குலாப் ஜாம் என்று சொன்னவுடனே எல்லோருக்குமே நா ஊரும். அந்த அளவுக்கு வயது வித்தியாசம் பாராமல் அனைவரும் விரும்பி உண்ணுவர். இந்த குளிர் காலத்தில் நீங்கள் ஏன் சூடான குலாப்ஜாம் செய்து நண்பர்களுடனும், உறவினர்களுடனும் பகிர்ந்து உண்ண கூடாது?
தேவையான பொருட்கள்
4 - பிரட் துண்டுகள்
½ கப் - சர்க்கரை
1 கப் - தண்ணீர்
தேவையான அளவு தேங்காய்பால்
கனோலா எண்ணெய், நன்றாக வறுக்க
நீங்கள் செய்ய வேண்டியவை
முதலில் ஒரு குவளை எடுத்து 1கப் தணண்ணீர் ஊற்றவும். பிறகு அதில் 1/2 கப் சர்க்கரையை சேர்க்கவும். பின்னர் இரண்டையும் மிதமான சூட்டில் கொதிக்க வைக்கவும். சர்க்கரை பாகாக மாறும் வரை கொதிக்க வைக்க வேண்டும். சர்க்கரை பாகின் சூடு தனியும் வரை குளிர வைக்க வேண்டும்.
ஒரு தட்டு எடுத்து நான்கு பிரட்டையும் கைகளால் பொடிப் பொடியாக வேண்டும். அதனை தேங்கய் பாலுடன் கைகளால் நன்கு பிசைய வேண்டும். பின்னர் சிறு சிறு உருண்டைகளாக உருட்ட வேண்டும். மீண்டும் ஒரு முறை சுத்தமான கைகளால் சிறு சிறு உருண்டையாக பிடித்து சிறிது நேரம் உலர வைக்க வேண்டும்.
ஒரு சிறிய கடாய் எடுத்து அதில் கனோலா எண்ணெயை ஊற்றவும். பிடித்து வைத்திருக்கும் சிறு உருண்டைகளை ஒன்றன் பின் ஒன்றாக எண்ணெயில் இடவும். பொன்னிறமும் அரக்கு நிறமும் கலந்த கலவையில் வரும்போது ஒரு கரண்டியால் எடுத்து ஒரு தட்டில் வைக்க வேண்டும். பின்னர் சில நிமிடங்கள் மறுபடியும் சர்க்கரை பாகை சுட வைக்கவும். முதல் தடவை வைக்கும்போது நன்றாக சுண்டி இருந்தால் இம்முறை மிதமாக சூடு செய்தால் போதுமானது. பிறகு எண்ணெயில் பொறித்து வைத்திருக்கும் குலோப்ஜாம் உருண்டைகளை ஒன்றன் பின் ஒன்றாக சர்க்கரை பாகினுள் இடவும். மறக்காமல் குலோப்ஜாம் உருண்டைகளை சர்க்கைரை பாக்கினுள் நன்றாக ஊற வைக்கவும். இப்பொழுது நீங்கள் விரும்பிய குலோப்ஜாம் ரெடியாகி இருக்கும்.