தற்போதைய சூழ்நிலைகளில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில், ஒரு பருவகால இருமல் கூட ஒருவரை அதிக கவலைகளுக்கு இட்டுச் செல்லும். தொண்டை புண் மற்றும் சளி ஆகியவை மருத்துவமனைக்குச் செல்லக்கூடிய அளவிற்கு மதிப்பு இல்லை என்றாலும், அவை வலி மற்றும் எரிச்சலை ஏற்படுத்தும்.
மேலும், பருவகால இருமல் மற்றும் சளி பெரும்பாலும் தொண்டை புண்ணில் தொடங்கி பலருக்கு தொந்தரவாக இருக்கும். இதற்கான வீட்டு வைத்தியம் எளிதானது மட்டுமல்ல, உறுத்தும் மாத்திரைகளை நம்புவதையும் தடுக்கிறது.
வாழ்க்கை முறை பயிற்சியாளர் லூக் கௌடின்ஹோ ஒரு எளிய வீட்டு வைத்தியத்தை பரிந்துரைக்கிறார், இதற்கு உங்களுக்கு சில எளிய சமையலறை பொருட்கள் மட்டுமே தேவை.
தொண்டைப் புண் நீக்கும் எளிய வைத்தியத்திற்கு, ஏலக்காய், கிராம்பு, எரிந்த எலுமிச்சை, புதிய எலுமிச்சை, இலவங்கப்பட்டை ஆகியவற்றை சூடான நீரில் ஊற வைக்க லூக் கௌடின்ஹோ அறிவுறுத்துகிறார்.
எரிந்த எலுமிச்சையை பெற, எலுமிச்சை துண்டுகளை நெருப்பு சுடர் மீது வைத்து லேசான கரி தோன்றத் தொடங்கும் வரை வைத்து எடுத்துக் கொள்ளவும்.
தேவையான பொருட்கள்
ஏலக்காய்
கிராம்பு
எரிந்த எலுமிச்சை
புதிய எலுமிச்சை
இலவங்கப்பட்டை
வெந்நீர்
செய்முறை
* சூடான நீரில் மேற்கூறிய அனைத்து பொருட்களையும் கலந்துக் கொள்ளுங்கள். பின்னர் இளஞ்சூடாக இந்த பானத்தை குடிக்கலாம்.
இந்த வீட்டு வைத்தியம் தொண்டை புண் சிகிச்சைக்கு மட்டுமே, இது பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை விட மேலானது இல்லை என்றும் அவர் கூறினார்.
நீங்கள் மற்ற அறிகுறிகளை சந்திக்கிறீர்கள் என்றால், உடனடியாக ஒரு மருத்துவ நிபுணரை அணுகி கொரோனாவுக்கு பரிசோதனை செய்யுங்கள். கடுமையான அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாடுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.