சிறு தானிய வகைகளில் முக்கியமானது கம்பு. தானியங்களிலேயே அதிக அளவில் புரதம், கம்பில் தான் 11.8 சதவிகிதம் உள்ளது. கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு சத்து, ரிபோஃப்ளோவின், நாயசின், வைட்டமின்கள், தாதுப்புக்கள், மாவுச்சத்து, வைட்டமின் B12, பீட்டா கரோட்டின், நார்ச்சத்து போன்ற பல வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் ஏராளமான மருத்துவ பயன்களை கொண்டுள்ள கம்பில் சுவையான அடை செய்வது எப்படி என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கம்பு - 1 கப்
அரிசி - 1 கப்
கடலை பருப்பு - 1 கப்
உளுந்து - 1/2 கப்
வத்தல் - 5
சீரகம் - 1/2 ஸ்பூன்
வெங்காயம் - 1
கறிவேப்பிலை - சிறதளவு
பெருங்காயத்தூள் - சிறிதளவு
உப்புஎண்ணெய் - தேவைக்கேற்பு
செய்முறை
*கம்பு, அரிசி, பருப்பு, உளுந்து அனைத்தையும் 5 மணி நேரம் ஊற வைக்கவும்.
*வெங்காயம், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
*நன்றாக ஊறியதும் அதனுடன் வத்தல், சீரகம் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
*அரைத்த மாவில் தேவைக்கேற்ப உப்பு, பெருங்காயத்தூள் சேர்க்கவும்.
*அடுத்து அதனுடன் நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்தது மாவை நன்றாக கலந்து 5 மணி நேரம் புளிக்க விடவும்.
*தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை அடைகளாக ஊற்றி சற்று எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுத்து பரிமாறவும்.
சுவையான மற்றும் சத்தான கம்பு அடை ரெடி.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil