சந்தையில் ஏராளமான தோல் பராமரிப்பு பொருட்கள் இருந்தாலும், நம்மில் பலர் பழமையான வீட்டு வைத்தியத்தை தான் விரும்புகிறோம். உங்கள் சருமத்தில் அந்த பிரகாசத்தைப் பெற நீங்களும் சில வீட்டிலேயே தயாரிக்கக் கூடிய மாஸ்க்-ஐ தேடுகிறீர்கள் என்றால், நீங்கள் சரியான இடத்தில் இருக்கிறீர்கள்!
டாக்டர் நிகேதா சோனாவனே சமீபத்தில் ஒரு மாஸ்க் ரெசிபி பகிர்ந்துள்ளார், அதை நீங்கள் முயற்சிக்க விரும்பலாம்.
“இந்த பண்டிகை காலத்தில் இந்த மாஸ்க்-உடன் ஒளிரும் சருமத்தைப் பெறுங்கள். இந்த மாஸ்க் அதன் கிளீன்சிங், ப்யூரிஃபயிங் மற்றும் பிரைட்னிங் நன்மைகளுக்காக நான் விரும்புகிறேன்" உங்களிடம் முல்தானி மட்டி அல்லது புல்லர்ஸ் (fuller’s earth) எர்த் இல்லையென்றால், அதை கடலை மாவு அல்லது கொண்டைக்கடலை மாவுடன் மாற்றிக்கொள்ளலாம் என்று கூறுகிறார்.
தேவையான பொருட்கள்
2 டீஸ்பூன் - புல்லர்ஸ் எர்த்
1 தேக்கரண்டி - மஞ்சள்தூள்
1 டீஸ்பூன் - தயிர்
1 தேக்கரண்டி – தேன்
முறை
ஒரு பாத்திரத்தில் அனைத்து பொருட்களையும் கலக்கவும். உலர்ந்த ரோஜா இதழ்களையும் சேர்க்கலாம்.
முகத்தை சுத்தமாக கழுவிய பிறகு, இந்த பேஸ்ட்-ஐ அப்ளை செய்யுங்கள். பிறகு 20 நிமிடங்கள் கழித்து, மெதுவாக ஸ்க்ரப் செய்து கழுவவும்.
வாரம் 1-2 முறை இந்த பேக்கை உங்கள் முகம், கழுத்து மற்றும் கைகளில் பயன்படுத்தவும்.
பலன்கள்
1. மஞ்சள் ஒரு சக்திவாய்ந்த ஆண்டி-ஆகிஸிடண்ட். இது அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது மற்றும் சருமத்தை பிரகாசமாக்க உதவுகிறது. இது மந்தமான தோற்றமுடைய சருமத்தையும் புதுப்பிக்கிறது.
2. புல்லர்ஸ் எர்த் தோலை சுத்தப்படுத்த உதவுகிறது. முல்தானி மட்டி உங்கள் சருமத்திற்கு இயற்கையான எண்ணெய்களைச் சேர்த்து, ஊட்டமளித்து, இயற்கையாகவே பளபளக்கும்.
3. தயிரில் உள்ள லாக்டிக் அமிலம் இறந்த செல்களை நீக்குகிறது. இது சருமத்தின் நுண்ணுயிரியான தோலில் உள்ள நன்மை பயக்கும் பாக்டீரியாக்களை சமநிலைப்படுத்த உதவுகிறது.
4. தேன் சருமத்தை ஈரப்பதமாக்குகிறது மற்றும் கிருமி நாசினியாக செயல்படுகிறது. இது சருமத்தில் உள்ள இயற்கையான பாக்டீரியாக்களுக்கு உணவளித்து, உங்கள் சருமத்தின் பாதுகாப்பை பலப்படுத்துகிறது.
5. இந்த சூப்பர் ஃபேஸ் மாஸ்க்-ஐ நீங்களும் முயற்சி செய்ய விரும்புகிறீர்களா?
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“