகியவற்றிலிருந்து வடிகட்டிய தண்ணீரைப் பயன்படுத்தினர். இது பாக்டீரியல் என்சைம்களின் வளமான மூலமாகும், இது உச்சந்தலையை சுத்தமாக வைத்திருக்கவும், முடியை வளர்க்கவும், மென்மையாகவும் ஆரோக்கியமாகவும் மாற்ற உதவுகிறது.

அரிசி நீர்

சீனாவில் பெண்கள் பெரும்பாலும் தங்கள் தலைமுடியைக் கழுவுவதற்கு புளித்த அரிசி தண்ணீரைப் பயன்படுத்துகிறார்கள். இது கூந்தலுக்கு ஊட்டமளித்து, நேராகவும், இயற்கையான நிறத்திலும் வைக்கும். வெறுமனே, அரிசி தண்ணீரை உங்கள் தலைமுடியில் ஊற்றி, உச்சந்தலையில் மசாஜ் செய்யவும். 20 நிமிடங்கள் வரை தண்ணீரை அப்படியே விட்டுவிட்டு, வெதுவெதுப்பான நீரில் நன்கு கழுவவும். வாரம் ஒரு முறையாவது இதைச் செய்யலாம்.

வெந்தயம்

1 டீஸ்பூன் வெந்தயத்தை இரவு முழுவதும் ஊற வைக்கவும். மறுநாள் காலை, அதை அரைத்து சம அளவு தயிருடன் கலக்கவும். இதை ஹேர் மாஸ்க் அல்லது ஷாம்புவாகப் பயன்படுத்தலாம். இது உச்சந்தலையில் ஊட்டமளிக்கிறது மற்றும் முடியை நேராகவும் நீரேற்றமாகவும் வைத்திருக்க உதவுகிறது.

உங்கள் தலைமுடிக்கு ஊட்டமளிக்க இயற்கையான பொருட்களைப் பயன்படுத்தும்போது, ​​கடுமையான இரசாயனங்களை அடிக்கடி பயன்படுத்துவதால் குவிந்திருக்கும் இரசாயனங்களை அகற்றவும் அவை உதவுகின்றன, என்று மருத்துவர் டிம்பிள் கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment