Advertisment

வெறும் தண்ணீரில் தினமும் ஒரு டீ ஸ்பூன் இந்தப் பொடி… சுகருக்கு வீட்டிலேயே தீர்வு!

நீரிழிவு நோய் வந்துவிட்டது என்று கவலைப்படாதீர்கள். சுகருக்கு உங்கள் வீட்டிலேயே தீர்வு இருக்கிறது. ஆம் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து செய்யப்படும் ஒரு ஸ்பெஷல் பொடியை நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
home remedy to diabetes, home remedy to blood sugar, special powder to control blood sugar level, வெறும் தண்ணீரில் தினமும் ஒரு டீ ஸ்பூன் இந்தப் பொடி சுகருக்கு வீட்டிலேயே தீர்வு, பாதாம், ஏலக்காய், நாவல் பழம், நெல்லிக்காய், மிளகு, நீரிழிவு நோய், almonds, elaichi, alma, pepper, diabetics, diabetes

பொதுவாக ஒருவருக்கு சுகர் இருப்பது உறுதியானதும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க அதற்கான உணவு பொருட்களைத் தேடத் தொடங்குகிறார்கள். சுகர் வந்துவிட்டது என்று கவலைப்படாதீர்கள், சுகருக்கு உங்கள் வீட்டிலேயே தீர்வு இருக்கிறது. ஆம், வெறும் தண்ணீரில் தினமும் ஒரு டீ ஸ்பூன் இந்த பொடியை கலந்து சாப்பீடுங்க ரத்தத்தில் சர்க்கரையை கட்டுப்பாட்டில் வையுங்கள்.

Advertisment

நீரிழிவு நோய் இன்றைக்கு பொதுவான உடல்நலப் பிரச்னயாக மாறியிருக்கிறது. ஒருவருக்கு நீரிழிவு இருப்பது உறுதி செய்யப்பட்டதும், அதற்குப் பிறகு, ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உணவுப் பொருட்கள், உடற்பயிற்சி, மருந்துகள் எடுத்துக்கொள்ளப் போகிறார்கள். ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த முடியாமல் போனால், நீரிழிவு நோயின் அறிகுறிகளை மோசமாக்குவதன் மூலம் நோயின் சிக்கலை அதிகரிக்கிறது. காலப்போக்கில், கட்டுப்படுத்தப்படாத நீரிழிவு நோயால் சிறுநீரக செயலிழப்பு, பக்கவாதம், நரம்பு பாதிப்பு மற்றும் பார்வை குறைபாட்டுக்கு வழிவகுக்கும். அதனால், நீரிழிவு நோயாளிகள் நன்கு சமநிலையான உணவை உட்கொள்வதோடு ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவது முக்கியம்.

அதனால், நீரிழிவு நோய் வந்துவிட்டது என்று கவலைப்படாதீர்கள். சுகருக்கு உங்கள் வீட்டிலேயே தீர்வு இருக்கிறது. ஆம் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து செய்யப்படும் ஒரு ஸ்பெஷல் பொடியை நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். அந்த ஸ்பெஷல் பொடியை எப்படி தயாரிப்பது, எப்படி உட்கொள்வது என்பதைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

சுகருக்கு தீர்வு காண ஸ்பெஷல் பொடி செய்ய தேவையான பொருட்கள்:

பாதாம் 100 கிராம்,

மிளகு 100 கிராம்,

சிறிய ஏலக்காய் 100,

வெந்தயம் 2 டீ ஸ்பூன்,

நெல்லிக்காய் தூள் 2 டீ ஸ்பூன்,

கருப்பு கொண்டைக் கடலை 250 கிராம்,

வேப்பம்பூ தூள் 2 டீ ஸ்பூன்,

நாவல் பழத் தூள் 2 டீ ஸ்பூன், இவற்ற எடுத்துக்கொள்ளுங்கள்.

செய்முறை மற்றும் உட்கொள்ளும் முறை:

அனைத்து பொருட்களையும் மிக்சி கிரைண்டரில் போட்டு அரைத்து பொடி செய்து கொள்ளுங்கள். அவற்றை காற்று புகாத டப்பாக்களில் அடைத்து வைத்துக்கொள்ளுங்கள். உணவு உட்கொள்வதற்கு 30 நிமிடங்களுக்கு முன் தினமும் 1 டீ ஸ்பூன் இந்த ஸ்பெஷல் பொடியை தண்ணீரில் கலந்து உட்கொள்ளவும். ஒரு நாளைக்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை சாப்பிடுவது நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பலன் அளிக்கும். மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்படுபவர்களும் இந்த பொடியை தினமும் சாப்பிடலாம்.

இந்த சுகருக்கு தீர்வு காணும் இந்த ஸ்பெஷல் பொடியில், அனைத்து ஆரோக்கியமான பொருட்கள் உள்ளன. இது மருத்துவ குணமும் ஆரோக்கிய நன்மைகளும் உள்ளன. இந்த பொருட்கள் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகின்றன. இந்த பொருட்களில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இரத்தத்தில் குளுக்கோஸை மெதுவாக வெளியிட உதவுகிறது. உணவுக்கு முன் இதை உட்கொள்வது சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

ஃபிளாவனாய்டுகள், ட்ரைடர்பெனாய்டு, ஆன்டி-வைரல் கலவைகள் மற்றும் கிளைகோசைடுகள் ஆகியவை வேப்பம்பூவில் நிறைந்துள்ளன. வேப்பம்பூர் நீரிழிவு நோயாளிகளால் பரவலாக உட்கொள்ளப்படுகிறது. ஏனெனில் இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. தவிர, பாதாம் மற்றும் மிளகில் வைட்டமின் இ நிறைய உள்ளது. ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளதால், செரிமானத்தை ஊக்குவிக்க உதவுகிறது. இந்த ஸ்பெஷல் பொடியை ஒரு டீ ஸ்பூன் வெறும் தண்ணீரில் கலந்து தினமும் குடித்து வர சுகருக்கு தீர்வு காணலாம்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Healthy Life Healthy Food Tips Sugar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment