Advertisment

சிறுநீரக, கல்லீரல் கல்லை கரைக்கும் வாழைத்தண்டு கூட்டு: சுவையாக செய்வது எப்படி?

வாழைத்தண்டை வாரத்தில் ஒரு முறை உண்டால் உடம்புக்கு மிகவும் நல்லது. வாழைத்தண்டு உடம்பில் சேரும் கெட்ட நீரை வெளியேற்றும் தன்மை கொண்டது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சிறுநீரக, கல்லீரல் கல்லை கரைக்கும் வாழைத்தண்டு கூட்டு: சுவையாக செய்வது எப்படி?

நித்யா மோகனசுந்தரம்

Advertisment

publive-image

தேவையான பொருட்கள்:

வாழைத் தண்டு – 1

பாசிப்பருப்பு – 200 கிராம்

பச்சை மிளகாய் – 5

காய்ந்த மிளகாய் - 2

தக்காளி – 1

சின்ன வெங்காயம் - 100 கிராம்

பூண்டு - 5 பல்

சீரகம் - 1ஸ்பூன்

பெருங்காயத்தூள் – 1/4 ஸ்பூன்

மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்

கடுகு - சிறிது

உளுந்தம்பருப்பு - சிரிது

எண்ணெய் – 1 டேபுள் ஸ்பூன்

தேங்காய் - ஒரு மூடியில் பாதி

உப்பு – தேவைக்கேற்ப

கறிவேப்பிலை - சிறிது

கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

வாழைத்தண்டை வட்ட வடிவமாக நறுக்கவும். நறுக்கும் போது நார் வரும். அதனை அகற்றி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். மோர் கலந்த நீரில் போட்டால் கருத்து போகாமல் இருக்கும். ஒரு வாணலியில் பாசிப்பருப்பு மூழ்கும் அளவிற்கு தண்ணிர் ஊற்றி அதனுடன் மஞ்சள் தூள், சீரகம், எண்ணெய் ஒரு ஸ்பூன் சேர்த்து வேகவிடவும். பருப்பு சிறிது வெந்தததும் அதில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து 5 நிமிடத்தில் நறுக்கிய வாழைத்தண்டை போட்டு அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து வேகவிடவும். வாழைத் தண்டு நன்கு வெந்தததும். அதனுடன் தேங்காய் துருவல் சேர்க்கவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்தம்பருப்பு, பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை என அனைத்தையும் சேர்த்து தாளித்து வாழைத்தண்டு கலவையில் ஊற்றவும். ஒரு சேர கொதிக்கும் போது கொத்தமல்லி தூவி இறக்கவும்.

பயன்:

வாழைத்தண்டை வாரத்தில் ஒரு முறை உண்டால் உடம்புக்கு மிகவும் நல்லது. வாழைத்தண்டு உடம்பில் சேரும் கெட்ட நீரை வெளியேற்றும் தன்மை கொண்டது. சிறுநீரகத்திலும், கல்லீரலிலும் உண்டாகும் கல்லினைக் கரைக்கக்கூடிய வலிமை வாய்ந்தது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment