Advertisment

இனி தோசை மாவு கடையில வாங்காதீங்க.. உங்களுக்காக செஃப் பகிரும் 4 சிம்பிள் டிப்ஸ் இதோ!

உணவு நிபுணர் உமா ரகுராமன்’ இன்ஸ்டாகிராமில் சரியான தோசை மாவுக்கான ரகசியங்களைப் பகிர்ந்து கொண்டார்.

author-image
WebDesk
New Update
dosa batter

Know the correct ratio to make perfect dosa batter chef shares

தோசை, தென்னிந்தியாவில் மக்கள் விரும்பி சாப்பிடும் மிகவும் பிரபலமான உணவு வகைகளில் ஒன்று.

Advertisment

புளித்த மாவிலிருந்து தயாரிக்கப்படும் சுவையான, மெல்லிய தோசை’ பொதுவாக உளுந்து மற்றும் அரிசி கலந்து தயாரிக்கப்படுகிறது. சாம்பார் மற்றும் தேங்காய் சட்னியுடன் பரிமாறப்படுகிறது.

சில நேரங்களில் வீட்டில் தோசை சமைப்பது கொஞ்சம் சிரமமாக இருக்கலாம், குறிப்பாக உங்களுக்கு சரியான நுணுக்கங்கள் தெரியாவிட்டால். எனவே உணவு நிபுணர் உமா ரகுராமன்’ இன்ஸ்டாகிராமில், சரியான தோசை மாவுக்கான ரகசியங்களைப் பகிர்ந்து கொண்டார்.

"உத்தபம், பணியாரம் அல்லது இட்லி செய்ய நீங்கள் அதே மாவை பயன்படுத்தலாம்" என்று ரகுராமன் கூறினார்.

ஸ்டெப் 1 – சரியாக கழுவுதல்

கீழே குறிப்பிட்டுள்ளபடி அரிசி மற்றும் உளுந்து இரண்டையும் பலமுறை கழுவுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்:

*ஒரு பாத்திரத்தில்’ 2.5 கப் இட்லி அரிசி/ புழுங்கல் அரிசி, 1/2 கப் பச்சை அரிசி எடுத்து ஒன்றாகக் கழுவவும்:

*மற்றொரு பாத்திரத்தில்1/2 கப் உளுத்தம் பருப்பு / உளுந்து, -1/2 தேக்கரண்டி வெந்தயம் எடுத்து ஒன்றாகக் கழுவவும்.

ஸ்டெப் 2 – சரியாக ஊறவைக்கவும்

– கழுவிய அரிசி கலவையை 3 கப் தண்ணீரில் ஊற வைக்கவும்.

– வெந்தயத்துடன் கழுவிய உளுந்தை 1.5 கப் தண்ணீரில் ஊற வைக்கவும்.

– முக்கிய குறிப்பு: நீங்கள் அரிசி மற்றும் பருப்புகளை ஊறவைக்கும் போது, ​​ அவை தண்ணீரில் தெளிவாக தெரிய வேண்டும்.

- அவற்றை ஒரு இரவு முழுவதும் அல்லது குறைந்தபட்சம் 4-5 மணி நேரம் ஊற வைக்கவும்.

ஸ்டெப் 3- சரியாக அரைக்கவும்

அரிசி மற்றும் பருப்பை தனித்தனியாக அரைக்கவும். ஊறவைத்த தண்ணீரைப் பயன்படுத்தி அவற்றை அரைக்கவும்.

குறிப்பு: மாவை அரைக்க 2.5 கப் தண்ணீர் (இதில் ஊறவைத்த நீரும் அடங்கும்). இது அரிசியின் தரத்தைப் பொறுத்து சிறிது மாறுபடும்

ஸ்டெப் 4- சரியாக கலக்கவும்

*அரைத்த உளுத்தம் பருப்பு மற்றும் அரிசி மாவை ஒரு பெரிய பாத்திரத்தில் மாற்றவும்.

*உப்பு - 1.5 டீஸ்பூன் (தேவைப்பட்டால் நீங்கள் பின்னர் சேர்த்துக் கொள்ளலாம்) மற்றும் 2 தேக்கரண்டி எள் எண்ணெய்(sesame oil) சேர்க்கவும். (எள் எண்ணெய் சேர்ப்பது தோசையின் சுவையை அதிகரிக்கும்)

*குறைந்தது 3-4 நிமிடங்களுக்கு உங்கள் கையால் மாவை கலக்கவும்.

*நீங்கள் நன்கு கலந்தவுடன், மூடி’ 6-8 மணி நேரம் அப்படியே வைக்கவும். குளிர்ந்த காலநிலையில் இது அதிக நேரம் எடுக்கும்.

செஃப் குறிப்பு: குளிர்காலத்தில் ரகுராமன் மாவு பாத்திரத்தை முழுவதுமாக ஒரு ஸ்டோல் அல்லது சால்வையால் மூடுவார்.

"மிருதுவான பேப்பர் ரோஸ்ட் தோசை செய்ய மாவுடன் சிறிது நீர் சேர்க்கலாம்" என்று உணவு நிபுணர் அறிவுறுத்தினார்.

இந்த குறிப்புகளை வீட்டில் முயற்சி செய்வீர்களா?

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle Kitchen
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment