Advertisment

டெல்டாக்ரான்: டெல்டா மற்றும் ஒமிக்ரானை இணைக்கும் புதிய கொரோனா திரிபு!

கண்டுபிடிப்புகள் குறித்து இதுவரை எந்த ஒரு சர்வதேச அதிகாரியும் கருத்து தெரிவிக்கவில்லை என்றாலும், ஆராய்ச்சிக் குழு ஜனவரி 7, 2022 அன்று வைரஸைக் கண்காணிக்கும் சர்வதேச தரவுத்தளமான GISAID க்கு தங்கள் கண்டுபிடிப்புகளை அனுப்பியுள்ளது.

author-image
WebDesk
New Update
deltacron

Know more about the new Covid-19 strain deltacron

டெல்டா மற்றும் ஓமிக்ரானை இணைக்கும் கோவிட்-19 இன், புதிய திரிபு இப்போது சைப்ரஸ் தீவு நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Advertisment

"தற்போது ஓமிக்ரான் மற்றும் டெல்டா இணை நோய்த்தொற்றுகள் உள்ளன, இந்த இரண்டின் கலவையை நாங்கள் கண்டறிந்தோம்," என சைப்ரஸ் பல்கலைக்கழகத்தின் உயிரியல் அறிவியல் பேராசிரியரும், உயிரி தொழில்நுட்பம் மற்றும் மூலக்கூறு வைராலஜி ஆய்வகத்தின் தலைவருமான லியோண்டியோஸ் கோஸ்ட்ரிகிஸ், சிக்மா டிவிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

டெல்டா மரபணுவிற்குள் ஓமிக்ரான் போன்ற ஜெனெடிக் சிக்னேட்சர்ஸ் அடையாளம் காணப்பட்டதால், இந்த கண்டுபிடிப்புக்கு டெல்டாக்ரான் என்று பெயரிடப்பட்டது என்று அவர் கூறினார்.

பேராசிரியரும் அவரது குழுவினரும், இதுபோன்ற 25 பாதிப்புகளை அடையாளம் கண்டுள்ளதாகக் கூறியுள்ளனர், புள்ளியியல் பகுப்பாய்வின்படி, மருத்துவமனையில் சேர்க்கப்படாதவர்களுடன் ஒப்பிடுகையில், கோவிட்-19 காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளிடையே ஒருங்கிணைந்த நோய்த்தொற்றின் ஒப்பீட்டு அதிர்வெண் அதிகமாக உள்ளது.

கண்டுபிடிப்புகள் குறித்து இதுவரை எந்த ஒரு சர்வதேச அதிகாரியும் கருத்து தெரிவிக்கவில்லை என்றாலும், ஆராய்ச்சிக் குழு ஜனவரி 7, 2022 அன்று வைரஸைக் கண்காணிக்கும் சர்வதேச தரவுத்தளமான GISAID க்கு தங்கள் கண்டுபிடிப்புகளை அனுப்பியுள்ளது.

இருப்பினும், சில வல்லுநர்கள் இது "SARS-CoV-2 வைரஸ்களின் பைலோஜெனடிக் ட்ரீ-யில் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால், இது ஒரு புதிய மாறுபாடாக கருத முடியாது என்று கூறுகிறார்கள்.

லண்டன் இம்பீரியல் கல்லூரியைச் சேர்ந்த வைராலஜிஸ்ட் டாம் பீகாக் ட்விட்டரில், "சிறிய புதுப்பிப்பு: பல பெரிய ஊடகங்கள் அறிக்கையிடும் சைப்ரியாட் 'டெல்டாக்ரான்' காட்சிகள் மிகவும் தெளிவாக மாசுபட்டதாகத் தெரிகிறது - அவை ஒரு பைலோஜெனடிக் ட்ரீ-யில் கொத்தாக இல்லை.

எளிமையாகச் சொன்னால், "பெரும்பாலும் (அனைத்து மாதிரிகளும்) ஒரே நாளில், ஒரே ஆய்வகத்தில், ஒரே மாதிரியான வரிசைமுறையில் வரிசைப்படுத்தப்பட்டது, இது ஒரு மாசுபடுதல் சிக்கலைக் கொண்டிருந்தது" இது கடந்த காலத்தில் நடந்ததாகக் கண்டறியப்பட்டது. எனவே, இதை "நாவல் மாறுபாடு" என்று வகைப்படுத்த முடியாது.

ஓமிக்ரான் பாதிப்புகளில் நாங்கள் சில வாரங்கள் மட்டுமே இருக்கிறோம், உண்மையான மாறுபாடுகள் அவ்வளவு விரைவில் தோன்றாது” என்று வைராலஜிஸ்ட் என்று கூறினார்.

"கணிசமான இணை சுழற்சி ஏற்பட்ட சில வாரங்கள்/மாதங்கள் வரை, நாங்கள் ஒமிக்ரானில் இரண்டு வாரங்கள் மட்டுமே இருக்கிறோம்- இன்னும் பரவலான மறுபாடுகள் உள்ளனவா என்று நான் உண்மையில் சந்தேகிக்கிறேன், ”என்று அவர் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

"25 நிகழ்வுகளின் ஆராய்ச்சியாளர்களின் ஆரம்ப கண்டுபிடிப்புகள், இந்த மாறுபாடு மிகவும் தொற்றுநோயான ஒமிக்ரான் மாறுபாட்டால் இடமாற்றம் செய்யப்படலாம் என்று கூறுகின்றன.

ஆனால் இந்த மாறுபாடு தற்போது கவலைப்பட வேண்டியதாக இருக்கக்கூடாது என்று ஹைதராபாத் யசோதா ஹாஸ்பிடல்ஸ் இன்டர்வென்ஷனல் நுரையீரல் மற்றும் தூக்க மருத்துவத்தின் ஆலோசகர் டாக்டர் விஸ்வேஸ்வரன் பாலசுப்ரமணியன் கூறினார்.

"கிடைத்த ஆரம்ப தரவுகளின்படி, 25 பாதிப்புகளில், 11 மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளிடமிருந்து பதிவாகியுள்ளன, மீதமுள்ள 14 பாதிப்புகள் பொது மக்களில் அடையாளம் காணப்பட்டுள்ளன" என்று டாக்டர் பாலசுப்ரமணியன் குறிப்பிட்டார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment