நித்யா மோகனசுந்தரம்:
சுவையான, சத்தான கொத்தமல்லி சேவை எவ்வாறு செய்வது என்பதை பார்ப்போம்.
தேவையான பொருட்கள் :
சேமியா - 1 கப்
கொத்த மல்லித்தழை - 1 கட்டு
தேங்காய் துருவல் - கால் கப்
பச்சை மிளகாய் - 5
உளுத்தம் பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
புளி - நெல்லிக்காய் அளவு
எலுமிச்சை பழசாறு - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
கடலைபருப்பு - 2 டீஸ்பூன்
செய்முறை :
நெய்யுடன் சேமியாவை கலந்து கடாயில் வறுத்து தனியே எடுத்துக்கொள்ளுங்கள். தண்ணீரை காய வைத்து சேமியாவை சேர்த்து நன்கு வேகவிட்டு தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும். வானலியில் எண்ணையை காயவைத்து உளுத்தம்பருப்பு சேர்த்து, சிறிது வறுத்து அதில் கீறிய பச்சை மிளகாய், தேங்காய் துருவல், சுத்தம் செய்த கொத்தமல்லி தழை, புளி சேர்த்து 2 நிமிடம் வதக்கி ஆற விட்டு அரைத்துக்கொள்ளுங்கள். வானலியில் நெய்யை காயவைத்து, தாளிக்கும் பொருட்களை சேர்த்து தாளித்து, வறுத்து அரைத்த விழுதை சேருங்கள். இந்த விழுதுடன் உப்பை தேவையான அளவு சேருங்கள். அதனுடன் சேமியாவை சேர்த்து நன்கு கலக்குங்கள். சுவையான கொத்தமல்லி சேவை ரெடி.
பயன்:
சர்க்கரை நோயாளிகள் இதை சாப்பிடலாம். மேலும் எடை குறைக்க நினைப்பவர்கள் இதை வாரம் ஒருமுறை சாப்பிடலாம்.